Advertisment
Presenting Partner
Desktop GIF

மகளுக்காக உயிரை விட்ட அப்பா: மருமகளை தாக்கும் மாமனார்; உண்மை வெளி வருமா?

ஜீ தமிழின் கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் மற்றும் அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
KD ANsns

வைகுண்டத்தை எட்டி உதைத்த சௌந்தரபாண்டி.. பாண்டியம்மாவின் திட்டத்தால் நடக்கப்போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் பாண்டியம்மா ஒரு மூட்டை துணியை கொண்டு வந்து போட்டு இசக்கியை துவைக்க சொல்லிய நிலையில் இன்று, இசக்கி பாண்டியம்மா துணியை துவைக்க முடியாது என்று சொல்லி உள்ளே செல்ல பாண்டியம்மா அவளாகவே புடவையை கொளுத்தி விட்டு இசக்கி தீ வைத்ததாக சொல்லி வம்பு இழுக்கிறாள்.

பாக்கியம் இசக்கி அப்படி பண்ணியிருக்க மாட்டா என்று சொல்ல இசக்கியும் நான் கொளுத்தல என்று சொல்கிறாள். சௌந்தர பாண்டி பாண்டியம்மாவுக்கு சப்போர்ட் செய்து பேசி இசக்கியிடம் கோபப்படுகிறார். பிறகு சௌந்தரபாண்டி பாண்டியம்மாவிடம் நடந்த விஷயம் என்ன என்று கேட்க அவள் தனது திட்டத்தை சொல்லி வைகுண்டத்துக்கு போன் போட சொல்கிறாள். சண்முகத்துக்கு போன் போட்டா தானே பிரச்சனை பெருசாகும் என்று சௌந்தரபாண்டி கேள்வி கேட்க நான் சொல்றத செய் என சொல்கிறாள்.

பிறகு வைகுண்டத்துக்கு போன் போட்டு உன் பொண்ணு ஒழுங்கா வந்து கூட்டிட்டு போயிடு இல்லன்னா உயிரோடவே இருக்க மாட்டார் என்று எச்சரிக்கை கொடுக்க வைகுண்டம் பதறுகிறார். பிறகு பரணியிடம் விஷயத்தை சொல்ல அவள் சண்முகத்துக்கு தெரியாமல் இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என திட்டமிடுகிறாள். ஆனால் அதற்குள் மீண்டும் வைகுண்டத்துக்கு போன் போடும் சௌந்தரபாண்டி உன் பொண்ணோட உயிர் மேல உனக்கு அவ்வளவு தான் அக்கறையா என்று கேட்கிறான்.

வைகுண்டம் இதோ வரேன் டா என கிளம்பி செல்கிறார். வைகுண்டம் வரும் சமயத்தில் இசக்கியை வம்பு இழுத்து அவளை அடிக்க கை ஓங்க வைகுண்டம் அதை தடுக்க சௌந்தரபாண்டி அவரை எட்டி உதைத்து கீழே தள்ளுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மீண்டும் சுடர் கழுத்தில் தாலி கட்டிய எழில்.‌. மனோகரி கொடுக்கும் அதிர்ச்சி - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

நினைத்தேன் வந்தாய் சீரியலில் நேற்றைய எபிசோடில் எழில் கோபத்தால் சுடர் சோகமாக இருந்த நிலையில் இன்று, சுடர் சோகமாக இருக்க அங்கு வந்த அஞ்சலி ஏன் மா டல்லா இருக்கீங்க என்று கேள்வி கேட்கிறாள். முதலில் ஒன்றும் இல்லை என சொல்லும் சுடர் பிறகு இந்த வீட்ல யாருக்குமே என்ன பிடிக்கல என்று சொல்லி வருத்தப்பட அஞ்சலி நான் இருக்க உங்களுக்கு என்று ஆறுதல் சொல்வதோடு தன் மடியில் தலை வைத்து படுத்து கொள்ள சொல்கிறாள்.

அதைத் தொடர்ந்து கனகவல்லி சுடருக்கு தாலி பிரித்து போடுவதற்கான ஏற்பாடுகளை செய்து எழில் மற்றும் சுடரை கீழே கூப்பிடச் சொல்ல விஷயம் அறிந்து இருவரும் ஷாக் ஆகின்றனர். ஆனால் வேறு வழி இன்றி அமைதியாக கீழே வந்து என்னமா இது உங்க கிட்ட சொல்லவே இல்லை என்று எழில் கேட்க சொல்ல மறந்துட்டேன் என்று கனகவல்லி சொல்கிறாள்.

பிறகு தாலி பிரித்து போடும் நிகழ்ச்சி நடக்க எழில் சுடர் கழுத்தில் தாலி கட்ட அதைப் பார்த்த மனோகரி கடுப்பாகி இந்த தாலியை எப்படி கழட்டுறேன்னு பாரு என்று மனதுக்குள் சபதம் போடுகிறாள். அடுத்து ரூமுக்கு வந்த எழில் சுடரிடம் எதுக்கு நீ இதுக்கெல்லாம் ஒத்துக்கிட்ட என்று கோபப்பட அவள் எனக்கும் இதை பத்தி எதுவும் தெரியாது சார் என்று சொல்கிறாள்.

இனிமே அம்மா இந்த மாதிரி ஏதாவது பங்க்ஷன் ஏற்பாடு பண்ணா நீ ஒத்துக்க கூடாது அக்ரீமெண்ட்டை மனதில் வைத்து நடந்து கொள் என்று சொல்கிறான். இதை ஒட்டு கேட்ட மனோகரி சந்தோஷப்படுகிறாள். அதன் பிறகு ஒரு கொரியர் பாயை ஏற்பாடு செய்து அவன் மூலம் ஒரு பைலை சுடரிடம் கொடுக்க வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தீபாவை காப்பாற்றி உயிரை விட்ட தர்மலிங்கம்.. துங்கா கொடுத்த வார்னிங் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தர்மலிங்கத்தை வைத்து தீபாவை தனது இடத்திற்கு துங்கா வர வைத்த நிலையில் இன்று, துங்கா தீபாவை குத்த போக கடைசி நொடியில் கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு  தர்மலிங்கம் துங்காவை பிடித்து தீபாவை காப்பாற்றுகிறார்.சக்தி நர்ஸ் தீபாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேற துங்கா தர்மலிங்கத்தை கத்தியால் குத்தி விடுகிறான்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடையும் தீபா தர்மலிங்கத்தை காப்பாற்ற முயற்சி செய்ய தர்மலிங்கம் தீபாவை தப்பிக்க வைப்பதில் உறுதியாக இருக்கிறார். அதன் பிறகு அருண் மற்றும் கார்த்திக் என இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து விடுகின்றனர். ரத்த வெள்ளத்தில் இருக்கும் தர்மலிங்கத்தை மீட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய தர்மலிங்கம் இறந்துவிட்டதாக டாக்டர் அதிர்ச்சி கொடுக்கிறார்.

பிறகு மொத்த குடும்பமும் ஹாஸ்பிடலில் ஒன்று கூட தர்மலிங்கத்தின் உடலுக்கு இனியன் இறுதி சடங்குகளை செய்கிறான். பிறகு துங்கா கார்த்திக்கு போன் போட்டு தர்மலிங்கத்தை கொன்ற மாதிரி தீபாவையும் சொல்லுவேன் என மிரட்டுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment