Advertisment

கொரோனா பரிசோதனை: வேகம் பிடிக்கும் உ.பி., தமிழ்நாடு- மஹாராஷ்டிரா நிலை என்ன?

Coronavirus News: மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது உத்தரபிரதேசம் எண்ணிக்கையில் மிகவும் பின்தங்கியிருந்தது.

author-image
WebDesk
New Update
coronavirus, coronavirus news, covid 19, india covid 19 cases, coronavirus india update, coronavirus cases today update, coronavirus cases, கொரோனா வைரஸ், உத்தரப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தில் அதிகரிக்கும் கொரோனா பரிசோதனை, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, delhi corona news, delhi coronavirus news, gujarat coronavirus, west bengal coronavirus, up coronavirus news, maharashtra coronavirus, mumbai coronavirus, tamil nadu coronavirus cases, chennai coronavirus cases

Coronavirus News

Coronavirus Tamil News: கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கண்டறிய உத்தரப் பிரதேசம் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளை சோதித்த முதல் மாநிலமாக திகழ்கிறது. கொரோனா வைரஸ் பரிசோதனை செயல்பாட்டில், இந்த செயல்பாட்டில், உத்தரப் பிரதேசம் இதுவரை சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் அடிப்படையில் மகாராஷ்டிராவை முந்தியுள்ளது.

Advertisment

உத்தரபிரதேசம் தற்போது வரை 19.41 லட்சம் மாதிரிகள் சோதனை செய்துள்ளது. மகாராஷ்டிரா 19.25 லட்சம் சோதனை செய்துள்ளது. தற்போது வரை 24.14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதித்துள்ள தமிழகம் இன்னும் சோதனை புள்ளிவிவரங்களில் பெரிய அளவு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.

சோதனை செய்யப்பட்ட நபர்களின் உண்மையான எண்ணிக்கை இந்த எண்ணிக்கையை விட குறைவாக இருக்கும். ஏனெனில், பலர் பல முறை பரிசோதனை செய்யப்படுகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில், எல்லோரும் வெளியேற்றப்படுவதற்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்டனர். உதாரணமாக, தமிழ்நாட்டில் இதுவரை 23.24 லட்சம் பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலான மாநிலங்கள் சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கையைப் பற்றிய தகவல்களை மட்டுமே வழங்குகின்றன. ஆனால் ,எத்தனை பேர் பரிசோதனை செய்தார்கள் என்ற நபர்களின் எண்ணிக்கையை பற்றிய தகவல்களை வழங்கவில்லை.

கடந்த ஒரு மாதத்தில் விரைவான ஆன்டிஜென் பரிசோதனையை பரவலாக பயன்படுத்தியதன் மூலம் உத்தரபிரதேசத்தில் மேம்படுத்தப்பட்ட பரிசோதனை சாத்தியமாகியுள்ளது. அரை மணி நேரத்திற்குள் முடிவுகளை வழங்கும் ஆன்டிஜென் பரிசோதனைகள் மூலம் உத்தரபிரதேசத்தில் தினசரி நடைபெறும் பரிசோதனைகளில் பாதி சோதனைகள் செய்யப்படுகின்றன. கொரோனா வைரஸ் இருப்பதைக் கண்டறிவதில் மிகவும் உறுதியானதாகக் கருதப்படும் நிலையான ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனைகளைப் பயன்படுத்தியபோது, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது உத்தரபிரதேசம் எண்ணிக்கையில் மிகவும் பின்தங்கியிருந்தது. ஆரம்பத்தில் இருந்தே அதிக பரிசோதனைகளை செய்துவரும் இந்த இரண்டு மாநிலங்களும் நாட்டிலேயே அங்கீகாரம் பெற்ற பரிசோதனை மையங்களின் பரந்த நெட்வொர்க்கைக் கொண்டுள்ளன. உண்மையில், ஜூன் தொடக்கத்தில், இந்த இரண்டு மாநிலங்களுடன் ஒப்பிடும்போது உத்தரபிரதேசம் பாதி எண்ணிக்கையிலான பரிசோதனைகளை மட்டுமே நடத்தியது.

தமிழ்நாடும் மகாராஷ்டிராவும் ஆன்டிஜென் பரிசோதனைகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதனால், 2 மாநிலங்களும் இப்போது ஒரு மாதத்திற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது தினமும் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனை செய்ய முடிகிறது.

ஒட்டுமொத்த நாட்டைப் பொறுத்தவரை, பரிசோதனை எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் ஐந்து லட்சத்திற்கும் அதிகம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தொடக்கத்தில், ஒவ்வொரு நாளும் சில நூறு சோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட முடிந்தது. ஏனென்றால் மிகச் சில ஆய்வகங்கள்தான் பரிசோதனை செய்ய அங்கீகாரம் பெற்றிருந்தன. மேலும், சோதனை கருவிகளின் பற்றாக்குறையும் இருந்தது. ஆனால், அந்த இடையூறுகள் இப்போது நீக்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை நாடு விரைவில் ஒரு நாளைக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்யும் என்று கூறினார். பிரதமர் மோடி மும்பை, கொல்கத்தா மற்றும் நொய்டாவில் தலா மூன்று பெரிய பரிசோதனை வசதிகள் தொடக்க விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.

இதுவரை, நாட்டில் 1 கோடியே 73 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சோதனை அதிகரிப்பு நோய்த்தொற்றுடையவர்களைக் கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்தது. இது முழுமையான எண்ணிக்கை அல்ல பரிசோதனை எண்ணிக்கை தற்போது 1.5 மில்லியனை நெருங்கியுள்ளது. விகிதாச்சர அளவிலும் அதிக அளவில் உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று விகிதம், அல்லது பரிசோதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேர்மறையானவர்களாக மாறும் நபர்களின் விகிதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மே தொடக்கத்தில் சுமார் 3.75 சதவீதத்திலிருந்து இப்போது 8.56 சதவீதமாக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்பட்ட ஒவ்வொரு 100 பேரில் நான்கு பேருக்கும் குறைவானவர்கள் மே மாத தொடக்கத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இப்போது இந்த எண்ணிக்கை எட்டுக்கும் அதிகமாக உள்ளது. நேர்மறை விகிதங்கள் வெவ்வேறு நகரங்கள் மற்றும் மாநிலங்களில் பரவலாக வேறுபடுகின்றன. சில இடங்களில் சுமார் மூன்று சதவீதம் முதல் மற்றவர்களில் 20 முதல் 25 சதவீதம் வரை வேறுபடுகின்றன.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களும் திங்கள்கிழமை 1 லட்சம் பரிசோதனை எண்ணிக்கையை தாண்டியது. ஆனால், இது அவர்களின் மொத்த தொற்று எண்ணிகை சுமையுடன் தொடர்புடையது. ஆந்திரா திங்கள்கிழமை 6,000க்கும் மேற்பட்ட புதிய தொற்று வழக்குகளைக் கண்டறிந்தது. இது கடந்த சில நாட்களாக 8,000 அளவிலிருந்து குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டது. அதே நேரத்தில் கர்நாடகா மேலும் 5,300 நோய்த்தொற்றுகளைக் கண்டறிந்தது. இரு மாநிலங்களிலும் இப்போது ஒரு கட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய அளவிலும் தினசரி புதிய கொரோனா வைரஸ் தொற்று வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நாடு முழுவதும் 47,700க்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் கண்டறியப்பட்டன. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.83 லட்சமாக உள்ளது. அதாவது நாட்டில் கிட்டத்தட்ட அரை மில்லியன் வழக்குகள் 12 நாட்களுக்குள் சேர்ந்துள்ளன. இந்த நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை இப்போது ஒரு மில்லியனை நெருங்குகிறது. அதே நேரத்தில் இதுவரை 33,400 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Maharashtra Uttar Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment