2014 முதல் 2024 வரையிலான 10 ஆண்டுகளில் மத்திய ஆயுதக் காவல் படைகளில் (சி.ஏ.பி.எஃப்) பெண் பணியாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் திங்கள்கிழமை (டிசம்பர் 2) தெரிவித்தார்.
சி.ஏ.பி.எஃப் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன. இதில் 7 துணை ராணுவப் படைகள் உள்ளன. அஸ்ஸாம் ரைபிள்ஸ், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP), சஷாஸ்த்ரா சீமா பால் (SSB), மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), மற்றும் தேசிய பாதுகாப்பு காவலர் (NSG) சிறப்பு பணிக்குழு உள்ளது.
முதலில், சி.ஏ.பி.எஃப்களில் பெண்களின் தற்போதைய எண்ணிக்கை என்ன?
அஸ்ஸாம் ரைபிள்ஸ் உட்பட 9.48 லட்சம் சி.ஏ.பி.எஃப்களில் பெண்கள் 4.4% ஆவர். விமான நிலையங்கள், டெல்லி மெட்ரோ மற்றும் பாராளுமன்ற வளாகம் போன்ற முக்கிய அரசு கட்டிடங்கள் போன்ற பொது இடங்களை பாதுகாக்கும் சிஐஎஸ்எஃப் பெண்களின் அதிகபட்ச பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளது - மொத்தப் படை பலமான சுமார் 1.51 லட்சத்தில் 7.02% - என்று ராய் மக்களவையில் தெரிவித்தார்.
மற்ற படைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது - எஸ்.பி.பி-ல் 4.43%, BSF இல் 4.41%, ITBP இல் 4.05%, அஸ்ஸாம் ரைபிள்ஸில் 4.01%, மற்றும் CRPF இல் 3.38% என்று சபையில் அமைச்சர் சமர்ப்பித்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. .
2025 ஆம் ஆண்டில் மேலும் 4,138 பெண்கள் CAPF மற்றும் அசாம் ரைபிள்ஸில் பணியமர்த்தப்படுவார்கள் என்று ராய் மேலும் கூறினார்.
சி.ஏ.பி.எஃப்களில் பெண்களைச் சேர்ப்பதற்கான முயற்சி
2016 ஆம் ஆண்டில், CRPF மற்றும் CISF-ன் கான்ஸ்டபிள் நிலை பதவிகளில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கும், 14-15% எல்லைப் பாதுகாப்புப் படைகளான BSF, SSB மற்றும் ITBP ஆகியவற்றில் பெண்களுக்கு ஒதுக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது.
“சி.ஏ.பி.எஃப்களின் மொத்த பலத்தில் பெண்கள் 3.68% மட்டுமே என்பதைக் குறிப்பிடுவதில் குழு ஏமாற்றம் அடைந்துள்ளது. சிஏபிஎஃப் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் பெண்களைச் சேர்ப்பதை ஊக்குவிக்க உள்துறை அமைச்சகத்தின் முயற்சிகள் இருந்தபோதிலும், பெண்களின் பலம் மிகவும் குறைவாகவே உள்ளது” என்று பாஜகவின் ராஜ்யசபா உறுப்பினர் பிரிஜ் லால் தலைமையிலான குழுவின் அறிக்கை கூறுகிறது.
கமிட்டி என்ன பரிந்துரைத்தது?
சி.ஏ.பி.எஃப்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்துறை அமைச்சகத்தை குழு கேட்டுக் கொண்டது.
பெண்களுக்கான பகுதி வாரியான ஆட்சேர்ப்பு இயக்கங்கள், குறிப்பாக சிஐஎஸ்எஃப் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியவற்றில் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும், மேலும் எல்லைப் புறக்காவல் நிலையங்களில் பெண்கள் பாதுகாப்புப் படைகளில் சேரத் தூண்டப்படுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் படிக்க: What percentage of CAPF personnel are women, and why is the number so low?
2022 இல் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை, பெண்கள் படைகளில் சேர்வதைத் தடுக்கும் காரணிகளை அடையாளம் காணவும், அவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்க நடைமுறை தீர்வுகளைக் கொண்டு வரவும் அமைச்சகம் செயல்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“