உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல், கோடை வெப்பநிலையில் குறையக்கூடும் என்று கூறப்படுவது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவின் தலைமை இயக்குனர் பேராசிரியர் டாக்டர் பல்ராம் பார்கவா பதில் அளித்துள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல், கோடை வெப்பநிலையில் குறையக்கூடும் என்று கூறப்படுவது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவின் தலைமை இயக்குனர் பேராசிரியர் டாக்டர் பல்ராம் பார்கவா பதில் அளித்துள்ளார்.
india coronavirus, covid-19 india, india coronavirus outbreak testing, coronavirus symptoms, கொரோனா வைரஸ், கோடையில் கொரோனா பரவல் குறையுமா, கொரோனா வைரஸ் பற்றி நிபுணர்கள் விளக்கம், coronavirus cure, coronavirus india, coronavirus maharashtra, No data to suggest transmission will slow as summer approaches, coronavirus kerela, coronavirus delhi, coronavirus express explained, expert explains about coronavirus
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல், கோடை வெப்பநிலையில் குறையக்கூடும் என்று கூறப்படுவது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் தலைமை இயக்குனர் பேராசிரியர் டாக்டர் பல்ராம் பார்கவா பதில் அளித்துள்ளார்.
Advertisment
பேராசிரியர் டாக்டர் பல்ராம் பார்கவா இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் தலைமை இயக்குனர். இவர் கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் தடுப்பு நடவடிக்கையில் உள்ள அலுவலர்களில் ஒருவர். இவர் கொரோனா வைரஸ் பற்றி அனுராதா மஸ்கரேன்ஹஸிடம் பேசினார்.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கொரோனா வைரஸ் பரவிய முதல் சுற்றில் இருந்து இந்தியா தப்பித்தது எந்தளவுக்கு உதவியாக இருந்தது?
ஆமாம்! ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பல நோய்த் தொற்றுகள் ஏற்படாதது நமக்கு அதிர்ஷ்டம்தான். ஆனால், அந்த நேரத்தில்கூட நாங்கள் நல்லா தயாராக இருந்தோம். வுஹானில் மக்கள் நோய்வாய்ப்பட்ட செய்தி டிசம்பர் மாதத்திலேயே வரத் தொடங்கியது. நாங்கள் நம்முடைய ஆய்வகங்களை உணர ஆரம்பித்தோம். நிபா வைரஸ் மற்றும் ஜிகா வைரஸ் போன்ற கடந்த காலங்களில் இதே போன்ற பரவல்களை நாங்கள் கையாண்டோம். அவற்றின் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. நாங்கள் அதை துளையிடுவதற்கு (drill) அறிந்தோம். நாங்கள் எங்களைத் தயார்படுத்திக் கொண்டோம். ஜனவரி 17-க்குள் வைரஸ் பரவலை சமாளிக்க நாங்கள் தயாராக இருந்தோம். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் எந்தவிதமான தீவிரமான பரவலும் இல்லை என்பது எங்கள் அமைப்பை வலுப்படுத்தவும் பொதுமக்களை உணரச்செய்யவும் நேரம் அளித்தது.
Advertisment
Advertisements
ஒரு நாட்டில் சுமார் 100 பேர் பாதிக்கப்பட்டவுடன் பரவல் மிக வேகமாக இருக்கிறது என்று தரவு தெரிவிக்கிறது. அந்த வழியைத் தவிர்க்க முடியாதா?
அந்த வளைவைத் தவிர்க்க முடியும். அதிவேக பரவலின் அதே வளைவை நாம் பின்பற்றுவது அவசியமில்லை. சமூக பரவலைத் தடுக்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் பயண ஆலோசனைகள் மற்றும் கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்கள் மற்றும் கேள்விகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி அனைத்தும் மிக முக்கியமான பாத்திரங்களை வகிக்கின்றன. வேறொரு நாட்டிலிருந்து திரும்பி வந்த ஒரு நபர் 14 நாட்களில் வைரஸ் வராமல் இருப்பதை உறுதி செய்ய முடிந்தால், சமூகப் பரவலை நிறுத்த முடியும். சமூகப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் கட்டுப்பாட்டு உத்திகளுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வெப்பநிலை அதிகரிக்கும் போது பரவல் குறையக்கூடும் என்பது உண்மையா?
அதற்கு இங்கே எந்தவொரு உறுதியான ஆதாரமும் தரவும் இல்லை. வானிலை மாற்றங்கள் நோய் பரவுவதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் அல்லது இல்லாமல் இருக்கலாம்.
புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) ஏற்கனவே கோவிட் -19 வைரஸ் விகாரத்தை தனிமைப்படுத்தியுள்ளது. ஜப்பான், தாய்லாந்து, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற வேறு சில நாடுகளும் இந்த விவகாரத்தை தனிமைப்படுத்தியுள்ளன.
இதன் பொருள் என்னவென்றால், COVID-19 நோயாளியின் மருத்துவ மாதிரி திசு வளர்ப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வைரஸ் ஆய்வக நிலைமைகளில் வளர்க்கப்பட்டுள்ளது. என்.ஐ.வி.யால் தனிமைப்படுத்தப்படுவது இப்போது மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் விரைவான நோயறிதல் கருவிகளின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும். இருப்பினும், ஒரு தடுப்பூசிக்கு நேரம் எடுக்கும்.
மாதிரிகளை சோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஆய்வகங்கள் போதுமானதா?
வைரஸின் சோதனை நிறுவனமாக விளங்கும் ஐ.சி.எம்.ஆர், COVID-19-ஐ சோதிக்க பொருத்தப்பட்ட அதன் ஆய்வக வலையமைப்பை 51 முதல் 63 வரை விரிவுபடுத்தியுள்ளது.
முன்னர் என்.ஐ.வி.யில் மட்டுமே நடத்தப்பட்ட வைரஸின் மறுசீரமைப்பிற்கான இரண்டாம் சோதனை 31 ஆய்வகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் இந்தியாவில் வைரஸைக் கண்டறிய விரைவுபடுத்த உதவும், மேலும் திறமையான நிர்வாகத்திற்கு உதவும்.
மக்கள் பீதியடையக்கூடாது. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பரவலைச் சமாளிக்க வலுவான அமைப்புகள் மற்றும் செயல்முறைகள் உள்ளன. மேலும், அமைச்சகம் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறது. நாங்கள் ஆலோசனைகளை வழங்குவோம். தேவைப்படும்போது சோதனை செய்வதற்கான வழிகாட்டுதல்களைத் திருத்துவோம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"