Advertisment

தீபா Vs கீதா... உண்மை அறிந்த மாமியார்; கடத்தல் ப்ளான் நடக்குமா?

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் மற்றும் அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
anna karthigai deepam Serial

தாலியை கட்ட சொன்ன அபிராமி.. உண்மையை உடைத்த அபிராமி, அடுத்து நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி குடும்பத்துடன் கோவிலுக்கு வந்திருக்கும் நிலையில் இன்று, தீபாவும் நர்ஸ் சக்தியும் கோவிலுக்குள் வந்து ஒளிந்து கொள்கின்றனர். இன்னொரு பக்கம் அபிராமி தாலியை எடுத்து கார்த்திக்கிடம் கொடுத்து தீபா கழுத்தில் கட்டுப்பா என்று சொல்ல கார்த்திக், கீதா ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதனை தொடர்ந்து கார்த்திக் வேறு வழியின்றி இது தீபா இல்ல தீபா மாதிரியே இருக்கிற கீதா என்ற உண்மையை உடைக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். தீபா எங்க இருக்கா என்றே தெரியவில்லை என்று சொல்ல அனைவரும் பேரதிர்ச்சி அடைகின்றனர்.  அதன் பிறகு அபிராமி கீதாவிடம் கார்த்திக் என்னை காப்பாற்ற தான் இப்படி பண்ணி இருக்கான். நீ தீபானு நினைச்சி தான் இப்படி பண்ணிட்டேன் என்று சொல்லி மன்னிப்பு கேட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறாள்.

இதே கோவிலில் தீபாவும் நர்ஸ் சக்தியும் ஒளிந்திருக்க கார்த்திக் அவர்களை பார்ப்பானா என்ற பில்டப் எகிற பார்க்காமல் மிஸ் ஆகி விடுகிறது. இன்னொரு பக்கம் துங்கா ஆட்டோவை வழி மறித்து எங்கே அவங்க என்று விசாரிக்க ஆட்டோ ட்ரைவர் அவங்க பாதியில் இறங்கி விட்டதாக சொல்லி சமாளித்து மீண்டும் திரும்பி வந்து கோவிலில் இருந்து இவர்களை அழைத்து செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இசக்கியை கடத்த திட்டமிடும் பாண்டியம்மா.. ஷண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி முத்துபாண்டி, இசக்கியை பிரிப்பதில் கவனமாக இருப்பதால் இதை சாதகமாக வைத்து பாண்டியம்மா ஒரு புது திட்டத்தை தீட்டிய நிலையில் இன்று, பாண்டியம்மா அடியாட்களை வர வைத்து நான் சொல்ற ஒருத்தியை கடத்தணும் என்று சொல்கிறாள்; அதை தொடர்ந்து அடியாட்கள் டொனேஷன் கேட்பது போல் வீட்டிற்குள் வர அப்போது இசக்கியை கை காட்டி இவளை தான் கடத்தணும் என்று சைகையில் காட்டுகிறாள். 

பிறகு பாண்டியம்மா பேப்பர் படித்து கொண்டிருக்கும் போது இந்த ராசிக்கார பொண்ணுங்க இந்த கோவிலுக்கு போய் விளக்கு போட்டா நல்லது என்று படிக்க இசக்கி அது உண்மை என நினைத்து நான் போய் விளக்கு போடுறேன் என்று முடிவெடுக்கிறாள். பிறகு பாண்டியம்மா பரணிக்கு போன் செய்து ரத்னாவையும் விளக்கு போட வெங்கடேஷுடன் அனுப்பி வைக்க சொல்கிறாள். 

பரணி நான் போய் விளக்கு போடலாமா என்று கேட்க பாண்டியம்மா சூடாமணி இறந்து போனதால் நீ போட கூடாது என்று சொல்கிறாள்.

இதை தொடர்ந்து பாக்கியம் முத்துபாண்டியிடம் இசக்கியை கோவிலுக்கு அழைத்து செல்ல சொல்ல அவன் தனியாக வந்து இசக்கியிடம் நான் வேலைக்கு போகணும்ல என்று கெஞ்ச இசக்கி சரி மா நான் மட்டும் போயிட்டு வரேன் என்று சொல்கிறாள். இதை தொடர்ந்து இசக்கி கோவிலுக்கு கிளம்ப ரவுடிகளும் அவளை கடத்த தயாராகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment