/indian-express-tamil/media/media_files/T3DKNRh012aQXSKHPUSh.jpg)
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்டுடன் மக்களை கவர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் பக்தி பாடல்கள் சுற்று நடைபெற உள்ளது. போட்டியாளர்கள் சோலோவாகவும் ஜோடியாக இணைந்தும் பக்தி பாடல்களை தேர்வு செய்து பாட உள்ளனர். இந்த பக்தி பாடல்கள் ரவுண்ட் குறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இந்த ரவுண்டில் முழுமையாக நடந்தது என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது பக்தி பாடல்களை பாடி பெரிய அளவில் பாப்புலரான வீரமணி ராஜு, மஹாலிங்கம் மற்றும் மாலதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். முகேஷ், சரத், ஸ்வேதா, விஜய் லோஷன், சரண், இந்திரஜித் ஆகியோர் கோல்டன் ஷவரை தட்டி செல்ல ஜெய பார்கவி, மகிழன் மற்றும் அமன் ஆகியோர் பிளாட்டினம் பெர்பாமன்ஸ் ஷவரை பெற்றுள்ளனர்.
ரியல் பெருமாள் சிலை, அம்மன் கெட்டப், அய்யப்பன் கெட்டப் என பிரம்மிக்க வைக்கும் வேடங்களில் பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளனர். பாடலை கேட்பவர்கள் சாமி வந்து ஆடும் அளவிற்கு பவர்புல் பெர்பாமன்ஸ் கொடுத்துள்ளார் சௌமியா. மொத்தத்தில் பிரம்மாண்டத்தின் இன்னொரு பரிமாணமாக இந்த பக்தி பாடல்கள் சுற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.