Advertisment

விளையாட்டு வீரர்களுக்கு அனுமதி மறுப்பு: அருணாச்சல மக்களை தனிமைப்படுத்துவதில் நீண்ட வரலாறு கொண்ட சீனா

சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த வுஷூ விளையாட்டு வீரர்களுக்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
The Hangzhou Olympic Sports Center stadium is seen during a light show, ahead of the Asian Games.jpg

The Hangzhou Olympic Sports Center stadium is seen during a light show, ahead of the Asian Games.

சீனாவின் ஹோங்சு நகரில் இன்று (செப்.23) 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி கோலாகலமாகத் தொடங்கி உள்ளது. 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பிலும் வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கின்றனர். இதற்காக அவர்கள் சீனா சென்றுள்ளனர். 

Advertisment

முன்னதாக, அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய வுஷூ வீரர்களுக்கு சீனா ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஸ்டேபிள் விசா வழங்க அனுமதி மறுத்து அந்நாட்டில் நுழைய தடை விதித்தது. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது.  ​​வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களிடம் சீனா பாரபட்சமாக நடந்து கொள்வது இது முதல் முறை அல்ல.

2016-ம் ஆண்டு இந்திய பேட்மிண்டன் அணியின் மேலாளராக இருந்த பாமாங் டாகோவுக்கு சீனா விசா வழங்க மறுத்தது. அந்த ஆண்டு ஃபுஜோவில் நடைபெற்ற தாய்ஹாட் சீன ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பிற்கான இந்திய அணியின் மேலாளராக டாகோ நியமிக்கப்பட்டார்.

அணியின் மேலாளரைத் தவிர, அனைத்து 12 வீரர்களுக்கும் விசா வழங்கப்பபட்டது. அணி மேலாளர் அருணாச்சலப் பிரதேச பேட்மிண்டன் சங்கத்தின் செயலாளராகவும் இருந்து வந்தார். 

இந்த ஆண்டு ஜூலையில், 3 வுஷூ வீரர்கள், நைமன் வாங்சு, ஒனிலு தேகா மற்றும் மெபுங் லாம்கு ஆகியோர் உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள செங்டுவுக்குச் செல்லவிருந்தனர். முதலில் அவர்களது விசா தாமதிக்கப்பட்டு பின் அவர்களுக்கு ஸ்டேபிள் விசா வழங்கப்பட்டது. எனினும் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா தனது முழு வுஷூ அணியையும் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலக்கியது.

https://indianexpress.com/article/explained/explained-sports/asian-games-beijing-has-a-long-record-of-singling-out-people-from-arunachal-8952134/

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகள்,  விளையாட்டு வீரர்கள் முன்பும் இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். சீனாவிற்கு செல்லுபடியாகும் விசாவைப் பெறுவதில் இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். ஏனெனில் சீனா அவர்களை இந்தியாவின் குடிமக்களாக அங்கீகரிப்பதைத் தவிர்த்து ஸ்டேபிள் விசாக்களை வழங்குகிறது.

2011-ம் ஆண்டில், 45 பேர் கொண்ட இந்திய கராத்தே அணி, ஆசிய சாம்பியன்ஷிப்பிற்காக குவாங்சோவுக்குச் செல்ல இருந்தது. அருணாச்சலத்தைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் - மூன்று வீரர்கள் மற்றும் இரண்டு அதிகாரிகள் - தவிர, அவர்களில் பெரும்பாலோர் தங்கள் விசாக்களை சில நாட்களுக்கு முன்பே பெற்றனர், சீனத் தூதரகம் அவர்களுக்கு ஸ்டேபிள் விசா வழங்கியதை அடுத்து டெல்லி விமான நிலையத்தில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

அதே ஆண்டில், அதே மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பளுதூக்கும் கூட்டமைப்பு அதிகாரியும், லிஃப்ட்டரும், கிராண்ட் பிரிக்ஸுக்குக் கட்டுப்பட்டு, ஸ்டேபிள் விசா வழங்கப்பட்டதை அடுத்து அவர் அப்போட்டியை தவறவிட்டனர்.

இளையோர் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லவிருந்த அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 2 இளம் வில்வித்தை வீரர்களும் இதே பிரச்சனையை எதிர்கொண்டனர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment