Advertisment

பி.எஃப்.ஐ தடை மேல்முறையீடு: யு.ஏ.பி.ஏ தீர்ப்பாயம் எப்படி செயல்படுகிறது?

யு.ஏ.பி.ஏ சட்டம் மூலம் தடை விதித்ததை நீண்ட காலம் உறுதி செய்வதற்கு அரசாங்கத்தால் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியின் கீழ் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும். இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
PFI banned, Popular Front of India, how UAPA tribunal works, பிஎஃப்ஐ, சிமி, யுஏபிஏ, SIMI, Unlawful Activities Prevention Act (UAPA), Current Affairs, Express Explained, indian express Tamil

மத்திய அரசால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ) கீழ் சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மீதான தடையைத் தொடர்வதற்கான அரசாங்க அறிவிப்பை உறுதி செய்ய இந்த வழக்கை தீர்ப்பாயத்தின் முன் வைக்க விரும்புகிறது.

Advertisment

யு.ஏ.பி.ஏ தீர்ப்பாயம் என்றால் என்ன?

யு.ஏ.பி.ஏ சட்டம் விதித்த தடை நீண்ட காலம் தொடர அரசாங்கத்தால் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியின் கீழ் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்.

ஒரு அமைப்பை சட்டவிரோதமானது என்று அறிவிப்பதற்கான அதிகாரத்தை யு.ஏ.பி.ஏ -இன் பிரிவு 3 இன் கீழ் மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது. யு.ஏ.பி.ஏ பிரிவு 4 -இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மூலம், தீர்ப்பாயம் அதில் செய்யப்பட்ட அறிவிப்பை உறுதிசெய்து, அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும் வரை, அத்தகைய அறிவிப்பு எதுவும் நடைமுறைக்கு வராது என்று இந்த விதி கூறுகிறது.

எனவே, தீர்ப்பாயம் உறுதி செய்யும் வரை அரசு உத்தரவு அமலுக்கு வராது. இருப்பினும், விதிவிலக்கான சூழ்நிலைகளில், அதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்தவுடன் அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும். தீர்ப்பாயம் அதை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

தீர்ப்பாயத்தின் நடைமுறை

யு.ஏ.பி.ஏ பிரிவு 4 -இன் படி, மத்திய அரசு ஒரு அமைப்பை சட்டவிரோதமானது என்று அறிவித்த பிறகு, அந்த அறிவிப்பு 30 நாட்களுக்குள் தீர்ப்பாயத்தை அடைய வேண்டும். இந்த நடவடிக்கைக்கு போதுமான காரணம் இருக்கிறதா இல்லையா என்று தீர்ப்பளிக்க வேண்டும்.

இதற்குப் பிறகு, அந்த அமைப்பை ஏன் சட்ட விரோத அமைப்பாக அறிவிக்கக் கூடாது என்று 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் மூலம் அமைப்புக்கு தீர்ப்பாயம் அழைப்பு விடுக்கிறது. இது முடிந்ததும், ஐகோர்ட் விசாரணை நடத்தி ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பளிக்கும்.

தீர்ப்பாயத்தின் அமைப்பு

உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கக்கூடிய ஒருவரை மட்டுமே இந்த தீர்ப்பாயம் கொண்டுள்ளது. தீர்ப்பாயத்தில் ஒரு காலியிடம் (தற்காலிகமாக இல்லாதது தவிர) ஏற்பட்டால், மத்திய அரசு மற்றொரு நீதிபதியை நியமித்து, காலியிடத்தை நிரப்பிய பிறகு நடவடிக்கைகள் தொடரும்.

மத்திய அரசு அதன் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான பணியாளர்களை தீர்ப்பாயத்திற்கு வழங்க வேண்டும். தீர்ப்பாயத்திற்கு ஏற்படும் அனைத்து செலவுகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியில் இருந்து அளிக்கப்படுகிறது.

தீர்ப்பாயத்தின் அதிகாரங்கள்

தீர்ப்பாயம் அதன் அமர்வுகளை நடத்தும் இடம் உட்பட அதன் அனைத்து நடைமுறையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் கொண்டது. இதனால், அந்த மாநிலங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பல்வேறு மாநிலங்களில் விசாரணை நடத்த முடியும்.

தீர்ப்பாயம் விசாரணை மேற்கொள்வதற்கு, 1908 ஆம் ஆண்டு சிவில் நடைமுறைச் சட்டத்தின் கீழ் சிவில் நீதிமன்றத்தில் உள்ள அதே அதிகாரங்களை தீர்ப்பாயம் கொண்டுள்ளது. சாட்சியை வரவழைத்து, அவரைப் பிரமாணத்தின் பேரில் விசாரிப்பதில் அவை பயன்படுத்தப்படலாம்; எந்தவொரு ஆவணம் அல்லது ஆதாரமாக தாக்கல் செய்யக்கூடிய பிற ஆவணங்கள், பிரமாணப் பத்திரங்களில் ஆதாரங்களைப் பெறுதல்; எந்தவொரு நீதிமன்றம் அல்லது அலுவலகத்திலிருந்தும் எந்தவொரு பொதுப் ஆவணங்களைக் கோருதல்; சாட்சிகளை விசாரிப்பதற்காக ஏதேனும் குழு அமைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.

தீர்ப்பாயத்தின் முன் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளும் நீதித்துறை நடவடிக்கைகளாக கருதப்படுகின்றன.

தீர்ப்பாயத்தின் பதிவுகள்

சிமி அமைப்பு தடை செய்யப்பட்ட விஷயத்தில் சில விதிவிலக்குகளுடன் அரசாங்க அறிவிப்புகள் பெரும்பாலும் தீர்ப்பாயங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சிகி அமைப்பு வழக்கில், 2008-இல் தீர்ப்பாயம் அதன் மீதான தடையை விரைவில் நீக்கியது. ஜாகிர் நாயக், நீதிக்கான சீக்கியர்கள் அல்லது ஜே.கே.எல்.எஃப் ஆகியவற்றுக்கு எதிரான அனைத்து தடை நீட்டிப்புகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தீர்ப்பாயத்தின் நடவடிக்கைகள் ஓரளவுக்கு தெளிவற்றதாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. யு.ஏ.பி.ஏ தடை பற்றிய தகவல்களை பொதுவில் வெளியிட அனுமதிக்கவில்லை. அரசாங்கம் சீல் வைக்கப்பட்ட கவரில் சாட்சியங்களை வழங்குவதால், ஒரு அமைப்பு தன்னைத் தற்காத்துக் கொள்ள வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Uapa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment