/indian-express-tamil/media/media_files/xeyniFVppYwxxUJVwX56.jpg)
நினைத்தேன் வந்தாய் சீரியல்
மனோகரி உண்மை முகத்தை அறிந்த இந்து.. சூடு பிடிக்கும் கதைக்களம் –
ஜீ தமிழின் முக்கிய சீரியல்களில் ஒன்று நினைத்தேன் வந்தாய். நடிகர் கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக நடித்து வரும் இந்த சீரியல் முதலில் குடும்ப கதையாக தொடங்கிய நிலையில், தற்போது ஆவி மற்றும் அமானுஷ்யம் நிறைந்த சீரியலாக மாறியுள்ளது. இதனிடையே இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடரும் எழிலும் ரூமுக்குள் சிக்கி கொள்ள மனோகரி பயங்கர டென்ஷனில் இருந்து வந்த நிலையில் இன்று, ஆவியான இந்து சொன்ன ஐடியாவை பயன்படுத்தி தீபா ரூம் கதவை திறக்க, சுடரும் எழிலும் வெளியே வருகின்றனர். இதை தொடர்ந்து மனோகரி சுடரிடம் வந்து நீ வேணும்னே தானே இதையெல்லாம் பண்ண என்று கோபமாக பேசுகிறாள்.
அதன் பிறகு ராமையா கனகவல்லியிடம் குப்பை போட போகும் போது இந்த மோதிரம் கிடைத்ததாக, இந்துவின் மோதிரத்தை கொடுக்க அதை வாங்கி பார்த்து சந்தோசப்படுகிறாள். அதன் பிறகு மனோகரியும் அவளது அப்பாவும் தனியாக வந்து இந்த சுடரையும் நான்கு குழந்தைகளையும் சும்மா விட கூடாது, எதையாவது பண்ணனும் என்று பேசி கொண்டிருக்க பக்கத்தில் இருந்து எல்லாத்தையும் கேட்கும் இந்துவின் ஆன்மாவுக்கு மனோகரின் உண்மை முகம் தெரிய வருகிறது.
நீ இவ்வளவு கெட்டவளா என்று கோபப்படும் இந்து, மனோகரி மற்றும் அவரது அப்பாவை அறைய இருவரும் அடிப்பது யார் என்று தெரியாமல் அலறி நிற்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.