ரவுடியாக மாறிய போலீஸ் முத்துப்பாண்டி... மணப்பெண் கடத்தல் : அண்ணா ஆக்ஷன் என்ன?

முத்து பாண்டி சௌந்தரபாண்டியை சந்தித்து ரத்னாவை தூங்கியாச்சு என்று சொல்ல அப்பா மகனை பாராட்டுகிறார்

முத்து பாண்டி சௌந்தரபாண்டியை சந்தித்து ரத்னாவை தூங்கியாச்சு என்று சொல்ல அப்பா மகனை பாராட்டுகிறார்

author-image
WebDesk
New Update
Anna Serial

tamil Serial ''Anna''

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியல் நேற்று எபிசோட் சண்முகம் வைகுண்டம் மற்றும் வெட்டுக்கிளி என மூவரையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவேன் என மிரட்டி ரத்னாவை முத்துப்பாண்டி கடத்திச் சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Advertisment

வெட்டுக்கிளி சண்முகத்தை எழுப்பும் முயற்சி செய்ய சண்முகம் கண் விழிக்காமல் இருக்கிறார். அப்போது லேசாக கண் திறக்கும் வைகுண்டம் சண்முகத்தை எழுப்ப எடுத்த சத்தம் போட்டும் கண் முழிக்காமல் இருக்கிறான். மறுபக்கம் வெளியே ரவுடிகள் காவலுக்கு நிற்கின்றனர். அப்போது முத்துப்பாண்டி மாப்பிள்ளை கோலத்தில் வந்து எங்கடா அவ என்று கேட்க பிறகு ரத்னாவுக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அங்கு வந்த முத்துப்பாண்டி கல்யாணத்திற்காக எடுத்த புடவையை கொடுத்து இதனை கட்டிக்கிட்டு என் பக்கத்துல வந்து உட்கார்ந்து தாலி வாங்கிக்கணும் என்று மிரட்டுகிறான். மேலும் அங்க நாலு பேரு இவ்வளவு நாளா முத்துப்பாண்டி பிடிக்காதுன்னு சொல்லிட்டு இப்ப என்ன ஆச்சு என்று கேட்பார்கள் அப்போ எனக்கு எங்க மாமாவை பிடிக்கும் எங்க அண்ணனுக்கு தான் பிடிக்காது என்று சொல்ல வேண்டும் என மிரட்டுகிறான்.

அடுத்து முத்து பாண்டி சௌந்தரபாண்டியை சந்தித்து ரத்னாவை தூங்கியாச்சு சொன்னா மாதிரி அவ மண மேடைக்கு வந்து என் பக்கத்துல உக்காந்து தாலி கட்டிக்குவா என்று சொல்ல நீ என் புள்ள என்பதை நிரூபிச்சிட்ட என்று பாராட்டுகிறார். அதனைத் தொடர்ந்து பரணி மணமேடையில் வந்து உட்காருகிறாள்.

Advertisment
Advertisements

இங்கே வீட்டில் சண்முகம் கண் விழிக்க வைகுண்டம் விஷயத்தை சொல்கிறார். இதை கேட்டு கோபப்படும் சண்முகம் கட்டை அவிழ்க்க முயற்சி செய்கிறார். ஆனால் முடியாமல் போவதால், முருகனை வேண்டிக்கொண்டு கந்த சஷ்டி பாடலை படிக்கிறான். மறுபுறம் ரத்னா வேனில் இருந்து இறங்கி மணமேடைக்கு வர இங்கே முருகன் அருளால் சண்முகம் கட்டு அவிழ தொடங்குகிறது.

இதனால் சீரியலில் அடுத்து என்ன நடக்கும், சொன்னபடி ரத்னா, பரணி திருமணம் நடைபெறுமா என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் போலீஸ் அதிகாரியான முத்துப்பாண்டி இப்படி ரவுடிகளை வைத்து விருப்பமில்லாத பெண்ணை எப்படி கடத்த முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனாலும் அண்ணா சீரியலுக்கு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: