/indian-express-tamil/media/media_files/F7AOE0JOqTPYDAA2gzVR.jpg)
சூடாமணி செய்யும் பரிகாரம்.. சௌந்தரபாண்டியை சிக்க வைக்க ஸ்கெட்ச் போட்ட சண்முகம்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சூடாமணி வீட்டில் இல்லாத நிலையில் எல்லாரும் பதற்றம் அடைய இன்று, சூடாமணி கோவிலில் என் பையன் சத்தியம் செய்த மாதிரி நான் உத்தமினு நிரூபிக்கணும் என்று வேண்டி கொண்டு 108 குடம் தண்ணீர் எடுத்து பிள்ளையாருக்கும் ஊற்றும் பரிகாரத்தை செய்கிறாள். ஒரு கட்டத்தில் பரிகாரத்தை செய்ய முடியாமல் தவளையை தவற விட அங்கு வந்த சண்முகம் தாங்கி பிடிக்கிறான்.
பிறகு உங்களுக்காக நான் பரிகாரத்தை செய்து முடிக்கிறேன் என்று சண்முகம் பிள்ளையாருக்கு தண்ணீர் ஊற்றி முருகன் சன்னதி முன்னாடி நின்று வேண்ட கோவிலில் மணி அடிக்க எல்லாரும் சந்தோசப்படுகின்றனர். அதன் பிறகு சண்முகம் நான்கு தங்கைகளுக்கும் ஒரு போனை வாங்கி கொடுத்து சனியனின் பேரனை கடத்த போறோம் என்று ஒரு திட்டத்தை சொல்கிறான்.
இதை தொடர்ந்து ரத்னாவும் கனியும் ஸ்கூலுக்குள் இருக்க வீரா வெளியில் காத்திருக்க சனியன் பேரனை அழைத்து செல்ல ஸ்கூலுக்கு வருகிறான். ரத்னா சனியனிடம் பேச்சு கொடுக்க கனி ஐஸ் கிரீம் சாப்பிடலாம் வா என்று சொல்லி சனியன் பேரனை அழைத்து கொண்டு கடைக்கு செல்ல அங்கு வெட்டுக்கிளியும் உடன்குடியும் சாமியார் வேடத்தில் காத்திருக்கின்றனர். அவங்க உனக்கு ஐஸ் கிரீம் வாங்கி தருவாங்க என்று சொல்லி அவர்களிடம் ஒப்படைத்து விட வீரா இதை போட்டோ எடுத்து கொள்கிறாள்.
அடுத்து கனியும் வீராவும் ஸ்கூலுக்கு வருகின்றனர், ரத்னா வெளியே வர சனியனை பார்த்து இன்னும் நீங்க போகலையா என்று கேட்க அவன் இன்னும் என் பேரன் வரல என்று சொல்ல ரத்னா எல்லாரும் போய்ட்டாங்களே, நான் கதவையெல்லாம் பூட்டிட்டு தான் வந்திருக்கேன் என்று ஷாக் கொடுக்கிறாள். வீரா உங்க பேரன் யாரோ இரண்டு சாமியார் கூட ஐஸ் கிரீம் சாப்பிட்டுட்டு இருந்தான், புதுசா இருக்கவே போட்டோ எடுத்தேன் என்று சொல்லி வீரா போட்டோவை காட்ட சனியன் ஷாக் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.