/indian-express-tamil/media/media_files/QCZH1jjR8kzF2oMVArnZ.jpg)
கார்த்திக், தீபாவின் கல்யாணத்தில் நடிக்க போவது? வெல்ல போவது ரம்யாவா? தீபாவா? கார்த்திகை தீபம் சண்டே ஸ்பெஷல் எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக் தீபாவின் திருமணத்தை நோக்கி இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் இன்று சண்டே ஸ்பெஷலாக, மதியம் 1:30 மணி முதல் 4 மணிவரை இரண்டரை மணி நேர ஸ்பெஷல் எபிசோடாக ஒளிபரப்பாக உள்ளது. கார்த்திக், தீபாவின் திருமண வைபோகமாக இந்த ஸ்பெஷல் எபிசோட் அமைய உள்ளது.
ஏற்கனவே ரம்யா தனது அப்பாவுக்கு விஷத்தை கொடுத்துள்ள நிலையில் அடுத்து தீபா போல் மாஸ் அணிந்து கொண்டு மணமேடை ஏறி கார்த்திக் கையால் தாலி கட்டி கொள்ள திட்டமிட்டுள்ளாள். இன்னொரு பக்கம் ரூபாஸ்ரீ கோகிலா ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து ஐந்து கொலை ஆறுமுகம் என்பவனுக்கு ஏற்பாடு செய்து அவளை கடத்த திட்டமிடுகிறான்.
இந்நிலையில் அபிராமியின் தொழிலாக நடிகை அம்பிகா சிறப்பு விருந்தினராக இந்த கல்யாணத்திற்கு வருகை தர தீபா நன்றாக பாடுவாள் என்பதை அறிந்து அவளை பாட சொல்ல தீபாவும் பாட்டு பாடி அனைவரையும் கவர்கிறாள். ஏற்கனவே கார்த்திக்கு ரம்யாவின் மீது சந்தேகம் இருந்து வரும் நிலையில் ரம்யாவின் அப்பா விஸ்வநாதன் கார்த்திக்கு போன் செய்து ரம்யாவுக்கு மொத்த உண்மையும் உடைந்து விட்டது என்று சொல்ல கார்த்திக் ரம்யாவின் முகத்திரையை கிழித்து அவளை போலீசில் ஒப்படைக்கிறான்.
இறுதியாக தீபா சவால் விட்டிருந்தபடியே கார்த்திக் தீபாவிடம் தனது காதலை சொல்கிறான், இப்படியான நிலையில் அடுத்துப நடக்க போவது என்ன? தீபாவின் கழுத்தில் தாலி ஏறினால் அபிராமி உயிருக்கு ஆபத்து வருமா? மீண்டும் ரம்யாவால் பிரச்சனைகள் ஏற்படுமா என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.