Advertisment

சுவீட் கடை டூ அமானுஷ்யம்: 1000 எபிசோடுகளை கடந்த ஜீ தமிழ் சீரியல்: 3-வது பெரிய சீரியல்!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.

author-image
WebDesk
New Update
Ninaithale Inin

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று நினைத்தாலே இனிக்கும். வாரத்தின் 7 நாட்களும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

Advertisment

சுவீட் கடையை மையப்படுத்தி ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் தற்போது அமானுஷ்யம் நினைத்த சீரியலாக அதிரடியான கதைக்களத்துடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது நினைத்தாலே இனிக்கும் சீரியல் இன்றுடன் 1000-வது எபிசோடில் அடி எடுத்து வைத்து புதிய சாதனை படைத்துள்ளது.

செம்பருத்தி, ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களுக்கு அடுத்ததாக ஜீ தமிழின்  நினைத்தாலே இனிக்கும் சீரியல் இந்த பெரிய சாதனையை படைத்துள்ளது.  இந்த வெற்றிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர், சீரியல் குழுவினரும் இப்படியொரு சாதனையை படைக்க மக்கள் கொடுத்த ஆதரவு தான் காரணம் என்று மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

நினைத்தாலே இனிக்கும் சீரியலில் ஆனந்த் செல்வன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுவாதி ஷர்மா நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Zeetamil Serial Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment