Explained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்?

இந்தியாவின் விமான ஒழுங்குமுறை மற்றும் பொதுமக்கள் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை (ஜூலை 3) சர்வதேச விமானங்களுக்கான தடையை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது. இந்தத் தடை ஜூலை 15 வரை அறிவிக்கபட்டிருந்த நிலையில், சாதாரண திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் போக்குவரத்து மீண்டும் தொடங்குவது தற்போது மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் விமான ஒழுங்குமுறை மற்றும் பொதுமக்கள் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை (ஜூலை 3) சர்வதேச விமானங்களுக்கான தடையை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது. இந்தத் தடை ஜூலை 15 வரை அறிவிக்கபட்டிருந்த நிலையில், சாதாரண திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் போக்குவரத்து மீண்டும் தொடங்குவது தற்போது மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
international flights, international flights resume in india, dgca, சர்வதேச விமானப் போக்குவரத்து ஜூலை 31 வரை தடை, அமெரிக்கா, இந்தியா, dgca international flights, international flights resume from india, flights resume india, international flights resume india

international flights, international flights resume in india, dgca, சர்வதேச விமானப் போக்குவரத்து ஜூலை 31 வரை தடை, அமெரிக்கா, இந்தியா, dgca international flights, international flights resume from india, flights resume india, international flights resume india

இந்தியாவின் விமான ஒழுங்குமுறை மற்றும் பொதுமக்கள் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை (ஜூலை 3) சர்வதேச விமானங்களுக்கான தடையை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது. இந்தத் தடை ஜூலை 15 வரை அறிவிக்கபட்டிருந்த நிலையில், சாதாரண திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் போக்குவரத்து மீண்டும் தொடங்குவது தற்போது மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

டி.ஜி.சி.ஏ ஏன் தடையை நீட்டித்தது?

மூத்த அரசாங்க அதிகாரிகள் குறிப்பிடுகையில், திட்டமிடப்பட்ட சர்வதேச நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்னர் இந்தியா தயார் செய்ய இன்னும் சிறிது நேரம் ஆகும் என்று உணரப்பட்டதால் இந்த தடை நீட்டிக்கப்பட்டது.

சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவது என்பது முக்கியமாக பயணம் செய்யப்படுகிற நாடு இந்திய குடிமக்களை அதன் எல்லைகளுக்குள் அனுமதிப்பது அல்லது கடந்த சில மாதங்களாக அந்நாடுகள் விதித்த பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது ஆகியவற்றைப் பொறுத்தது.

Advertisment
Advertisements

இந்தியாவின் கொரோனா வைரஸ் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் இல்லை. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அளித்துள்ள உலகளாவிய கொரோனா வைரஸ் தரவுகளின்படி பட்டியலில், சனிக்கிழமை (ஜூலை 4) அதிகாலை நிலவரப்படி, இந்தியா, 6,48,315 தொற்று வழக்குகளுடன், ரஷ்யாவை (6,73,564) முந்திக்கொண்டு உலகின் 3வது மோசமான கொரோன வைரஸ் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. கொரோனா வைரஸ் டாஷ்போர்டு. ஜூலை 3ம் தேதி இந்தியா 22,000 புதிய தொற்று வழக்குகளைச் சேர்த்தது.

உலக அளவில், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 28 லட்சம் என அதிக எண்ணிக்கையில் தொற்று வழக்குகள் உள்ளன. அதைத் தொடர்ந்து பிரேசில் 15 லட்சத்துக்கும் அதிகமான தொற்று வழக்குகள் உள்ளன. உலக அளவில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கொரோனா தொற்று வழக்குகளின் எண்ணிக்கை இதுவரை 1.1 கோடிக்கு மேல் உள்ளது. மேலும் கோவிட்-19 காரணமாக 5.25 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுப்பட்டியல் தெரிவித்துள்ளது.

ஏதேனும் நாடுகள் இந்தியர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதா?

சில அதிகார வரம்புகள் பயணத்திற்கான எல்லைகளைத் திறந்து வருவதால், அவர்கள் இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளை விட்டு வெளியேறிவிட்டனர். இங்கே தொற்று வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குழு இந்த வார தொடக்கத்தில் 14 நாடுகளை பாதுகாப்பான பட்டியலில்” வைக்க ஒப்புக்கொண்டது. அந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அத்தியாவசிய நோக்கங்களுக்காக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த பட்டியல் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் மதிப்பாய்வு செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அரசாங்கம் 59 அதிகார வரம்புகளைக் கொண்ட பயணம் செய்வதற்கான இடங்களை நிறுவியுள்ளது. அவர்கள் வருவதற்கு முந்தைய 14 நாட்களில் பட்டியலில் குறிப்பிடப்படாத ஒரு நாட்டிற்கு அவர்கள் பயணம் செய்யாவிட்டால் ஜூலை 10 முதல் சுய-தனிமைப்படுத்தாமல் பயணிகள் இங்கிலாந்தில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். இந்தியர்களுக்கான மிகவும் பிரபலமான சர்வதேச இடங்களுள் ஒன்றான இங்கிலாந்தின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை.

இந்தியா பயணம் செய்வதற்கான இடங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதா?

அமெரிக்கா, கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுடன் தனிப்பட்ட பயணத் தொடர்பை நிறுவுவதற்கான விவாதங்களில் இந்தியா முன்னேறி வருவதாக வியாழக்கிழமை (ஜூலை 2) இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) தலைவர் அரவிந்த் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த யுனைடெட் ஏர்லைன்ஸ், டெல்லி-நியூயார் பாதையில் ஜூலை 10, ஜூலை 12, மற்றும் ஜூலை 15 ஆகிய தேதிகளில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் என்று அறிவித்திருந்தது. இருப்பினும், அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பயணிகள் பயணம் செய்வதற்கு விமான நிறுவனம் அனுமதிக்கவில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
India America United Kingdom

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: