இடியாப்ப சிக்கலான திரைக்கதை: கல்யாணம் நடக்குமா? நடக்காதா? ஜீ தமிழ் திருமண எபிசோடுகள்!

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் மற்றும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்.

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் மற்றும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
nk and Kp

கார்த்திகை தீபம் - நெஞ்சத்தை கிள்ளாதே

ரெடியான கல்யாண பத்திரிக்கை.. பீலான தீபா, வெளிவந்த கார்த்தியின் பிளான்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவை பார்க்க வந்த மாப்பிள்ளை கல்யாணத்துக்கு ஓகே சொல்லி ஷாக் கொடுத்த நிலையில் இன்று, கார்த்திக், தீபா கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் ஒவ்வொன்றாக நடக்க ஆனந்த் கல்யாண பத்திரிக்கை ரெடியாகி விட்டதாக சொல்லி கொண்டு வந்து கொடுக்க அபிராமி அதை பார்த்து சந்தோசப்படுகிறாள்.

இதையடுத்து தீபா பத்திரிகையை பார்க்கிறாள். கார்த்திக் மற்றும் நட்சத்திராவுக்கு திருமண பத்திரிகை அடித்த போது அதில் தீபா நட்சத்திரா பெயரை அடித்து விட்டு தனது பெயரை எழுதி அழகு பார்த்ததை நினைத்து பார்க்கிறாள். அடுத்து மாப்பிள்ளையாக வந்த ரமேஷ், கார்த்திக்கு தெரிந்தவன் என்பது தெரிய வருகிறது. இதன் தொடர்ச்சியாக ரம்யாவின் அப்பா விஸ்வநாதன் கார்த்தியை சந்தித்து நல்ல வேலை செய்தீங்க என்று நன்றி சொல்கிறான்.

மேலும் இதெல்லாம் உங்க ஏற்பாடு தான் என்பது மட்டும் ரம்யாவுக்கு தெரிய வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறார். அதன் பிறகு அபிராமி கோவிலுக்கு வர ரம்யாவும் பின் தொடர்ந்து வருகிறாள். அபிராமி பெண் சித்தரை சந்தித்து தாலியை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கி விட்டாள் கல்யாணம் நல்லபடியா நடக்கும் என நினைக்க ரம்யா இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

கௌதமுக்கு ஷாக் கொடுத்த மாயா.. கல்யாண விஷயத்தில் நடக்க போவது என்ன?

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா கர்ப்பம் என தெரிந்து சகுந்தலா ஷாக்கான நிலையில் இன்று, சகுந்தலா மாயாவை திட்டி நான் சொல்றத கேட்குறதா இருந்தா இந்த வீட்டில் இரு என்று வார்னிங் கொடுத்து ஜீவாவை கல்யாணம் செய்து கொள்ள சொல்கிறாள். 
கௌதமுக்கு கல்யாணம் ஆகாமல் இருந்ததுக்கு காரணமும் நான் தான், இப்போ கல்யாணம் ஆக போறதுக்கு காரணமும் நான் தான் என்று சொல்கிறாள்.

மறுபக்கம் ரேணுகா நீயும் கௌதமும் மீண்டும் சந்தித்தது தற்செயலா நடந்தது இல்ல, கடவுள் போட்ட முடிச்சு என்று சொல்ல மது அதை நம்பாமல் சென்று விடுகிறாள், அவள் காலேஜ் வந்ததும் நிச்சயம் முடிந்து விட்டது, ட்ரீட் வையுங்க என்று சொல்ல மது அப்செட் ஆகிறாள். அதன் பிறகு கௌதம் வீட்டிற்கு வர சகுந்தலா அதிர்ச்சியாக மாயா மீண்டும் ஜீவாவை கல்யாணம் செய்து கொள்வதாக சொல்கிறாள்.

அதை கேட்டு ஷாக் ஆகும் கௌதம் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறான். இங்கே ரேணுகா ஜோசியருக்கு போன் செய்து மதுவுக்கும் கௌதமுக்கும் கல்யாணம் நடக்குமா நடக்காதா என்று ஜோதிடம் பார்க்க சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: