முகத்திரையை அகற்றிய ரியா... துப்பாக்கியுடன் புறப்பட்ட ஹீரோ; கல்யாணம் நடக்குமா?

கார்த்திகை தீபம் சீரியலில், தீபா போல் மாஸ்க் அணிந்து வந்த ரியா பற்றி அபிராமிக்கும் அம்பிகாவுக்கும் தெரிந்துவிட்டது.

கார்த்திகை தீபம் சீரியலில், தீபா போல் மாஸ்க் அணிந்து வந்த ரியா பற்றி அபிராமிக்கும் அம்பிகாவுக்கும் தெரிந்துவிட்டது.

author-image
WebDesk
New Update
Anna And skdh

முகத்திரையை அகற்றிய ரியா.. அம்பிகாவுக்கு தெரிய வந்த உண்மை, அடுத்து நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மண்டபத்தில் ரியா தீபா போல் மாறுவேடத்தில் இருக்க குடோனில் இருந்து தீபாவும் தப்பித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, அபிராமியின் உறவினர் ஒருவர் கல்யாணத்திற்கு வந்திருக்க அவர் அவசர வேலையாக செல்ல வேண்டி இருப்பதாக சொல்லி தீபாவை பார்க்க வேண்டும் என்று சொல்ல அபிராமி மைதிலி மற்றும் மீனாட்சியை கூப்பிட்டு தீபாவை அழைத்து வர சொல்கிறாள்.  இருவரும் தீபாவை கூப்பிட அவள் சும்மா சும்மா வர முடியாது என்று சத்தம் போட்டு துரத்தி விடுகிறாள், அவர்கள் அபிராமியிடம் விஷயத்தை சொல்ல அபிராமி உறவினரை சமாளித்து அனுப்பி வைக்கின்றனர். இதை தொடர்ந்து அம்பிகா உள்ளே நுழைய அபிராமி ரொம்ப நேரமா ஆள் இல் எங்க போய் இருந்த என்று கேள்வி கேட்கிறாள்.

உன் பையனுக்கும் தீபாவுக்கும் கல்யாணம், எதுவும் கொடுக்காமல் இருக்க முடியுமா? அதான் கிப்ட் வாங்க போய் இருந்தேன் என்று சொல்கிறாள். தீபாவுக்கு வாங்கிய ஜெயினை எடுத்து காட்டி இதை என் கையால் போட்டு விடணும் என்று சொல்ல ரியா அதிர்ச்சி அடைகிறாள். முடிந்த அளவுக்கு அம்பிகாவை நெருங்க  விடாமல் முயற்சி செய்கிறாள். இதனால் அம்பிகாவுக்கும் தீபா இப்படி பண்றவள் இல்லையே என்ற சந்தேகம் எழுகிறது,

Advertisment
Advertisements

இந்த சமயத்தில் இன்னொரு வயதான உறவினர் தீபாவை பார்க்க வேண்டும் என்று சொல்ல அபிராமி கூப்பிட வேறு வழியின்றி ரியா அந்த கிஃப்ட்டை வாங்கி கொண்டு ரூமுக்கு சென்று விடுகிறாள்.  அப்போது ரியா முகமூடியை கழட்டி ரம்யாவிடம் பேசி கொண்டிருக்க அந்த வழியாக வந்த அபிராமி இது மொத்தத்தையும் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். தீபா ரூபத்தில் இருப்பது ரியா தான் என்பதை அறிந்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சனியனை கொல்ல கிளம்பிய சண்முகம்.. முத்துபாண்டிக்கு வந்த சிக்கல் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் கோப்பெருந்தேவி கழுத்தில் தாலி கட்டியது போல் காட்டப்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  கோப்பெருந்தேவி கழுத்தில் தாலி கட்டியது சரவணன் தான் என்பது தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து சண்முகமும் அவனது தங்கைகளும் ஊருக்கு கிளம்பி வருகின்றனர், சண்முகம் மதுரையில் நடந்த விஷயம் எதுவும் பரணிக்கு தெரிய வேண்டாம் என்று தங்கைகளிடம் சொல்ல எல்லாரும் சேர்ந்து இங்கு நடந்த விஷயத்தை மூடி மறைத்து விடுகின்றனர்.

அடுத்து வெட்டுக்கிளி பாலக்காடு ஒயின் ஷாப்பில் சரக்கடித்து கொண்டிருக்க அங்கு சனியன் வர வெட்டுக்கிளி அவனை பார்த்ததும் துரத்தி கொண்டு ஓட சனியன் வெட்டுக்கிளியை தள்ளி விட்டு எஸ்கேப் ஆகிறான், இதன் பிறகு வெட்டுக்கிளி வீட்டிற்கு ஓடி வந்து விஷயத்தை சொல்ல நீ எனக்கு போன் பண்ணி இருந்தால் நானே அங்கு வந்து இருப்பேனே என்று திட்டுகிறான். 
அந்த முத்துப்பாண்டி தான் அப்பனை காப்பாற்ற சனியனை தப்பிக்க வைத்து இருக்கான் என்று கோபப்படுகிறான். 

அப்போது சூடாமணி முத்துப்பாண்டி அன்னைக்கு நம்ம கூட தான் இருந்தான், என்னை கொல்ல வந்தவனை பற்றி சொல்லி என்னை காப்பற்றியதும் அவன் தான், நீ அவனை போய் பாரு என்று சொல்ல சண்முகம் சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பி வருகிறான்.  இங்கே முத்துப்பாண்டி தனது பிஸ்டலை கழட்டி மீண்டும் சரி செய்து கொண்டிருக்க சண்முகம் அங்கு வந்து சனியனை தப்பிக்க வைத்து உன் அப்பனை காப்பாற்ற பாக்கறியா என்று கோபப்பட முத்துப்பாண்டி நீ சனியனை பிடித்து கொடு என் அப்பனுக்கு நான் தண்டனை வாங்கி தரேன் என்று சொல்கிறான்.

இதை கேட்டு ஷாக்காகும் சௌந்தரபாண்டி அவன் என்னை மாட்டி விட நினைக்கிறதுல ஒரு நியாயம் இருக்கு.. உன்னை போலீஸ் ஆக்குனதே நான் தான், நீ என்னையே ஜெயிலுக்கு அனுப்பனும்னு சொல்ற என்று கோபப்பட சண்முகம் முத்துபாண்டியை ரூமிற்குள் அடைத்து வைத்து விட்டு அவனது பிஸ்டலை எடுத்து சனியனை தேடி கிளம்புகிறான்.  பாக்கியம் அவனை தடுத்து நிறுத்த சனியன் ஒழுங்கா வந்து சாட்சி சொல்ல ஒத்துக்கிட்டா அவன் தப்பிச்சான், இல்லைனா அவன் உயிர் என் கையில் தான் என்று செல்கின்றான். இதனால் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: