Advertisment

ஆந்திராவில் புள்ளியிடப்பட்ட 2 லட்சம் ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலங்கள், உழவர்களுக்கு எப்போது செல்லும்?

ஆந்திரப் பிரதேசத்தில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே சரியான உரிமையாளரை அறியப்படாத, புள்ளியிடப்பட்ட நிலங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் நிரந்தர மறுஒப்படைப்பு செய்ய அடையாளம் காணப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
andhra pradesh news, y s jaganmohan reddy, ஆந்திரப் பிரதேசம், புள்ளியிடப்பட்ட நிலங்கள், ஜெகன்மோகன் ரெட்டி, ysrcp, andhra government, land disputes, india news, express explained, current affairs

ஆந்திராவில் புள்ளியிடப்பட்ட 2 லட்சம் ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலங்கள், உழவர்களுக்கு எப்போது செல்லும்?

ஆந்திரப் பிரதேசத்தில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே சரியான உரிமையாளரை அறியப்படாத, புள்ளியிடப்பட்ட நிலங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் நிரந்தர மறு வரையறை செய்ய அடையாளம் காணப்பட்டுள்ளன.

Advertisment

ஆந்திரப் பிரதேச அரசு மாநிலத்தில் உள்ள ‘புள்ளியிடப்பட்ட நிலங்களை’ தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலங்களை விற்கும் அல்லது அடமானம் வைக்கும் முழு உரிமையையும் அதை பயிர் செய்து வரும் நிலங்களுக்கு சொந்தமான விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தில், ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே சரியான உரிமையாளரை அறியப்படாத நிலங்களாக இருந்த புள்ளியிடப்பட்ட நிலங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் நிரந்தர ஒப்படைப்பு செய்ய அடையாளம் காணப்பட்டுள்ளன.

புள்ளியிடப்பட்ட நிலங்கள் என்ன வகையான நிலங்கள்?

புள்ளியிடப்பட்ட நிலங்கள் சர்ச்சைக்குரிய நிலங்களாகும். அதற்கென தெளிவான உரிமை கோருவதற்கான ஆவணங்கள் இல்லை. பொதுவாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் அரசாங்கத்தின் வருவாய்த் துறையினர் நிலத்தின் மீது உரிமை கோருகின்றனர்.

இந்த நிலங்கள் புள்ளி நிலங்கள் என்று அழைக்கப்பட்டன. ஏனெனில், ஆங்கிலேயர் காலத்தில், நில உரிமை கணக்கெடுப்பு மற்றும் நிலப் பதிவேடுகளை மறுஒப்படைப்பு செய்தபோது, ​​அரசுக்குச் சொந்தமான மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் வருவாய் அதிகாரிகள், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் உரிமை கோரினால் அல்லது உரிமையை தெளிவாக நிறுவ முடியாவிட்டால், ஆவணத்தில் உரிமையாளர் இடத்தில் புள்ளிகளை இடுகிறார்கள்.

அதாவது, ஆந்திராவில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே சரியான உரிமையாளரை அறியப்படாத நிலங்களாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. இவை 'புள்ளியிடப்பட்ட நிலங்கள்' என வகைப்படுத்தப்பட்டு இருந்தன.

இந்த நிலங்களின் உரிமைச் சர்ச்சைகள் எப்படி உருவானது?

நில உரிமையாளர்கள் தங்கள் வாரிசுகள் அல்லது குழந்தைகளுக்கு நிலத்தின் மீதான தெளிவான உயில்களை விட்டுச் செல்லவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் நிலத்தின் மீது உரிமை கோருவதால் தகராறு ஏற்பட்டதால் இந்த சர்ச்சைகள் எழுந்திருக்கலாம். மேலும், நிலம் அரசுக்கு சொந்தமானது என்று அரசாங்கத்தால் கருதப்படலாம். ஆனால், அவை தனியார் தரப்பினரின் ஆக்கிரமிப்பில் இருந்தது.

கேள்விக்குரிய சில நிலப் பதிவேடுகள் 100 ஆண்டுகளுக்கும் மேலானவை. அவை தடைசெய்யப்பட்ட பட்டியல் மற்றும் பதிவேடுகளில் முடக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்த ஆய்வுகளின் போது, பதிவுச் சட்டத்தின் பிரிவு 22ஏ-ன் படி, அரசு அதிகாரிகள் தங்கள் சர்ச்சைக்குரிய நிலையைக் குறிக்கும் விதமாக ஆவணத்தில் உரிமையாளர் இடத்தில் காலியாக விட்டுவிட்டனர்.

புள்ளியிடப்பட்ட நிலங்கள் எவ்வளவு?

மாநில அரசு இதுவரை 2,06,171 ஏக்கர்களை புள்ளியிடப்பட்ட நிலங்களாகக் கண்டறிந்து, அவற்றை தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் 10 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான புள்ளி நிலங்கள் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெல்லூர் மாவட்டத்தில் அதிக புள்ளியிடப்பட்ட நிலங்கள் 43,000 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதைத் தொடர்ந்து, பிரகாசம் மாவட்டத்தில் 37,000 ஏக்கர் புள்ளியிடப்பட்ட நிலங்கள் உள்ளதாக முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை நில உரிமையாளர்கள் / விவசாயிகளுக்கு எவ்வாறு பயனளிக்கும்?

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில், 12 ஆண்டுகளுக்கும் மேலாக புள்ளியிடப்பட்ட நிலங்களை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்குவதற்காக வருவாய் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை அரசு தாக்கல் செய்தது. நிலப் பதிவேடுகளில் உள்ள புள்ளிகள் மற்றும் பதிவுகள் அகற்றப்பட்டு, இந்த விவசாயிகளுக்கு தெளிவான நில உரிமை ஆவணங்கள் வழங்கப்படும். குறைந்தது 97,000 விவசாயிகள் 2,06,171 ஏக்கர் மதிப்பிலான புள்ளியிடப்பட்ட நிலங்களுக்கு நில உரிமை ஆவணங்களைப் பெறுவார்கள்.

இந்த விவசாயிகள் நிலத்தை பயன்படுத்தும் போது, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் நிலத்தை அடமானமாக வைத்து கடன் வாங்க முடியவில்லை. புள்ளியிடப்பட்ட நில ஆவணங்களை தெளிவான உரிமை ஆவணங்களாக நிதி நிறுவனங்கள் அங்கீகரிக்கவில்லை.

இப்போது தடைசெய்யப்பட்ட பட்டியலிலிருந்து நிலங்கள் நீக்கப்பட்டதால், நில உரிமையாளர்கள் / விவசாயிகளுக்கு நிலத்தின் மீது முழு உரிமையும், நில உரிமையாளர்கள் என்ற முறையில் வழக்கமான அனைத்து உரிமைகளும் கிடைக்கும். மிக முக்கியமாக, பயிர் ஆதரவு, விதைகள் மற்றும் உரங்கள் வாங்குதல் மற்றும் விவசாய உபகரணங்களை வாங்குவதற்கு நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம். நில உரிமையாளர்கள்/விவசாயிகளும் நிலங்களை விற்கலாம் அல்லது உறவினர்கள் அல்லது உறவினர்களுக்கு பணம் இல்லாமல் வழங்கலாம்.

ஆந்திரப் பிரதேச அரசு இந்த நடவடிக்கை எடுத்தது ஏன்?

புள்ளியிடப்பட்ட நிலத் தகராறுகளைத் தீர்க்க கடந்த ஆண்டுகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நில உச்சவரம்பு முதன்மை ஆணையரிடம் (சி.சி.எல்.ஏ) வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகர்ப்புறங்களில், புள்ளியிடப்பட்ட நிலங்களை முறைகேடாக விற்பனை செய்து, வரி செலுத்த முடியாத வீடுகள் கட்டப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் சர்ச்சைக்குள்ளானதால், முத்திரைத்தாள் வருவாயிலும் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. 2,06,171 ஏக்கரின் பதிவு மதிப்பு ரூ.8,000 கோடிக்கு மேல் உள்ளதாகவும், நிலத்தின் மதிப்பு ரூ.20,000 கோடிக்கு மேல் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

முன்னதாக, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, புள்ளியிடப்பட்ட நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு தனது அரசாங்கம் நிரந்தரமாக தீர்வு காணும் என்று உறுதியளித்தார். இந்த நடைமுறை ஒய்.எஸ்.ஆர் ஜெகன்னா சாஸ்வத பு ஹக்கு மற்றும் பூ ரக்ஷா திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நிலங்களின் விரிவான மறுஅளவையின் ஒரு பகுதியாக புள்ளியிடப்பட்ட நிலங்களை விடுவிப்பதற்கானது. இந்த திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 2,000 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு 7,92,238 நிரந்தர உரிமைப் பத்திரங்களை அரசு வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் முதல் தொடங்கும்.

கடந்த வெள்ளிக்கிழமை, நெல்லூர் மாவட்டம், காவாலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தடை செய்யப்பட்ட பட்டியலிலிருந்து புள்ளியிடப்பட்ட நிலங்களை விடுவிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார். இதற்கான பணியை அதிகாரிகள் இந்த வாரம் தொடங்கினர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment