Jay Mazoomdaar, P Vaidyanathan Iyer
இந்த மாத தொடக்கத்தில், வெளிநாட்டு இலக்குகளை கண்காணிக்கும் ஜென்ஹுவா டேட்டா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கோ நிறுவனம் சைனீஸ்-ஒன்லி இணையதளத்தை, இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்துகளுக்காக அணுகியதும் அது விரைவாக முடக்கப்பட்டது.
இந்த நிறுவனம் இலக்குகளில் இருந்து எந்த வகையான தரவுகளைச் சேகரித்துள்ளது; இது கலப்பினப் போரில் ஈடுபட்டுள்ளது என்று கூறும்போது அதற்கு அர்த்தம் என்ன; அதனால் ஏற்படும் கவலைக்கான காரணம் என்ன? இதற்கெல்லாம் பதிலளிக்கப்பட்ட முக்கிய கேள்விகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஜென்ஹுவா தரவு என்ன செய்கிறது?
இது அரசியல், அரசு, வணிகம், தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் சிவில் சமூகத்தில் உள்ள தனிநபர்களையும் நிறுவனங்களையும் குறிவைக்கிறது. சீன உளவுத்துறை, இராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதாகக் கூறி, சமூக ஊடக தளங்களில் ஜென்ஹுவா இந்த விஷயத்தில் டிஜிட்டல் தடங்களைக் கண்காணித்து ஒரு தகவல் நூலகத்தை பராமரிக்கிறது. இதில் செய்தி ஆதாரங்கள், அமைப்புகள் மட்டுமல்லாமல், ஆவணங்கள், காப்புரிமைகள், ஏல ஆவணங்கள் மற்றும் ஆள்சேர்ப்பு உள்பட ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட உள்ளடக்கங்களும் அடங்கும். குறிப்பிடத்தக்க வகையில், இது ஒரு தொடர்பு தரவுத்தளத்தை உருவாக்குகிறது. இது தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் தகவல்களுக்கு இடையிலான தொடர்புகளை பதிவுசெய்து விவரிக்கிறது. இத்தகைய பெரிய தரவுகளை சேகரித்தல் மற்றும் இந்த இலக்குகளைச் சுற்றியுள்ள பொது அல்லது உணர்வு பகுப்பாய்வை உருவாக்குகிற ஜென்ஹுவா அச்சுறுத்தலான உளவுத்துறை சேவைகளை வழங்குகிறது.
இது தரவுக்கான தரவு அல்ல, ஆனால் அதற்கான வரம்பும் பயன்பாடும் அபாயக் கொடிகளை எழுப்புகின்றன. ஜென்ஹுவாவின் 24 x7 நேரமும் அனைத்து சமூக ஊடக கணக்குகளிலிருந்தும் இலக்கு குறித்த தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கிறது; இலக்காக இருக்கும் நபர்களின் நண்பர்கள் மற்றும் உறவுகளையு கண்காணிக்கிறது; நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களின் கம்மெண்ட்டுகள், விருப்பங்கள் மற்றும் கருத்துகளையும் பகுப்பாய்வு செய்கிறது; செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கருவிகள் மூலம் புவியியல் இருப்பிடம் போன்ற இயக்கங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைக் கூட சேகரிக்கிறது.
உள்நாட்டு பாதுகாப்பு ஏஜென்சிகள் இத்தகைய தரவை போராட்டங்களை கண்காணிப்பது மற்றும் சட்டம் ஒழுங்கு பயன்பாடுகளுக்கு பயன்படுத்துகின்றன. ஆனால், மேற்பார்வை அல்லது மேற்பார்வை இல்லாத வெளிநாட்டு நிறுவனங்களின் கைகளில் இருக்கும் அத்தகைய தரவுகள் பல்வேறு நோக்கங்களுக்கு உதவும். தீங்கில்லாத சிறிய தகவல்கள் வேண்டுமென்றே தந்திரமான சூழ்ச்சிக்கு ஒரு பரந்த கட்டமைப்பில் ஒன்றாக இணைக்கப்படலாம். இந்த ஹைப்ரிட் வார்ஃபேரில் (hybrid warfare) அதன் பங்கை ஜென்ஹுவா வெளிப்படுத்தியதன் மையத்தில் இருக்கிறது.
ஹைப்ரிட் வார்ஃபேர் (hybrid warfare) என்றால் என்ன?
1999 ஆம் ஆண்டின் முற்பகுதியில், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் வெளியீடான கட்டுப்பாடற்ற போர், ஹைப்ரிட் வார்ஃபேர் என்ற கலப்பு யுத்தத்தின் வரையறைகளை வரைபடமாக்கியது. இது இராணுவத்திலிருந்து அரசியல், பொருளாதார மற்றும் தொழில்நுட்பத்திற்கு வன்முறை அரங்கின் மாற்றம் ஆகும். இந்த போரில் புதிய ஆயுதங்கள், “பொது மக்களின் வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்தவர்கள்” என்று எழுத்தாளர்கள் எழுத்தாளர்கள் கர்னல் கியாவோ லியாங் மற்றும் கர்னல் வாங் சியாங்சுய் ஆகியோர் எழுதினார்கள். ஒரு நாள் “மக்கள், சில மென்மையான மற்றும் கனிவான விஷயங்கள் தாக்குதல் மற்றும் ஆபத்தான தன்மைகளைக் கொண்டிருக்கத் தொடங்கியதைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
உண்மையில், நாடுகளுக்குள்ளும், அரசியல் கட்சிகளும்கூட இதே கருவிகளின் மூலம் எதிர்க்கட்சியை குறிவைக்கின்றன.
இது குறித்து ஒரு சைபர் பாதுகாப்பு வல்லுனர் கூறுகையில், “ஒவ்வொரு இரண்டாவது நாடும் 2014-15 ஆம் ஆண்டில் ரஷ்ய முன்னேற்றத்திலிருந்து (கிரிமியாவை இணைத்தல் மற்றும் கிழக்கு உக்ரேனில் அறிவிக்கப்படாத மோதல்) ஹைப்ரிட் வார்ஃபேர் போருக்கான காட்சியை அளிக்கிறது. ஆனால், கடந்த ஆண்டு ஹாங்காங் ஆர்ப்பாட்டங்களின் போது நாம் கண்டது போல் சீனாவின் திறனுடன் சிலர் பொருந்துகிறார்கள்” என்று கூறினார்.
இந்த கண்காணிப்பு இந்தியாவில் ஏதேனும் சட்டங்களை மீறுகிறதா?
தகவல் தொழில்நுட்ப விதிகள் 2011-ன் கீழ், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் கீழ், தனிப்பட்ட தரவு “ஒரு இயல்பான நபரைப் பற்றிய எந்தவொரு தகவலும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, கிடைக்கக்கூடிய தகவல் அல்லது கிடைக்க இருக்கும்பிற தகவல்களுடன் இணைந்தது. அத்தகைய நபரை அடையாளம் காணும் திறன் கொண்டவை” என்று குறிப்பிடுகிறது. இருப்பினும், இது பொது களத்தில் இலவசமாக அல்லது அணுகக்கூடிய தகவல்களைக் கொண்டிருக்கவில்லை.
நேரடி மார்க்கெட்டிங் போன்றவற்றுக்கு தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவதில் இந்த விதிகள் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. பல வணிக நிறுவனங்கள் இலக்கு விளம்பரத்திற்காக இத்தகைய தகவல்களை அணுகி ஒருங்கிணைக்கின்றன. மூன்றாம் தரப்பு தரவு சேகரிப்புக்கு வரும்போது (ஜென்ஹுவா செய்வது போல) இது சற்று சிக்கலானது. புதிய தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதாவை உருவாக்க உதவிய ஒரு தரவு தனியுரிமை நிபுணர், “இங்குள்ள முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த நிறுவனம் இதை அனுமதியின்றி மேற்கொள்கிறது… ஒரு மூன்றாம் தரப்பு உங்கள் புவி இருப்பிடத்தை சமூக ஊடக தளங்களிலிருந்து ஸ்கிராப் செய்து பகிர்கிறது. அந்து போட்டி நாட்டின் உளவுத்துறையுடன், குறைந்தது சில உயர்மட்ட அதிகார வரம்புகளில் சட்டவிரோதமாகக் காணப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார். ஆனால், தனியுரிமைச் சட்டங்கள் வெளிநாட்டு அதிகார வரம்பில் அமல்படுத்துவது பெரும்பாலும் சாத்தியமில்லை. ஏனென்றால், அவை நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. அது எந்த காலத்திலும் மாற வாய்ப்பில்லை.
ஜென்ஹுவாவின் கண்காணிப்பால் என்ன கவலை?
சரியான கட்டுப்பாட்டு கோட்டில் பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், ஜூன் மாதம் முதல் இந்தியா 100 க்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது என்று கூறி தடை செய்தது. மேலும், அவை இந்தியாவின் பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கின் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடை செய்தது. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் ஜென்ஹுவா போன்ற நிறுவனங்களின் செயல்பாட்டை பாதிக்க வாய்ப்பில்லை.
சமூக ஊடகங்கள் மூலம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் முக்கியமான இராணுவம், உளவுத்துறை அல்லது பொருளாதார தகவல்களுக்கான சாத்தியமான சொத்துக்களை வளர்ப்பதற்கான சீனாவின் முயற்சிகள் குறித்து சமீபத்திய செய்திகள் உள்ளன.
“இந்த நிறுவனத்திற்கு (ஜென்ஹுவா) பல நாடுகளில் செயலாக்க மையங்கள் ஏன் தேவை? நீங்கள் வெகுஜன தகவல்களைப் பெறுகிற தளங்களில் இருந்து கவனத்தை செலுத்த விரும்பவில்லை என்றால், நீங்கள் ப்ராக்ஸிகளைப் பயன்படுத்துங்கள்” என்று தரவை அங்கீகரிக்க உதவிய கான்பெர்ராவைச் சேர்ந்த நிபுணர் ராபர்ட் பாட்டர் கூறினார். மேலும், “"செயல்படக்கூடிய தரவைப் பின்தொடர்வதற்கான திறனை உருவாக்குவதே ஒரே நம்பத்தகுந்த நோக்கம்.” என்று கூறினார்.
தனிநபர்களையும் நிறுவனங்களையும் குறிவைக்க தாராள ஜனநாயகங்கள் எடுத்துக் கொள்ளும் திறந்த தகவல் சூழலை ஜென்ஹுவா பயன்படுத்துகிறது என்று பாட்டர் கூறினார். மேலும், “ஒரு சர்வாதிகார சீனாவால் வெளிநாட்டு நபர்களை கண்காணிப்பதும் கண்காணிப்பு அச்சுறுத்தல் செய்வதும் மிகவும் உண்மையானது.” என்று அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.