Advertisment

டான்சராக வந்தவருக்கு சீரியல் வாய்ப்பு... மேடையில் கண் கலங்கிய நடிகை : அண்ணா சீரியலில் முக்கிய மாற்றம்

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ஒருவருக்கு சீரியல் நடிகையாக வாய்ப்பு கிடைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Anna Serial

அண்ணா சீரியல் சண்முகம்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று கிராண்ட் ஃபினாலே சுற்று நடைபெற்றது. இதில் டைட்டில் வின்னராக நவீன் - அக்ஷதா ஜோடி தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 10 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.

Advertisment

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் முதல் ரன்னர் அப்பாக இப்ராஹிம் அக்ஷிதா ஜோடியும், இரண்டாவது ரன்னர் அப்பாக விவேக் - கௌரி ஜோடியும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் லைஃப் சேஞ்சிங் மூமென்ட்டாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான ஜான் எட்வின் அப்பாவிற்கு ஒரு கடையை உருவாக்கி கொடுத்தனர். அதே போல் நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் போட்டியாளராக வந்த கௌரிக்கு அண்ணா சீரியலில் வீரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளனர். 

இது குறித்து அண்ணா சீரியலில் சண்முகம் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் மிர்ச்சி செந்தில் டான்ஸ் ஜோடி டான்ஸ் மேடையில் பேசிய நிலையில, அவரின் பேச்சை கேட்டு மகிழ்ச்சியடைந்த, கௌரி நான் உங்க சீரியலில் நடிக்க போறனா என்று கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் எனக்கு இது லைஃப் சேஞ்சிங் மூமென்ட் என்று தெரிவித்துள்ள அவர், நடிக்க பல இடங்களில் வாய்ப்பு தேடி சென்று நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜீ தமிழின் முக்கிய சீரியல்களில் ஒன்றான விரைவில் அண்ணா சீரியலில் வீராவாக கௌரியை பார்க்கலாம் என்பதால் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment