பிராடு குடும்பம்.. இது நமக்கு செட்டாகாது: ஹீரோ சொன்ன வார்த்தையால் வெடித்த மோதல்; அடுத்து என்ன?

ஜீ தமிழில் புதிதாக தொடங்கியுள்ள நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் நாயகியின் குடும்பத்தை பிராடு குடும்பம் என்று சொன்னதால் பிரச்சனை வெடித்துள்ளது.

ஜீ தமிழில் புதிதாக தொடங்கியுள்ள நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் நாயகியின் குடும்பத்தை பிராடு குடும்பம் என்று சொன்னதால் பிரச்சனை வெடித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Nenjathai Killathwe

நெஞ்சத்தை கிள்ளாதே

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதம் மதுமிதாவின் தோள் மீது கை வைத்து எக்ஸ் கியூஸ் மீ என்று லிப்ட்டுக்கு வழி கேட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், லிப்ட் ஒர்க் ஆகாத நிலையில் கௌதம் அப்போ நான் இந்த வழியா நடந்து தான் மேலே போகணுமா என்று கேட்க மதுமிதா உங்களால் முடியும்னா நீங்க பறந்து கூட போகலாம் என்று கலாய்க்கிறாள். இதையடுத்து கௌதம் கஷ்டப்பட்டு படியேற மதுமிதா வயசானங்க பையை வாங்கிட்டு ஏறலால்ல என்று சொல்ல கௌதம் அந்த பெண்ணின் பையை வாங்கி கொண்டு ஏறி செல்கிறார்.

கௌதம் கஷ்டப்பட்டு ஏறுவதை மதுமிதா கலாய்த்தபடியே பின்தொடர்ந்து செல்கிறாள். நான்காது மாடியை அடைந்ததும் மூச்சு வாங்க தொடங்க மதுமிதா இங்க தான் எங்க வீடு.. இருங்க தண்ணீர் கொண்டு வரேன் என்று உள்ளே செல்ல அதற்குள் இவன் டிரைவருக்கு போன் செய்து மாத்திரை கொண்டு வர சொல்கிறான். மாத்திரையுடன் வந்த ட்ரைவரை பார்த்த மதுமிதா இது கௌதம் என்பதை புரிந்து கொள்கிறாள்.

இதன் பிறகு ஆக்சிடெண்ட் விஷயமாக பேச வந்ததாக நினைத்து அவனை திட்ட இவன் ஜீவாவை பற்றி பேச இருவருக்கும் மோதல் உருவாக இந்த வீட்டிற்கு வந்தது என்னுடைய தப்பு தான் என்று திரும்பி வந்து விடுகிறான். அடுத்து மாயா ஜீவாவுக்கு போன் செய்து என் அண்ணன் உங்க வீட்டில் பேச போய் இருக்காரு என்று விஷயத்தை சொல்ல கௌதம் சந்தோஷ்க்கு போன் செய்து இந்த குடும்பமே பிராடு குடும்பம்.. இது நமக்கு செட்டாகாது என்று சொல்கிறான். 

Advertisment
Advertisements

பிறகு வீட்டிற்கு வந்த கௌதமிடம் மாயா ஜீவா வீட்டில் போய் பேசிட்டிங்களா? என்று கேட்க, அவன் அந்த குடும்பம் நமக்கு செட்டாகாது என்று சொல்ல மாயா கோபப்படுகிறாள். உடனே கௌதம் பையனை பார்த்து பேசிட்டேன். எனக்கு பிடிச்சிருக்கு என்று சொல்லி சமாளிக்கிறான். மறுபக்கம் வீட்டிற்கு வந்த ஜீவா கௌதம் வந்ததை பற்றி சொல்ல எல்லாரும் உண்மை அறிந்து ஷாக் ஆகுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Serial News Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: