Advertisment
Presenting Partner
Desktop GIF

மாமியார் மீது வரதட்சணை கொடுமை புகார்: வீட்டில் வெடித்த நாத்தனார் சண்டை: அடுத்து என்ன?

ஜீ தமிழின் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Zee tamil seri3

சண்முகம், பரணி இடையே உருவான மோதல்.. சௌந்தரபாண்டி சதியால் நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் கடையை அடமானம் வைத்து நகை வாங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். சண்முகம் நகையுடன் கோவிலுக்கு தான் வருவான் என்பதை அறிந்த சௌந்தரபாண்டி, பாண்டியம்மா கோவிலில் நகையுடன் கோவிலுக்கு வெளியே காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிறகு சண்முகம் கோவிலுக்கு வந்து நகைகளை வைத்து பூஜை செய்யும் நேரத்தில் இந்த திருட்டு நகைகளையும் சேர்த்து வைத்து விடுகின்றனர், ஷண்முகம் அதை கவனிக்காமல் நகைகளை வீட்டில் கொண்டு வந்து வைக்கிறான். அதோடு சௌந்தரபாண்டி இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு போன் செய்து தர்மகத்தா கோவில் நகைகளை திருடுறாங்க, வீட்டில் போய் பாருங்க உண்மை தெரிந்து விடும் என்று சொல்ல போலீஸ் சண்முகம் வீட்டில் சோதனை போட முடிவு செய்கின்றனர்.

வீட்டில் பரணி இப்போ கடையை அடமானம் வைத்து நகை வாங்கணுமா என்று சண்முகத்திடம் அவன் என் தங்கச்சிக்காக நான் பண்ணுவேன், இதுல யாரும் தலையிட வேண்டாம் என்று பதிலடி கொடுக்கிறான். பரணி பேசுவதை அரைகுறையாக கேட்ட ரத்னா அண்ணன் தனக்கு நகை போடுவதில் பரணிக்கு விருப்பமில்லை என்று தவறாக புரிந்து கொள்கிறாள்.  இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோபத்தை கொட்டிய கௌதமுக்கு மதுமிதா கொடுத்த பதிலடி.. நடந்தது என்ன? நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட் அப்டேட்

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதமுக்கு ஆபிஸ் குறித்த உண்மைகள் தெரிந்து மீட்டிங்கை கூட்டிய நிலையில் இன்று, கௌதம் மீட்டிங்கில் எல்லாருக்கும் ஒரு நாள் டைம் கொடுக்கிறேன், அதுக்குள்ள எங்க தப்பு நடந்திருக்குனு கண்டுபிடிங்க என்று சொல்கிறான். 

இதையடுத்து கௌதம் வீட்டிற்கு டென்ஷனாக வர பாட்டி மதுமிதாவிடம் போய் பேக்கை வாங்கு என்று சொல்ல மதுவும் வாங்க போக கௌதம் கோபமாக கொடுக்கிறான். அடுத்து சாப்பிட கூப்பிட கௌதம் சாப்பாடு வேண்டாம் என்று ரூமுக்கு சென்று விடுகிறான். பாட்டி திரும்பவும் கூப்பிட சொல்ல மது ரூமூக்கு வந்து மீண்டும் கூப்பிட கௌதம் கோபப்பட்டு திட்டுகிறான்.இத்தனை நாளா நீங்க சொல்லி சாப்பிட்டேனா?

ஒரு முறை போனை கட் பண்ணா புரியாதா? திரும்ப திரும்ப போன் பண்ணுவீங்களா? என்று கோபப்படுகிறான். மறுபக்கம் மாயா தூக்கம் வராமல் தம் அடிக்க பால்கனிக்கு செல்ல ஜீவா எழுந்து வந்து விட சிகிரெட்டை தூக்கி போட்டு சமாளிக்கிறாள். இங்கே கௌதம் பசியில் தூக்கம் வரமால் சாப்பிட கிச்சனுக்கு போக மது அதை பார்த்து விட்டு சப்பாத்தியை சூடு பண்ணி கொடுக்கிறாள்.

அதன் பிறகு எதிரில் இருப்பவர்கள் என்ன சொல்றாங்கன்னு கூடவா காது கொடுத்து கேட்க மாட்டிங்க என்று கோபப்பட, கௌதம் தன் மீது தான் தவறு என்று மன்னிப்பு கேட்கிறான். அடுத்து ரூமுக்கு வந்ததும் மதுமிதா உங்க கிட்ட நானா பேச வரல, எல்லாம் பாட்டி சொல்லி தான் செய்தேன் என்று கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐஸ்வர்யா வைத்த ட்விஸ்ட்.. கைதாகும் அபிராமி, கார்த்திக் செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜெயிலுக்குள் அடைக்கப்பட்ட ஐஸ்வர்யா கார்த்தியை பழி வாங்கியே தீருவேன் என்று சபதம் எடுத்த நிலையில் இன்று, ஐஸ்வர்யாவை கோர்ட்டில் ஆஜர் படுத்த இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது, ஐஸ்வர்யா தரப்பில் வக்கீல் யாரும் இல்லாத நிலையில் அவள் என்னுடைய தரப்பு நியாயத்தை நானே சொல்றேன் என்று சொல்லி இவர்கள் சொல்வது அனைத்தும் பொய், நான் தீபாவை தள்ளி விட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்கிறாள்.

மேலும் என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினாங்க, அதை கொடுக்கவில்லை என்பதால் இப்படி போலியான கேஸ் போட்டு என்னை இங்க கொண்டு வந்து நிறுத்திட்டாங்க என்று மாற்றி பேச அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆஜராகி இவங்க தான் தீபாவை தள்ளி விட்டு இருக்காங்க.அதை அவங்களே குடும்பத்தாரிடம் ஒப்பு கொள்ளவும் செய்திருக்காங்க என்று சொல்ல நீதிபதி அதற்கான ஆதாரத்தை கேட்கிறார்.  ஆதாரம் இல்லை என்று இன்ஸ்பெக்டர் சொல்ல நீதிபதி ஆதாரத்தை சமர்ப்பிக்க சொல்லி விடுகிறார். இதனால் ஐஸ்வர்யா சொன்னது உண்மை போல் ஆகி விடுகிறது.

அதோடு இல்லாமல் ஐஸ்வர்யாவின் அம்மா ராஜேஸ்வரி வரதட்சிணை கேட்டு அபிராமி குடும்பம் கொடுமைப்படுத்துவதாக சொல்லி கம்பளைண்ட் கொடுக்க போலீஸ் அபிராமியை கைது செய்து அழைத்து செல்கிறது. மீனாட்சி கார்த்திக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல அதை கேட்டு அதிர்ச்சியும் கோபமும் அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment