ஆவியிடம் அறை வாங்கிய வில்லி: கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமான தங்கை; திருமண சிக்கல் தீருமா?

ஜீ தமிழின் நினைத்தேன் வந்தாய் மற்றும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

ஜீ தமிழின் நினைத்தேன் வந்தாய் மற்றும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee tamil Sdjh

நினைத்தேன் வந்தாய் - நெஞ்சத்தை கிள்ளாதே

மனோகரிக்கு மாறி மாறி விழுந்த அறை.. மாஸ் காட்டிய இந்து

Advertisment

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட எழில் வந்ததும் அம்மாவை கொன்னவனை பார்த்ததாக சொல்லிய நிலையில் இன்று, எழில் சுடருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்ல, வெளியே வந்த மனோகரி அந்த ரவுடிக்கு போன் போட்டு உன்னை வெளியூருக்கு தானே போக சொல்லி இருந்தேன், ஏன் போகல? உன்னால் பெரிய பிரச்சனையாகி போய்டுச்சு என்று கோபப்படுகிறாள்.

அதன் பிறகு இந்து சுடருக்குள் புகுந்து கொள்ள சுடர் மற்றும் இந்து என இருவரும் மாறி மாறி மனோகரியை அறைய அவள் அரண்டு போய் நிற்கிறாள். இதை தொடர்ந்து செல்வி என்னமா இது என்று கேட்க அவளுக்கு எப்படி இவ்வளவு பவர் வந்ததுன்னு தெரியல என்று சொல்கிறாள். இதையடுத்து எழில் வருத்தமாக உட்கார்ந்து பீல் பண்ண அங்கு வந்த இந்து சுடர் குரலில் அவனுக்கு ஆறுதல் சொல்கிறாள்.

நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்க அதான் நல்லது என்று சொல்வதோடு அங்கிருந்து இந்து போட்டோவை கழட்டி எடுத்து வர எழில் எதுக்கு போட்டோவை எடுத்திட்டு போற என்று கேட்கிறான். இந்த போட்டோ இங்க இருந்தா நீங்க பீல் பண்ணிட்டே இருப்பீங்க என்று சொல்ல எழில் எடுத்துட்டு போக வேண்டாம் என்று சொல்கிறான்.

Advertisment
Advertisements

பிறகு குழந்தைகள் தூங்கி கொண்டிருக்க சுடர் அங்கு வர குழந்தைகள் அம்மாவிற்கு ஆன மாதிரியே எங்களுக்கும் ஆகிடுமோனு பயமா இருக்கு, நீ எங்களை விட்டு போகாமல் இருப்பியா? போக மாட்டேன்னு சத்தியம் பண்ணு என்று கேட்க சுடரும் சத்தியம் செய்ய சுடர் மற்றும் குழந்தைகள் என ஐந்து பேரும் சந்தோசமாக இருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கர்ப்பமான மாயா.. கௌதமுடன் உறவை முடித்த மதுமிதா

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேற்றைய எபிசோடில் மதுமிதாவின் குடும்பத்தினர் எல்லோரும் அப்பார்ட்மெண்டில் பேசுவதை கேட்டு அப்செட் ஆகிய நிலையில் இன்று, ஜீவா மாயாவிடம் மன்னிப்பு கேட்பதற்காக அவளை தேடி ஸ்டுடியோ வருகிறான். மாயாவிடம் மன்னிப்பு கேட்க அவள் முட்டி போட்டு மன்னிப்பு கேட்க சொல்ல ஜீவாவும் அதேபோல் மன்னிப்பு கேட்கிறான். அதன் பிறகு காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லும் அவள் தனது ஷூவை கல்யாணம் செய்துக்கோ என்று சொல்கிறாள். இதனால் ஜீவா கடுப்பாகி அங்கிருந்து கிளம்பி விடுகிறான்.

அடுத்ததாக மாயா வீட்டுக்கு வர திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழ சகுந்தலா நாடியை பிடித்து பார்த்து ஷாக் ஆகிறாள். ஒரு கட்டத்தில் மாயா கர்ப்பம் என ஒப்பு கொள்கிறாள். இதனால் சகுந்தலா மாயாவை திட்டி ஒழுங்கு மரியாதையா ஜீவாவை கல்யாணம் பண்ணிக்க என்று சொல்கிறாள். அடுத்து ரேணுகா மற்றும் அபிராமி என இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு இடத்தில் இன்னொரு கார் மீது மோத அது கௌதம் கார் என்று தெரிய வருகிறது.

ரேணுகா ஒளிந்து கொள்ள மதுமிதா வெளியே வந்து கௌதமிடம் பேசுகிறாள். இதே இடத்தில் தான் முதல் முறையா நமக்குள்ள மோதல் தொடங்குச்சு. அதை இங்கேயே முடிச்சுக்குவோம் என்று சொல்லி நிச்சயதார்த்த மோதிரத்தை கழட்டி மதுமிதா கொடுக்க அதை வாங்கிக் கொண்ட கௌதம் தனது மோதிரத்தை கழட்ட முயற்சி செய்ய முடியாமல் போகிறது.

இந்த நேரத்தில் மாயா போன் செய்து கௌதமை உடனடியாக வீட்டுக்கு வர சொல்ல மதுமிதா மோதிரத்தை நீங்களே வச்சுக்கோங்க என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: