கடந்த வெள்ளிக்கிழமை முதன்முறையாக, நாட்டில் கொரோனா ஆபத்தில் இருந்து குணமடைவர்களின் எண்ணிக்கை, கண்டறியப்பட்ட புதிய எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது. அதாவது வெள்ளிக்கிழமை 11,264 நோயாளிகள் குணம் அடைந்தனர், 7,964 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதிக அளவிலான நோயாளிகள் குணம் பெற்றிருப்பதை அடுத்து, சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை மே 29ஆம் தேதி 89.987 என்பதில் இருந்து மே- 30ம் தேதியன்று 86.422 என்று குறைந்தது.
ஆனால். ஒரே நாளில் 11,264 பேர் குணமடைந்தது என்பது ஏட்டு அளவில் (நடைமுறையில் ஒரே நாளில் குணமடையவில்லை) என்பதை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மகாராஷ்டிரா நிர்வாகம், கடந்த நாட்களில் முறையாக பதிவு செய்யாத நூற்றுக்கணக்கான குணமடைந்தவர்கள் பற்றிய தகவலை ஒன்றாக இணைத்து, வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அம்மாநிலத்தில் வழக்கமாக ஒவ்வொரு நாளும் 700 முதல் 1400 பேர் வரை குணமடைந்ததாக அறிவிக்கப்படும். ஆனால், வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 8,381 பேர் குணமடைந்ததாக அறிவித்தது.
ஆகையால், குணம் அடையும் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை 47.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய நாளில் 42.89 சதவீதமாக இது இருந்த நிலையில், இப்போது 4.51 சதவீதம் அதிகரித்துள்ளது.
சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளை விட குணம் அடையும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கொரோனா பரவல் வீழ்ச்சியின் அறிகுறியாக கருதப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் உச்ச நிலையை அடைந்த பின்னர் இந்தியாவில் இந்த அறிகுறிகள் காட்டத் தொடங்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், அந்த நிலையை இன்னும் இந்தியா நெருங்க கூட இல்லை. நாம் இன்னும் ஏறு முகத்தில் தான் உள்ளோம். உச்சநிலையை எப்போது எட்டுவோம்? என்பதற்கான மதிப்பீடு கூட நம்மிடம் இல்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஆகவே, வெள்ளிக்கிழமை , குணம் அடையும் நோயாளிகளின் எண்ணிக்கையை சரிசெய்தலால் ஏற்பட்ட மாறுபாடே தவிர, நோய் மேலாண்மைக்கு கிடைத்த வெற்றியாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது.
எவ்வாறாயினும், தற்போது சில நாட்களாக மற்றொரு அறிகுறி தென்படுகிறது. தினசரி இறப்பு எண்ணிக்கை தற்போதெல்லாம் 150 ஐ தாண்டுகிறது. சனிக்கிழமையன்று, நாடு முழுவதும் 193 பேர் கொரோனா தொற்றால் உயிர் இழந்தனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 5,164-க உயர்ந்துள்ளது. மரண விகிதம் 2.86 சதவீதமாக உள்ளது. கொரோனா பாதிப்பு முதன் முதலாக கண்டறிந்த சீனா நாட்டில் 4,700 க்கும் குறைவானவர்களே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த இறப்பு எண்ணிக்கையில் 70 சதவீதம் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து பதிவாகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் சராசரியாக தினமும் 80 முதல் 100 கொரோனா இறப்புகளைப் பதிவு செய்கிறது, குஜராத் மாநிலத்தில் 20-40 பேர் என்ற எண்ணிக்கையில் தினசரி உயிரிழப்பு பதிவாகிறது.
டெல்லி, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களும் அதிக அளவிலான இறப்புகளை ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையிலான பதிவு செய்கின்றன.
சனிக்கிழமையன்று, ஹரியானா மாநிலத்தில் மீண்டும் இருநூறுக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் கண்டரியப்பட்டன. மேலும், அந்த மாநிலம் தற்போது கொரோனா பரவலில் மோசமான கட்டத்தில் இருப்பதாக தெரிகிறது. தேசியளவில் நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம், கடந்த 3 நாட்களில் 15.4 நாட்கள் என உயர்ந்திருக்கும் நிலையில், ஹரியானா மாநிலத்தில் இரட்டிப்பாகும் காலம் வெறும் ஒன்பது நாட்களாக உள்ளன.
சனிக்கிழமையன்று, டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியது. அதே நேரத்தில் அசாம், பீகார், ஒடிசா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து அதிக அளவிலான பாதிப்புகளை உறுதி செய்துவருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.