coronavirus cases india, india coronavirus update, coronavirus latest news, covid-19 tracker, indian express,coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak
Amitabh Sinha
Advertisment
Coronavirus (COVID-19): கொரோனா பாதிப்பில் தேசிய அளவில் மகாராஷ்டிரா முன்னிலை வகித்து வரும் நிலையில், குஜராத் மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளது. ஏப்ரல் 15ம் தேதி நிலவரப்படி 766 என்ற அளவில் இருந்த கொரோனா பாதிப்பு, ஏப்ரல் 22ல், 2,407 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் நிகழ்ந்த மரணங்களின் அடிப்படையிலும், குஜராத் மாநிலத்தில் ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 3 மடங்கு அளவிற்கு மரணங்கள் அதிகரித்துள்ளன. ஏப்ரல் 15ம் தேதி நிலவரப்படி, குஜராத்தில் 36 பேர் மரணமடைந்திருந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்தது. கொரோனா பாதிப்பில் ஏற்பட்ட மரணங்களின் அடிப்படையிலான பட்டியலில், மகாராஷ்டிரா (270) முதலிடத்திலும், குஜராத் (103) 2ம் இடத்திலும் உள்ளது.
ஏப்ரல் 22ம் தேதி மட்டும் இந்தியாவில் புதிதாக 1273 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா பாதிப்பு இருப்பவர்களின் எண்ணிக்கை 21,248 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 1273 பேரில் 80 சதவீதத்தினர் அதாவது 1017 பேர், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 431 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,649 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் உள்ள கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதி மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் 2 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்பு கொண்ட இரண்டாவது மாநிலமாக குஜராத் உள்ளது. ஏப்ரல் 22ம் தேதி மட்டும் அங்கு புதிதாக 229 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 2407 ஆக அதிகரித்துள்ளது. 179 குணமடைந்த நிலையில் மருத்துவமனைகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மட்டும் கொரோனா பாதிப்பிற்கு 30 பேர் மரணமடைந்துள்ள நிலையில், தேசிய அளவில் மரணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 650 ஆக அதிகரித்துள்ளது. இதில் 20 மரணங்கள், மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் புனே நகரங்களில் பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பில் இந்த இரு நகரங்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. மரணங்களும் இங்கு அதிகளவில் பதிவாகி வருகின்றன.
கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா , தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களையும் சேர்த்து நேற்று 124 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 5 நாட்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. இந்த பகுதிகளில் 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுள் அசாம் மாநிலத்தில் 34 பேருக்கும், மேகாலயா மாநிலத்தில் 11 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil