Advertisment

அதிர்ச்சியில் சுருண்டு விழுந்த ஹீரோ: கல்யாணம் நடக்குமா? என்ன பிரச்னை?

ஜீ தமிழின் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
nibv

ரவுடியை நினைத்து அலறும் மனோகரி.. அதிர்ச்சி கொடுத்த எழில் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் எழில், மனோகரி ஆகியோர் நான்கு குழந்தைகளுடன் துணி எடுக்க வந்திருக்க மனோகரியை தேடி வந்த ரவுடியும் அங்கு காத்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

எழில் துணி எல்லாம் எடுத்து முடித்த பிறகு கிளம்பலாமா என்று கேட்க மனோகரி வெளியே இருக்கும் ரவுடியை நினைத்து பயப்படுகிறாள். பிறகு இவர்கள் காரில் கிளம்பி வர ரவுடியும் இதை நோட்டம் விடுகிறான். அடுத்து மனோகரி தன்னுடைய அப்பாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல அவர் பயப்படாத மனோகரி, முதலில் உன் கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும் அதுக்கப்பறம் அந்த ரவுடியை பார்த்து கொள்ளலாம் என்று சொல்கிறான்.

பிறகு வீட்டிற்கு வந்த நான்கு குழந்தைகளும் சாப்பிடாமல் சுடரை நினைத்து பீல் பண்ணுகின்றனர், எழில் சாப்பிட கூப்பிட்டும் சாப்பாடு வேண்டாம் துன்று சொல்கின்றனர். இதனால் எழிலும் வருத்தப்படுகிறான். இதை தொடர்ந்து எழில் மற்றும் மனோகரி என இருவரும் காரில் வெளியே வரும் போது எழில் ஓரிடத்தில் காரை நிறுத்தி விட்டு மனோகரியை வெயிட் பண்ண சொல்லி விட்டு சுடரை சந்தித்து ஒரு கிஃப்ட்டை கொடுக்கிறான். 

எழில் சுடரை சந்தித்து பேசுவதை தூரத்தில் இருந்து பார்த்த மனோகரி அதிர்ச்சி அடைகிறாள்.  இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட கௌதம்.. சகுந்தலா மீது வந்த சந்தேகம் - நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட் அப்டேட் 

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதமை பார்க்க ஸ்னேகா ஆபிஸ்க்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

சினேகா கௌதமை பார்த்து பேசி விட்டு போக இவன் நெஞ்சத்தை பிடித்து கொண்டு சரிந்து விழுகிறான். இதனால் சந்தோஷும் அவனது மனைவியும் சேர்ந்து கௌதமை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கின்றனர். கௌதமை பரிசோதனை செய்த டாக்டர் அவருக்கு பிபி ரொம்ப ஹெவியா இருக்கு, இன்னைக்கு டிஸ்சார்ஜ் செய்ய முடியாது என்று சொல்ல சகுந்தலா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். இன்னைக்கு சங்கீத பங்க்ஷன் இருக்கு, அதுக்கு கௌதம் கண்டிப்பா வரணும் என்று பேசுகிறாள். 

கௌதமும் நான் போறேன் என்று பெட்டில் இருந்து எழுந்து கொள்ள டாக்டர் அனுப்ப முடியாது என்று உறுதியாக சொல்லி விடுகிறார், பிறகு சந்தோஷிடம் கௌதமுக்கு இப்படி ஆக என்ன காரணம் என்று கேட்க அவன் சினேகானு ஒரு பொண்ணு வந்து போனதாக சொல்ல சகுந்தலாவும் ஷாக் ஆகிறாள். பிறகு ஸ்னேகா மீது பிளாக் மெயில் கேஸ் கொடுக்க போலீஸ் அவளை கைது செய்து அழைத்து செல்கிறது. 

சந்தோஷ்க்கு சகுந்தலா மீது சந்தேகம் வர அதை கௌதமிடம் சொல்ல அவன் நம்ப மறுக்கிறான். இனிமே உன்னை பத்தி கவலைப்பட போறது மதுமிதா மட்டும் தான் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment