ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல் நீதானே எந்தன் பொன்வசந்தம். இந்த தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர் தர்ஷனா. குன்னூரில் பிறந்து வளர்ந்தவர். சென்னையில் பல் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் போது, சில போட்டோஷூட்களை நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்ட போட்டோக்களை பார்த்து தேடி வந்த வாய்ப்புத் தான் இந்த நீ தானே என் பொன்வசந்தம் சீரியல். இந்த சீரியலின் மூலம் இவருக்கு தமிழக மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் இவர் அனுவாகவே குடிகொண்டு விட்டார் .சூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் செம ஜாலியாக கொண்டாடும் போட்டோக்களையும் வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
Advertisment
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"