Advertisment

விபத்தில் சிக்கிய குழந்தை: உயிருக்கு போராடும் அப்பா; சந்தியாராகம், இதயம் சீரியல் எபிசோடு

ஜீ தமிழின் சந்தியா ராகம் மற்றும் இதயம் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Indiayam Santhia rag

உண்மையை சொன்ன ஜானகி.. உயிருக்கு போராடும் ரகுராம், கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட் - சந்தியா ராகம் வீகென்ட் எபிசோட் அப்டேட்

Advertisment

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜானகி ரகுராமிடம் உண்மையை சொல்ல முடிவெடுத்து கோவிலுக்கு அழைத்து செல்ல அந்த விஷயம் அறிந்து மாயா அதை தடுத்து நிறுத்த கிளம்பி வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, ஜானகி ரகுராமிடம் சீனு மாயா காதல் குறித்த ரகசியத்தை உடைக்கிறாள். உண்மையை சொல்லிய பிறகு ஜானகி திரும்பி கிடக்க ரகுராம் சுருண்டு விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். உடனே ஜானகி சத்தம் போட அங்கு வந்த மாயா அவரை ஜீப்பில் ஏற்றி கொண்டு சென்று ஹாஸ்ப்பிட்டலில் அட்மிட் செய்கிறாள்.

ரகுராமை பரிசோதனை செய்த டாக்டர் சீரியஸ் கண்டிஷன் என்று சொன்னதும் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது, ஜானகி மாயாவிடம் நடந்த விஷயத்தை சொல்ல மாயா நீங்க எதுக்கு பெரியப்பா கிட்ட இந்த விஷயங்களை சொன்னீங்க என்று கோபப்படுகிறாள். எல்லாரும் ரகுராம்க்கு இப்படி ஆனதால் அதிர்ச்சி இருக்க ஜானகி அவர் கண் முழித்தால் அவரது முகத்தில் எப்படி முழிப்பது என்று குற்ற உணர்ச்சியில் தவிக்கிறாள்.

அடுத்த நாள் ரகுராம் கண் விழிக்க டாக்டர் மாயா சரியான நேரத்தில் ஹாஸ்பிடலில் கொண்டு சேர்த்ததால் தான் அவரை காப்பாற்ற முடிந்ததாக சொல்கிறார். அடுத்து தன்னை பார்க்க வந்த மாயாவிடம் ரகுராம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க அவர் நீங்க பழையபடி திரும்பி வந்தா போதும் என்று சொல்கிறாள். எல்லாரும் ரகுராமை பார்க்க வந்தும் ஜானகி தயக்கத்தோடு தள்ளி நிற்கிறாள்.

இறுதியாக ரகுராமை பார்க்க வந்த ஜானகி என்னை மன்னிச்சிடுங்க, நான் உங்க கிட்ட இதையெல்லாம் சொல்லி இருக்க கூடாது என்று சொல்ல நீ என்ன சொன்ன ஜானகி எனக்கு எதுவுமே தெரியல என்று சொல்கிறார். பிறகு மாயா ஜானகியிடம் நீங்க சொல்ல முடிவெடுத்து பெரியப்பா கிட்ட சொல்லிடீங்க.. ஆனால் கடவுள் அது அவருக்கு தெரிய கூடாதுனு நினைக்கிறாரு, அதனால் இந்த விஷயத்தை இப்படியே விட்டுடுங்க என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாரதியின் முகத்தை பார்க்க முடியாமல் தவிக்கும் ஆதி.. பாரதியின் கேள்வியால் ஷாக்கான சாரதா

இதயம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆதி தமிழ் ரூமுக்கு சென்று தூங்கிய நிலையில் இன்று, மறுநாள் காலையில் பாரதி எழுந்து தமிழ் ரூமுக்கு வர அவன் தூங்கி கொண்டிருப்பதால் கீழே வந்து விடுகிறாள், சாரதாவும் எழுந்து வெளியே வராத நிலையில் காபி எடுத்து கொண்டு ரூமுக்குள் நுழைய லைட் கூட போடாமல் சாரதா உட்கார்ந்திருக்க பாரதி லைட் போட்டுட்டு என்னாச்சும்மா என்று கேட்க அவள் ஒன்றும் இல்லை என்று சமாளிக்கிறாள்.

உடம்பு முடியலையா என்று கேட்க சாரதா இல்லை என்று சொல்ல ஆதி ஏதாவது சொன்னாரா மா? அவரும் நேத்துல இருந்து சோகமாகவே இருக்காரு என்று கேட்க சாரதா எதுவும் சொல்லல என்று சொல்கிறாள். அதன் பிறகு ஆதி கீழே எழுந்து வர சாரதா அவனிடம் பேச ஆதி முகம் கொடுத்து பேசாமல் அதிர்ச்சி கொடுக்கிறான். என்கிட்ட பேசாதீங்க மா, உங்க மேல பயங்கர கோபத்தில் இருக்கேன் என்று சொல்கிறான்.

அதையடுத்து தமிழ் அங்கு வந்து ஆதியிடம் அப்பா என்னை ஸ்கூலில் விடுங்க என்று சொல்ல ஆதி எனக்கு வேலை இருக்கு அம்மா விடுவாங்க என்று சொல்கிறான். பிறகு தமிழும் ஆதியும் சாப்பிட உட்கார பாரதி பரிமாற்ற ஆதி மௌனமாகவே சாப்பிட என்னாச்சு என்று கேட்கிறாள். எதுவும் இல்லை என்று சமாளிக்கிறான்.

ஆதி ஆபிஸ்க்கு காரில் செல்ல பாரதியும் தமிழும் ஸ்கூட்டியில் ஸ்கூலுக்கு செல்ல ஒரு சிறு விபத்தில் சிக்கி கீழே விழ ஆதிக்கு இதயம் படபடவென துடிக்கிறது, இதையடுத்து பாரதி, தமிழ் அடிபட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உங்கள தனியா விட்டு இருக்க கூடாது என்று வருத்தப்படுகிறான். பிறகு நைட் தூக்கம் வராமல் தவிக்கும் ஆதி கண்ணாடியில் தன்னை பார்த்து நடந்த விஷயங்களை நினைத்து கண் கலங்குகிறான்.இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment