Advertisment

பைடன் - ஷி உச்சிமாநாட்டில் என்ன நடந்தது; அது ஏன் இந்தியாவுக்கு முக்கியம்?

சீன அதிபர் ஜி ஜின்பிங் தைவானுக்கு அமெரிக்காவின் ஆதரவு மற்றும் உலகில் பிளவுகளை உருவாக்கிய கூட்டணிகள் மற்றும் குழுக்களின் பிரச்சினையை எழுப்பினார்.

author-image
WebDesk
New Update
பைடன் - ஷி உச்சிமாநாட்டில் என்ன நடந்தது; அது ஏன் இந்தியாவுக்கு முக்கியம்?

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் செவ்வாய்க்கிழமை மூன்றரை மணி நேரம் சந்தித்தனர். இந்த ஆண்டு ஜனவரியில் பைடன் பதவியேற்ற பிறகு இரு தலைவர்களின் முதல் மெய்நிகர் இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது.

Advertisment

ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இருந்து இணைந்தார். பெய்ஜிங்கில் உள்ள கிரேட் ஹாலில் இருந்து ஷி ஜின்பிங் இணைந்தார். சீனாவுடன் இராணுவ ஈடுபாட்டைத் தடுக்க முயற்சிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கவலையுடன் அமெரிக்க அதிபர் இந்த உச்சிமாநாட்டிற்கு முன்முயற்சி எடுத்தார்.

இரு தலைவர்களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு முறை தொலைபேசியில் பேசினார்கள். ஆனால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்புக்கு முன் முறையான உச்சிமாநாடு எதுவும் நடைபெறவில்லை.

இந்த சந்திப்பில் என்ன நடந்தது?

இந்த சந்திப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகள் இரு தரப்பும் எடுத்த நிலைப்பாடுகளில் தெளிவான வேறுபாடுகளைக் காட்டியது.

சீனாவின் மனித உரிமை மீறல்கள் மற்றும் பெய்ஜிங்கின் வர்த்தகக் கொள்கை பற்றி பைடன் பேசினார். ஜின்ஜியாங், திபெத் மற்றும் ஹாங்காங்கில் சீன மக்கள் குடியரசின் (PRC) நடைமுறைகள் மற்றும் மனித உரிமைகள் பற்றி அதிபர் பைடன் கவலைகளை எழுப்பினார் என்று வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளை சீன மக்கள் குடியரசின் நியாயமற்ற வர்த்தக மற்றும் பொருளாதார நடைமுறைகளில் இருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் தெளிவாகக் கூறினார்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் பைடன், “சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்கின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதித்தார். மேலும் பிராந்தியத்தில் <அமெரிக்க> கடப்பாடுகளை நிலைநிறுத்துவதற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதியை தெரிவித்தார். இந்த பிராந்தியத்தின் செழிப்புக்கு கடல் வழி சுதந்திரம் மற்றும் பாதுகாப்பான விமானம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்” என்று அமெரிக்காவின் அறிக்கை கூறுகிறது.

தைவான் சர்ச்சை பிரச்சினையில், “தைவான் உறவுகள் சட்டம், மூன்று கூட்டு அறிக்கைகள் மற்றும் ஆறு உறுதிமொழிகளால் வழிநடத்தப்படும் சீன கொள்கைக்கு அமெரிக்கா உறுதியாக உள்ளது. தைவான் ஜலசந்தி முழுவதும் உள்ள நிலையை மாற்ற அல்லது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு குழிபறிப்பதற்கான ஒருதலைப்பட்ச முயற்சிகளை கடுமையாக எதிர்க்கிறது” என்று பைடன் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

தைவானுக்கு அமெரிக்க ஆதரவு மற்றும் உலகில் பிரிவுகளை உருவாக்கிய கூட்டணிகள், குழுக்களின் பிரச்னையை சீன அதிபர் ஷி ஜின்பிங் தனது சார்பில் எழுப்பினார். இது இந்தியாவை உள்ளடக்கிய குவாட் குழுமம் மற்றும் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை கான்பெர்ராவிற்கு வழங்க ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையேயான ஏ.யூ.கே.யூ.எஸ் (AUKUS) ஒப்பந்தம் பற்றிய குறிப்பு ஆகும்.

சீன அரசு ஊடகம் ஷி ஜின்பிங் கூறியதாக தெரிவித்திருப்பதாவது: நாங்கள் பொறுமையாக இருக்கிறோம், சீனாவுடன் தைவானின் அமைதியான மறு இணைவுக்கான வாய்ப்புக்காக மிகுந்த நேர்மையுடன் பாடுபடத் தயாராக இருக்கிறோம்… ஆனால், தைவான் சுதந்திரம் என்று பிரிவினைவாத சக்திகள் தூண்டிவிட்டால், கட்டாயப்படுத்தினால் அல்லது சிவப்புக் கோட்டைத் தாண்டினால் சீனா உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்” என்று தெரிவித்துள்ளது.

“அது நெருப்புடன் விளையாடுகிறது, நீங்கள் நெருப்புடன் விளையாடினால், நீங்கள் எரிக்கப்படுவீர்கள்” என்று சீன அறிக்கையில் ஷி ஜின்பிங் எச்சரித்ததாக மேற்கோள் காட்டியுள்ளது.

இந்தச் சந்திப்பு உலகின் மிக சக்திவாய்ந்த இருவர் ஒருவருக்கொருவர் கோபத்தை வெளிப்படுத்துவதற்கான அரங்கமாக இருந்ததா?

இதில் உடன்பாடு அல்லது கூட்டு அறிக்கை எதுவும் இல்லாவிட்டாலும், வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, இந்த சந்திப்பு தொடர்பு வழிகளை திறந்து வைக்க ஒரு வாய்ப்பாக இருந்தது.

பைடன் கூறுகையில், “சீனா மற்றும் அமெரிக்காவின் தலைவர்கள் என்ற முறையில் எங்கள் நாடுகளுக்கு இடையேயான போட்டியானது, உள்நோக்கம் கொண்டதாகவோ அல்லது நோக்கமற்றதாகவோ, திட்டமிடப்படாமலோ, மோதலாகவோ மாறாமல் இருப்பதை உறுதி செய்வதே எங்கள் பொறுப்பு என்று எனக்குத் தோன்றுகிறது. இது ரொம்ப எளிமையான விஷயம் இது நேரடியான போட்டி” என்று தெரிவித்துள்ளார்.

நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான பொறிமுறையைப் பற்றியும் அவர் பேசினார்.

“எனக்கு, சில பொது அறிவு பாதுகாப்பை நிறுவ வேண்டும் என புரிகிறது. நாம் உடன்படாத இடங்களில் தெளிவாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். மேலும், நமது நலன்கள் குறுக்கிடும் இடங்களில் ஒன்றாகச் செயல்பட வேண்டும். குறிப்பாக காலநிலை மாற்றம் போன்ற முக்கிய உலகளாவிய பிரச்சினைகளில் ஒன்றாக செயல்பட வேண்டும்” என்று பைடன் கூறினார்.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்து மெய்நிகர் சந்திப்பைத் தொடங்கும்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பார்த்து கை அசைத்தார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் இதையொட்டி கூறுகையில், “சீனாவும் அமெரிக்காவும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும். அமைதியுடன் இணைந்து வாழ வேண்டும், இருதரப்பு நலன்களுக்கு ஒத்துழைப்பைத் தொடர வேண்டும். ஒருமித்த கருத்தை உருவாக்கவும், தீவிர நடவடிக்கைகளை எடுக்கவும், சீனா-அமெரிக்க உறவுகளை சாதகமான திசையில் முன்னோக்கி நகர்த்தவும், அதிபர் பைடன் அவர்களே உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன். அவ்வாறு செய்வது நமது இரு நாட்டு மக்களின் நலன்களை முன்னேற்றும், சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.” என்று கூறினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க துணை அதிபராக இருந்த காலத்தில் ஷி ஜின்பிங்கும் அவரும், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு நிறைய நேரம் செலவிட்டதைஉம் சீனத் தலைமையில் ஷி ஜின்பிங் ஒரு முக்கியமான நபராக இருந்ததாகவும் நினைவு கூர்ந்தார்.

ஷி ஜின்பிங் கூறுகையில், “இது நேருக்கு நேர் சந்திப்பது போல் சிறப்பாக இல்லை என்றாலும், எனது பழைய நண்பரைப் பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று கூறினார்.

"அவ்வாறு செய்வது நமது இரு நாட்டு மக்களின் நலன்களை முன்னேற்றும் மற்றும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்."

ஷியும் அவரும் துணை அதிபராக இருந்த காலத்திற்கு "ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு நிறைய நேரம் செலவிட்டனர்" என்றும், சீனத் தலைமையில் ஜி ஒரு முக்கியமான நபராக இருந்ததாகவும் பிடன் நினைவு கூர்ந்தார்.

Xi கூறினார்: "இது நேருக்கு நேர் சந்திப்பது போல் சிறப்பாக இல்லை என்றாலும், எனது பழைய நண்பரைப் பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்."

மார்ச் மாதம் அலாஸ்காவில் அமெரிக்க - சீன அதிகாரிகளுக்கு இடையே நடந்த முதல் நேருக்கு நேர் சந்திப்பில் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை பரிமாறிக்கொண்டனர். அந்தக் கட்டத்தில் இருந்து, செவ்வாய்க் கிழமை கூட்டம் அத்தகைய வார்த்தைகளைக் குறைக்கும் முயற்சியைக் குறிக்கிறது.

ஜோ பைடன் - ஷி ஜின்பிங் சந்திப்பை இந்தியா எப்படிப் பார்க்கிறது?

அமெரிக்கா-சீனா பேச்சுவார்த்தை செயல்முறையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்தியாவும் சீனாவும் இப்போது ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு எல்லை மோதலில் இருந்து வருகின்றன. புது டெல்லி குவாட்டின் ஒரு பகுதியாகும். மேலும், அமெரிக்காவுடனான அதன் உத்தி அமைப்பு மிகவும் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் உள்ளது.

அமெரிக்க அதிபர்கள் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவரின் கீழும் அமெரிக்க நிர்வாகம் சீனாவை ஒரு உத்தி போட்டியாகக் கருதுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

China United States Of America America Joe Biden Xi Jinping
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment