/indian-express-tamil/media/media_files/mm7RLvd7JwmmO9cQHN9l.jpg)
தீபாவுக்குள் புகுந்த சக்தி.. பேரரில் உருட்டி விடப்பட்ட ரம்யா, அடுத்து நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் போலீஸ் பொருட்களை பறிமுதல் செய்து சென்றதால் பரிகாரத்தை அடுத்த நாள் தள்ளிவைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, அடுத்த நாள் காலையில் தீபாவும் ரம்யாவும் பரிகாரம் செய்ய உள்ள இடத்திற்கு வந்து சேர்க்கின்றனர். ரம்யா எல்லாம் ரெடியா என்று சைகையில் கேட்க போலி சாமியாரும் கண்ணை காட்டுகிறான். பிறகு தீபாவை பேரருக்குள் இறங்க சொல்ல திடீரென அவளுக்குள் ஒரு சக்தி இறங்க அவள் ரம்யாவை இறங்க சொல்ல ரம்யா அதிர்ச்சி அடைகிறாள்.
நீ செய்யணும் என்று சொல்ல ரம்யாவை அதட்டி அலற வைக்கிறாள். சாமியாரை சூடம் காட்ட சொல்ல அவரும் காட்ட அந்த சூடத்தை தட்டி விட அது அந்த ஆளின் கொண்டையில் பட்டு தீ பிடிக்க அந்த ஆள் அலறியடித்து ஓடுகிறான். இதையடுத்து ரம்யாவை கழுத்தை பிடித்து உள்ளே இறங்கி மூடி போட்டு மூடி தள்ளி விடுகிறாள்.
மறுபக்கம் தீபாவை தேடி வரும் கார்த்திக் ஒரு கட்டத்தில் சம்பவ இடத்திற்கு வந்து உருண்டு வரும் பேரரை பிடித்து திறந்து பார்க்க அதற்குள் ரம்யா இருக்கிறாள்.
கார்த்திக்கை பார்த்த ரம்யா இவனுக்கு உண்மை தெரிந்து விட்டதோ என்று பதற அவன், ஒரு கம்பெனியோட முதலாளி நீங்க இப்படி செய்யலாமா என்று கேட்க, கார்த்திக் பேசுவதை வைத்து அவனுக்கு உண்மை தெரியவில்லை என்று புரிந்து கொள்ளும் ரம்யா தீபாவுக்காக நான் தான் பரிகாரத்தை பண்ணேன் என்று பிளாட்டை மாற்றி நல்ல பேர் எடுக்க முயற்சி செய்கிறாள்.
பிறகு தீபாவை குறித்து விசாரிக்க ரம்யா கார்த்திக்கை கூட்டி கொண்டு மேலே வர அங்கு தீபா மயங்கி கிடக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.