Advertisment

குஜராத்தின் 'வாகா'! புதிய சுற்றுலா தலம்

மக்கள் எல்லையைப் பார்ப்பது மட்டுமல்லாமல், பாதுகாப்புப் படையினர் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை கண்காட்சி பரப்பும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குஜராத்தின் 'வாகா'! புதிய சுற்றுலா தலம்



சீமா தர்ஷன் திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத்தின் நடாபெத் பகுதியில் இந்திய-பாகிஸ்தான் எல்லையை சமீபத்தில் திறந்து வைத்தார்.

Advertisment

இந்தப் பகுதி குஜராத்தின் ஆமதாபாத் நகரில் இருந்து 188 கி.மீ. தொலைவில் உள்ளது. கட்ச் பிராந்தியத்தின் ரான் பகுதியில் இந்த சுற்றுலா பகுதி அமைந்துள்ளது. இது குஜராத்தின் வாகா என்று அழைக்கப்படுகிறது.

சீமா தர்ஷன் திட்டம் என்றால் என்ன?

சீமா தர்ஷன் திட்டத்தின் கீழ், ‘ஜீரோ பாயிண்ட்’ என்ற இடத்தில் பாகிஸ்தானுடனான வேலியிடப்பட்ட சர்வதேச எல்லையைக் காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

இந்தப் பகுதியை 24 மணிநேரமும் எல்லைப் பாதுகாப்புப் படை பாதுகாத்து வருகிறது. குஜராத் மாநில அரசு, குஜராத் மாநில சுற்றுலாத் துறை, குஜராத்தையொட்டியுள்ள சர்வதேச எல்லையை பாதுகாக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக தொடங்கப்பட்டதே சீமா தர்ஷன் திட்டம் ஆகும்.

publive-image

குறைந்த அளவு மக்கள்தொகை கொண்ட பகுதியாக இந்த இடம் கருதப்படுகிறது. நடாபெத் பகுதியில் இருந்து 150 மீட்டர் தொலைவில் பாகிஸ்தான் எல்லை உள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைவதுடன், பாகிஸ்தான் கிராமங்களில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்வது தடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.

எல்லைப் பாதுகாப்புப் படையின் துணை ஐ.ஜியான எம்.எல். கர்க் கூறுகையில், "நடாபெத்தை நாம் குஜராத்தின் வாகா என்று அழைக்கலாம்.

ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்தின்போது அட்டாரி-வாகா எல்லையில் இந்திய-பாகிஸ்தான் ராணுவத்தினரின் பரேடு நடைபெறும். பாகிஸ்தான் பக்கம் மக்களை அதிகம் காண முடியாது.

ஆனால், இந்திய எல்லையில் குறைந்தது 5ஆயிரம் பேர் அமரக் கூடிய வகையில் இருக்கை வசதி இருக்கும்.

எல்லையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள டி-ஜங்ஷனில் இந்த இடம் அமைந்துள்ளது.

இந்த இடம் மலை ஏறுதல், மலையிலிருந்து இறங்குதல், துப்பாக்கிச்சுடுதல், ஜிப்லைன் மற்றும் பிற செயல்பாடுகள் போன்ற சாகசங்களை வழங்குகிறது.

இது 1971 இந்திய-பாகிஸ்தான் போரில் பயன்படுத்தப்பட்ட MIG-27, போர் டாங்கிகள் மற்றும் எல்லைக்கு அருகே சாலையில் நிலைநிறுத்தப்பட்ட ஒரு விமானம் போன்ற போர் கண்காட்சிகளைக் கொண்டுள்ளது.

BSF வரலாற்றைப் பற்றி அறிய ஒரு காட்சிக்கூடம், ஃபீல்டு துப்பாக்கள் அருகே செல்பி எடுக்க இடங்களும் உள்ளனர்.

"மக்கள் எல்லையைப் பார்ப்பது மட்டுமல்லாமல், பாதுகாப்புப் படையினர் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை கண்காட்சிகள் பரப்பும். நாட்டின் பாதுகாப்புப் படையுடன் மக்களை இணைப்பதே இதன் யோசனை” என்று BSF அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1971 இந்திய-பாகிஸ்தான் போரில் நடாபெத்தின் பங்கு

BSF அதிகாரிகளின் கூற்றுப்படி, 1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் நடாபெத் முக்கிய பங்கு வகித்தது.

இந்தப் பகுதியில்தான் BSF மேற்கில் இருந்து படையெடுக்க முயன்ற எதிரிகளைத் தடுத்து நிறுத்தியது.

அதுமட்டுமல்லாமல், 15 எதிரி நிலைகளையும் கைப்பற்றியது.

நடாபெத்தில், போரின் போது எதிரி நிலைகளைக் கைப்பற்றிய BSF பட்டாலியன்களின் நகர்வுகளைக் காட்டும் வரைபடங்கள் உள்ளன.

நடாபெத்துக்கு செல்வது எப்படி?

சுய்காமில் இருந்து BSF ஆல் பாதுகாக்கப்பட்ட சாலை வழியாகத்தான் இந்தப் பகுதிக்குச் செல்ல முடியும்.

இந்தச் சாலை நடேஸ்வரி மாதாஜி கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள டி-ஜங்ஷனுக்கு இட்டுச் செல்கிறது.

மேலும் ஒரு காலத்தில் பொதுமக்கள் அணுகக்கூடிய கடைசி புள்ளியாக இருந்தது. 125 கோடி ரூபாய் மதிப்பிலான சீமா தர்ஷன் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட பெரும்பாலான இடங்கள் டி-ஜங்ஷனில் இருக்கும் போது, ​​பார்வையாளர்கள் டி-சந்தியிலிருந்து வடக்கே சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள ஜீரோ பாயிண்டில் அமைந்துள்ள எல்லையைப் பார்க்க சிறப்பு அனுமதியைப் பெறலாம்.

போரின் போது, ​​நகர்பர்கர் மற்றும் டிப்லோ பகுதிகளில் 1,038 சதுர கி.மீ பாகிஸ்தான் நிலப்பரப்பை பிஎஸ்எஃப் கைப்பற்றியது. சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அந்தப் பகுதி பாகிஸ்தானுக்குத் திரும்பியது.

இதுவரை மக்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது?

வார நாட்களில் சுமார் 4,000 பார்வையாளர்கள் நடாபெத்திற்கு வருகை தருகின்றனர்.

வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை 10,000-20,000 வரை உயரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இயற்கை வேளாண்மைக்கு மாறியதால் இலங்கை வீழ்ந்ததா? பொருளாதார அலசல்

தற்போது சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதிகள் இல்லை. இந்த இடத்தில் 10 ஆண்டுகளில் ஐந்து லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும், இரவு தங்கும் வசதியும் ஏற்படுத்தப்படும் என்றும் அமித் ஷா கூறியிருந்தார்.

பெரியவர்களுக்கு 100 ரூபாயும், இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 50 ரூபாயும் பெயரளவு நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சவாரி மற்றும் சாகச நடவடிக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

எல்லைப் பயண நேரம் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை. சீமா தர்ஷன் திட்டம் முதன்முதலில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியால் டிசம்பர் 2016 இல் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த நேரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் இன்னும் மேம்படுத்தப்படவில்லை என்றாலும், எல்லையைப் பார்க்க ஆர்வமுள்ள பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment