/indian-express-tamil/media/media_files/AgiqKACIX4q4HkHVvDhQ.jpg)
அண்ணா சீரியல்
மொத்தமாக உடைந்த ரகசியம்.. சௌந்தரபாண்டியால் ஏற்பட்ட திடீர் திருப்பம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பாக்கியத்தை அடிக்க இசக்கி நீதி கேட்க சௌந்தரபாண்டி ஓடிகாலி மகளே என்று அவமானப்படுத்திய நிலையில் இன்று, சௌந்தரபாண்டி அம்மாவை பற்றி தப்பா பேசியதும் கொதிக்கும் இசக்கி என் அண்ணன் கிட்ட சொல்லிடுவேன் என்று ஆவேசப்பட உன் அண்ணன் என்ன பண்ணிடுவான்? தலையை சீவிடுவானா என்று கேள்வி கேட்கிறார்.
உங்க தலையை சீவ என் அண்ணன் எதுக்கு நானே போதும் என்று இசக்கி சொல்ல, என் தலையை சீவுவியா போடி உள்ளவே கிட என்று சௌந்தரபாண்டி இசக்கியை ரூமுக்குள் தள்ளி பூட்டு போடுகிறார். இதை பார்த்த பாக்கியம் வைகுண்டத்திற்கு போன் செய்து நடந்த விஷயத்தை சொல்கிறாள். இதனால் ஆவேசமடையும் சூடாமணி என் பொண்ணு மேலயா கையை வச்சான் என்று கோபப்பட்டு கிளம்பி வருகிறாள்.
வீட்டு வாசலில் நின்று டேய் சௌந்தரபாண்டி என் பொண்ணு மேலயாடா கையை வச்சா உன்னை சும்மா விட மாட்டேன் என்று கொதிக்க, இசக்கி அம்மா வந்திருக்காங்க என்று சந்தோசப்படுகிறாள். பாக்கியம் வேண்டாம் மதினி அமைதியாக இருங்க என்று சொல்ல அத்தைக்கும் அம்மா யாருனு தெரிந்து இருக்கு என்று நினைக்கிறாள். அதன் பிறகு இசக்கியை திறந்து விட வெளியே வந்த அவள் சூடாமணியை பார்த்து நீங்க தான் என் அம்மாவா என்று கட்டிப்பிடித்து கண் கலங்குகிறாள்.
பின்னாடியே ரத்னா நிற்க அவளுக்கும் சூடாமணி தான் அம்மா என்ற உண்மை தெரிய வருகிறது. பிறகு வீட்டிற்கு வந்த இவர்கள் சூடாமணி மடியில் படுத்து நீங்க எங்களை விட்டு எங்கேயும் போகாதீங்க என்று பேசி கண் கலங்குகின்றனர். சூடாமணி உங்களுக்காக தான் ஜெயிலில் இருக்கேன் என்ற விஷயத்தை சொல்ல இதை வீராவும் கனியும் கேட்டு விட மொத்த பெண்களுக்கும் சூடாமணி குறித்த உண்மை தெரிய வந்து விடுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.