Advertisment

ரூமுக்குள் சிக்கிக்கொண்ட ஜோடி: போலி சாமியார் உண்மை தெரிய வருமா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் மற்றும் நினைத்தேன் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Kd mjhgha

கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

வான்டடாக வந்து சிக்கிய சேகர்.. அபிராமியால் ரம்யாவுக்கு ரெடியான ஆப்பு

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் குல்பி கேட்க தீபா ரம்யாவிடம் உதவி கேட்டு குல்பியை வாங்கி வர வைத்து கார்த்திக்கு கொடுத்த நிலையில் இன்று, இருவரும் ஒன்று சேர்ந்து குல்பி சாப்பிட அதன் பிறகு ரம்யா வீட்டில் காலிங் பெல் அடிக்க சேகர் நிற்பதை பார்த்து ஷாக் ஆகிறாள், நீங்க கொடுத்த பணத்த சூதாட்டத்தில் விட்டுட்டேன். வெளியூர் போக பணம் கொடுங்க என்று கேட்க ரம்யா பணத்தை கொடுத்து திட்டி அனுப்புகிறாள். இதை ரம்யாவின் அப்பா பார்த்து விடுகிறார்.

பிறகு எதுக்கு பணம் கொடுத்த என்று கேட்க ஆபிசில் அர்ஜென்ட் செலவு என்று சொல்லி சமாளிக்கிறாள். அடுத்ததாக அபிராமி சூப்பர் மார்க்கெட் வந்திருக்க அங்கு கல்யாண வேலைகளை கவனிக்க ஆட்கள் வேண்டும் என்று பேசி கொண்டிருக்கிறாள். இதை கேட்ட சேகர் வெளியூர் போனால் செலவு ஆகும். இவங்க வீட்டிற்கு வேலைக்கு போய்ட்டா பணமும் கிடைக்கும், வீட்டுக்குள்ளேவே இருக்கலாம் என்று முடிவெடுக்கிறான்.

உடனே அபிராமியிடம் தனக்கு ஒரு வேலை போட்டு தர சொல்லி கேட்க அபிராமி அவனை வீட்டிற்கு அழைத்து கொண்டு கிளம்புகிறாள். மறுபக்கம் கார்த்திக் வீட்டிற்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகளிடம் சாமியார் கெட்டப்பே போலியா இருந்தா என்ன செய்வது என்று சொல்ல அவனை தாடி மீசை இல்லாமல் வரைந்து பார்க்கலாம் என்று முடிவெடுக்கின்றனர். 

Advertisment
Advertisement

பிறகு அவனை வரைந்தும் முடிக்க இந்த நேரத்தில் அபிராமி சேகருடன் வீட்டிற்கு வர ரம்யா இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இவனை வேலைக்கு எடுத்திருப்பதாக அறிமுகம் செய்து உள்ளே செல்ல ரம்யா நீ யார் வீட்டிற்கு வந்திருக்க தெரியுமா? இது கார்த்தியோட வீடு. உன்னை கூட்டிட்டு வந்தவங்க கார்த்தியோட அம்மா என்று சொல்லி திட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உச்சகட்ட டென்ஷனில் மனோகரி.. இந்துவின் ஏற்பாட்டால் நடக்கப்போவது என்ன?

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் அஞ்சலி சாப்பாடு கொண்டு வந்து கொடுத்த நிலையில் இன்று, எழில் மற்றும் சுடர் என இருவரும் ரூமுக்குள் சாப்பிட்டுக் கொண்டிருக்க மனோகரி உச்சகட்ட டென்ஷனில் வெளியில் தூக்கமின்றி தவிக்கிறாள். இதை பார்த்த செல்வி கதவின் மீது காதை வைத்து உள்ளே என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறாள்.

பிறகு செல்வி சத்தமே கேக்கல என்று சொல்லி மனோகரியின் டென்ஷனை அதிகமாக்குகிறாள். சாப்பிட்டு முடித்த இருவரும் உள்ளே அப்படியே தூங்கி விடுகின்றனர். அடுத்ததாக இந்து வேக வேகமாக வீட்டுக்கு வந்து தீபாவை தட்டி எழுப்ப அவள் ரெண்டு மணி நேரம் தூங்கி எழுந்து கொள்கிறேன் என்று சொல்கிறாள். இந்து அவளுக்காக காத்திருந்து மீண்டும் தட்டி எழுப்ப மீண்டும் கொஞ்ச நேரம் அவகாசம் கேட்டு தூங்கி விடுகிறாள். இப்படியே நேரம் ஓட ஒரு கட்டத்தில் இந்து தீபாவை எழுப்பி கனகவல்லி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள்.

தீபா கெட்டப் மாற்றி வருவதை பார்த்த கனகவல்லி வாங்க வாங்க உங்களுக்காக தான் காத்துக் கொண்டு இருக்கோம். எப்படியாவது ரூம் கதவை திறந்து விடுங்கள் என்று சொல்கிறாள். அடுத்ததாக தீபா பூஜை செய்து கதவைத் திறக்க எனக்கு பீட்சா வேண்டும் பர்கர் வேண்டும் ஜூஸ் வேண்டும் என ஒவ்வொன்றாக கேட்க அவற்றை ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர்.  பிறகு விபூதியை எடுத்து செல்வி முகத்தில் ஊதி விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment