பரோலில் வந்த அம்மா, பயந்து ஓடிய மகள்: திருட்டுப்பழி தீர்க்கப்படுமா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் அண்ணா, நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

ஜீ தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் அண்ணா, நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
zee tmail Anna NK

பரோலில் வெளியே வந்த சூடாமணி.. பாண்டியம்மாவுக்கு விழுந்த அறை

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சூடாமணி ஜெயிலர் அம்மாவிடம் பரோல் கேட்ட நிலையில் இன்று, ஜெயிலர் அம்மா முதல் முறையாக நீங்க பரோல் கேட்டு இருக்கீங்க, ரிஸ்க் எடுத்து நான் பரோல் கொடுக்கறேன். உங்க கூட எந்த போலீசையும் நான் அனுப்பல.. நீங்களே பரோல் முடிந்ததும் ஜெயிலுக்கு வந்துடனும் என்று சொல்ல சூடாமணி சம்மதம் சொல்கிறாள்.

Advertisment

மறுபக்கம் சிவபாலன் பரணியின் சர்டிபிகேட்டை கொண்டு வந்து கொடுக்க சண்முகம் என் தங்கைகளுக்கான நான் என்ன வேணா பண்ணுவேன் என்று சொல்ல திருந்தாத உன்னோட என்னால் இருக்க முடியாது நான் அமெரிக்கா போறேன் என்று பரணி சொல்கிறாள். இதையடுத்து சண்முகம் நீ உன் விருப்பப்படி போ, ஆனால் நீ போகுற வரைக்கும் இந்த விஷயம் வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்ல பரணி சரி என்று சம்மதிக்கிறாள்.

அதையடுத்து முதல் முறையாக சூடாமணி கலர் புடையில் தயாராகி வெளியே வர ரெடியாக பாண்டியம்மா அவளை பார்த்து என்னடி கலர் புடவையில் எங்க கிளம்பிட்ட.. நீ வெளியே போனால் என் தம்பி உன்னை உயிரோட விட மாட்டான்.. உன்னால் ஒன்னும் செய்ய முடியாது என்று சொல்ல பளாரென பாண்டியம்மாவை அறையும் சூடாமணி நான் உத்தமினு நிரூபிக்க என் புள்ள இருக்கான் என்று சொல்லி வெளியே வருகிறாள்.

அடுத்து முகத்தை மறைத்து கொண்டு திருச்செந்தூர் வந்து சேரும் சூடாமணி பழைய நினைவுகளை நினைத்து பார்க்கிறாள். முருகன் கோவிலையும் அங்கு பரணி சண்முகம் சேர்ந்து இருக்கும் பேனரையும் பார்த்து சந்தோசப்படுகிறாள். அடுத்து வீட்டிற்கு வந்து பார்க்க வீடு பூட்டி இருப்பதை பார்க்கிறாள். கனி வெளியே வந்ததும் அவளை பார்த்த சூடாமணி நீ கனி தானே என்று கேட்க கனி வந்திருப்பது கன்னியாகுமரி காருங்க என்று நினைத்து ஓடி போய் கதவை சாற்றி கொள்ள சந்தோசத்துடன் வந்த சூடாமணி வருத்தம் அடைகிறாள்.

Advertisment
Advertisements

அடுத்து கனி இந்த விஷயத்தை ரத்னாவிடம் சொல்ல ரத்னா பரணியிடம் சொல்ல பரணி அந்த தகவலை சண்முகத்துக்கு சொல்கிறாள். நான்கு பேரும் புதுசா வந்திருப்பது யார் என்று தெரியாமல் குழப்பமடைகின்றனர், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மது குறித்து தெரிய வந்த உண்மை.. மீண்டும் மோதலில் முடிந்த பேச்சுவார்த்தை

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதம் மாயாவிடம் மாப்பிளையை பார்த்து பேசிட்டேன்.. நல்ல பையனா தான் இருக்கான் என்று சொல்லிய நிலையில் இன்று, ஜீவா கௌதம் தனக்கும் மாயாவுக்கும் கல்யாணம் பேச வந்ததாக விஷயத்தை சொல்ல உடனே அம்மா உன்னால் ஒரு நல்ல விஷயமாவது நடக்குதா என்று மதுவை பிடித்து திட்டுகிறாள். இதனால் மது என்னால் எதுவுமே நல்லதா நடக்கல என்று பீல் செய்ய அப்பா அவளுக்கு ஆறுதல் சொல்கிறார்.

மறுபக்கம் ட்ரைவர் மது மேல எந்த தப்பும் இல்ல என் மேல தான் தப்பு என்று சொன்னதும் கௌதம் பீல் பண்ண சந்தோஷ் மது நல்ல பொண்ணு தான் டா என்று சப்போர்ட் செய்து பேசுகிறான். அடுத்து மாயா தனது அம்மாவிடம் ஜீவா பற்றி பேசி கொண்டிருக்க அதை பார்த்த கௌதம் இன்னும் பையன் கிட்ட பேசவே இல்லையே என்று சொல்லிய பொய்யை நினைத்து கவலைப்படுகிறான்.

அடுத்து மது ஜீவாவிடம் காதல் குறித்து கேட்க நல்ல பொண்ணு தான், ஆனால் பிடிவாத குணம் ஜாஸ்தி என்று சொல்கிறான். அடுத்து கௌதம் மீண்டும் மதுவிற்கு போன் செய்து கல்யாணம் குறித்து பேச முயற்சி செய்ய இருவரும் மீண்டும் பழைய விஷயங்கள் பற்றி பேச இந்த முறையும் பேச்சு  வார்த்தை மோதலில் முடிகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: