Advertisment

சந்திரயான்-3 செலுத்துதல்: நிலவு திட்டங்களின் பல்வேறு வகைகள் என்ன?

கடந்த 15 அண்டுகளில் சந்திரனை ஆராய்வதில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஃப்ளைபைஸ், ஆர்பிட்டர்கள், இம்பாக்ட் மிஷன்ஸ், லேண்டர்கள், ரோவர்கள் மற்றும் மனிதர்கள் செல்வது உட்பட 6 வகையான நிலவு பயணங்கள் உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India third lunar mission, soft landing on the Moon, Discovery of water on the Moon, Chandrayaan 3, சந்திரயான்-3 ஏவுதல், நிலவு திட்டங்களின் பல்வேறு வகைகள் என்ன, Chanrayaan 2, different types of moon missions, Chandrayaan-3 launch, different kinds of moon missions, Tamil indian express, express explained

சந்திரனில் ஆர்ட்டிமிஸ் விண்வெளி வீரர்கள் படம் (Photo: NASA)

கடந்த 15 அண்டுகளில் சந்திரனை ஆராய்வதில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஃப்ளைபைஸ், ஆர்பிட்டர்கள், இம்பாக்ட் மிஷன்ஸ், லேண்டர்கள், ரோவர்கள் மற்றும் மனிதர்கள் செல்வது உட்பட 6 வகையான நிலவு பயணங்கள் உள்ளன. அவைகள் இங்கே:

Advertisment

சந்திரயான்-3 மிஷன் இந்தியாவின் மூன்றாவது சந்திரன் திட்டம் மற்றும் சந்திரனின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்குவதற்கான இரண்டாவது முயற்சியாகும். ரஷ்யாவின் லூனா 25 திட்டம் மற்றும் நாசாவின் ஆர்ட்டிமிஸ் II உட்பட விண்ணுக்குச் செல்ல வரிசையாக உருவாக்கப்பட்ட பல விண்வெளிப் பயணங்களில் இதுவும் ஒன்று.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் சந்திரனை ஆராய்வதில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 1970-களின் முற்பகுதியில் கடைசியாக அப்பல்லோ பயணத்திற்குப் பிறகு, அக்கால தொழில்நுட்பத்தில் சந்திரனில் செய்யக்கூடிய அனைத்தும் முடிந்துவிட்டதால், விண்கலங்களை அங்கு அனுப்புவதில் முழுமையான மந்தநிலை ஏற்பட்டது. இது 1990-களில் மாறத் தொடங்கிய போதிலும், சந்திரயான்-1, 2008-ல், சந்திரனின் மேற்பரப்பில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்த பிறகு உண்மையான உத்வேகம் வந்தது.

இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு வகையான நிலவு பயணங்கள் இங்கே:

*ஃப்ளைபைஸ் (Flybys): இந்த வகையான விண்கலம் சந்திரனுக்கு அருகில் சென்றது. ஆனால், அதைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் வரவில்லை. இவை சந்திரனை தொலைவில் இருந்து ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன அல்லது வேறு ஏதேனும் கிரகங்கள் அல்லது ஆழமான விண்வெளி ஆய்வுக்கு செல்லும் வழியில் இருந்தன, வானத்தில் உள்ள பொருட்களை உடலை கடந்து சென்றன. ஃப்ளைபைஸ் திட்டம் சில ஆரம்ப எடுத்துக்காட்டுகள் அமெரிக்காவின் ஃபிளைபை 3 மற்றும் 4 திட்டங்களின் முன்னோடியாக அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் லூனா 3 இருந்தது.

*ஆர்பிட்டர்கள்: இவை சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்து நிலவின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தில் நீண்ட ஆய்வுகளை மேற்கொள்ள வடிவமைக்கப்பட்ட விண்கலங்கள். இந்தியாவின் சந்திரயான் -1 ஒரு ஆர்பிட்டராக இருந்தது. அதே போல், பல்வேறு நாடுகளில் இருந்து 46 நிலவு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. ஒரு கிரகத்தை ஆய்வு செய்ய ஆர்பிட்டர் பணிகள் மிகவும் பொதுவான வழியாகும். இதுவரை சந்திரன், செவ்வாய், வெள்ளி ஆகிய கிரகங்களில் மட்டுமே தரையிறங்கும் சாத்தியம் இருந்தது. மற்ற அனைத்து கிரகங்களும் ஆர்பிட்டர் அல்லது ஃப்ளைபை மிஷன் மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. சந்திரயான்-2 திட்டமும் ஒரு ஆர்பிட்டரைக் கொண்டிருந்தது. அது இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, சந்திரனை சுமார் 100 கிமீ உயரத்தில் இருந்து சுற்றி வருகிறது.

இம்பாக்ட் மிஷன்: இவை ஆர்பிட்டர்களின் விரிவாக்கம் ஆகும். இந்த பிரதான விண்கலம் சந்திரனைச் சுற்றிச் செல்லும் போது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருவிகள் நிலவின் மேற்பரப்பில் கட்டுப்பாடற்ற தரையிறக்கத்தை உருவாக்குகின்றன. தாக்கத்திற்குப் பிறகு அவை அழிக்கப்படுகின்றன, ஆனால் சந்திரனைப் பற்றிய சில பயனுள்ள தகவல்களைத் தங்கள் வழியில் அனுப்புகின்றன. சந்திரயான்-1-ல் உள்ள கருவிகளில் ஒன்று, மூன் இம்பாக்ட் ப்ரோப் அல்லது எம்.ஐ.பி எனப்படும். இதே வழியில் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதற்காக செய்யப்பட்டது. எம்.ஐ.பி மூலம் அனுப்பப்பட்ட தரவு நிலவில் நீர் இருப்பதற்கான கூடுதல் ஆதாரங்களை வழங்கியதாக இஸ்ரோ கூறியது. ஆனால், அளவுத்திருத்த பிழைகள் காரணமாக இந்த கண்டுபிடிப்புகளை வெளியிட முடியவில்லை.

*லேண்டர்கள்: இந்த திட்டங்கள் சந்திரனில் விண்கலம் மெதுவாக தரையிறங்குவதை உள்ளடக்கியது. இவை ஆர்பிட்டர் பயணங்களை விட மிகவும் சிக்கலானவையாக உள்ளன. உண்மையில், முதல் 11 லேண்டர் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. சந்திரனில் முதல் தரையிறக்கம் ஜனவரி 31, 1966 அன்று அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் லூனா 9 விண்கலத்தால் நிறைவேற்றப்பட்டது. இது சந்திரனின் மேற்பரப்பில் இருந்து முதல் படத்தையும் ஒளிபரப்பியது.

*ரோவர்கள்: இவை லேண்டர் திட்டங்களின் விரிவாக்கம் ஆகும். லேண்டர் விண்கலம், அவை பருமனாக இருப்பதாலும், கால்களில் நிற்க வேண்டியதாலும், தரையிறங்கிய பிறகும் நிலையாக இருக்கும். வின்கலத்தில் உள்ள கருவிகள் அவதானிப்புகளை மேற்கொள்ளலாம், அருகே உள்ள இடங்களில் இருந்து தரவை சேகரிக்கலாம். ஆனால், சந்திரனின் மேற்பரப்புடன் தொடர்பு கொள்ளவோ அல்லது நகரவோ முடியாது. இந்த சிரமத்தை சமாளிக்க ரோவர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோவர்ஸ் என்பது லேண்டரில் உள்ள சிறப்பு சக்கர பேலோடுகள் ஆகும். அவை விண்கலத்திலிருந்து தங்களைப் பிரித்து சந்திரனின் மேற்பரப்பில் சுற்றிச் செல்ல முடியும். லேண்டரில் உள்ள கருவிகள் பெற முடியாத மிகவும் பயனுள்ள தகவல்களைச் சேகரிக்கின்றன. சந்திரயான்-2 திட்டத்தில் விக்ரம் லேண்டரில் இருந்த ரோவர் பிரக்யான் என்று அழைக்கப்பட்டது.

*சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பிய திட்டங்கள்: இந்த திட்டங்கள் சந்திரனின் மேற்பரப்பில் விண்வெளி வீரர்கள் தரையிறங்குவதை உள்ளடக்கியது. இதுவரை அமெரிக்காவின் நாசாவால் மட்டுமே நிலவில் மனிதர்களை தரையிறக்க முடிந்தது. இதுவரை, தலா இரண்டு விண்வெளி வீரர்கள் கொண்ட 6 குழுக்கள் நிலவில் இறங்கியுள்ளன. இவை அனைத்தும் 1969 மற்றும் 1972-க்கு இடையில் நடந்தன. அதன் பிறகு, நிலவில் தரையிறங்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஆனால், நாசாவின் ஆர்ட்டிமிஸ் III, தற்போது 2025 க்கு திட்டமிடப்பட்டுள்ளது. மனிதகுலம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சந்திரனின் மேற்பரப்பில் மீண்டும் இறங்க திட்டமிட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment