Advertisment

பலவகை கொரோனா வைரஸ்களை குறி வைக்கும் புதிய தடுப்பூசி

மெங் மற்றும் ஜீச்னர் ஆகியோர் தயாரித்துள்ள இரண்டு தடுப்பூசிகளில் ஒன்று கோவிட் -19 க்கு எதிராக பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது,

author-image
WebDesk
New Update
பலவகை கொரோனா வைரஸ்களை குறி வைக்கும் புதிய தடுப்பூசி

உலகளவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பல நாடுகளில் கொரோனா தனது 2-வது மற்றும் 3-வது அலையை வீசி வருகிறது. தற்போது இந்த வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், ஒரு புதிய தளத்தைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் ஒரு கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர், அவை எஸ்ஏஆர்எஸ்- சிஓவி-2 (SARS-CoV-2) என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, கொரோனா வைரஸின் தற்போதைய மற்றும் எதிர்கால தாக்குதல்களுக்கு எதிராக மட்டுமல்லாமல் பிற கொரோனா வைரஸ்களிலிருந்தும் பாதுகாப்பை வழங்கக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

Advertisment

மேலும் ஆரம்பகால விலங்கு பரிசோதனையில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் கொடுத்துள்ள இந்த தடுப்பூசி மலிவானது என்றும் ஒரு டோஸுக்கு $ 1, நிர்ணையிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் பி.என்.ஏ.எஸ் (PNAS) என்ற இதழில் தெரிவித்துள்ளனர்.

இந்த தடுப்பூசி எப்படி வித்தியாசமானது?

புதிய தடுப்பூசி-உற்பத்தி தளத்தை வர்ஜீனியா சுகாதார அமைப்பின் (யு.வி.ஏ) டாக்டர் ஸ்டீவன் எல் ஜீச்னர் கண்டுபிடித்துள்ள இந்த புதிய கொரோனா தடுப்பூசி, கொரோனா வைரஸின் ஒரு பகுதியை உற்பத்தி செய்யும் டி.என்.ஏ ஒருங்கிணைப்பதை இது உள்ளடக்கியது என்றும், இந்த வைரஸுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என்படி என்பதை இது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அறிவுறுத்துவதாக கூறியுள்ளனர்.

வைரஸின் ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதியை ஃப்யூஷன் பெப்டைட் என அழைக்கப்படும் இந்த தடுப்பூசி ஜீச்னர் மற்றும் வர்ஜினா டெக்கின் டாக்டர் சியாங்-ஜின் மெங் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இந்த கலவை கொரோனா வைரஸ்களிடையே அடிப்படையில் உலகளாவியது, மேலும் உலகெங்கிலும் இருந்து பெறப்பட்ட எஸ்ஏஆர்எஸ்- சிஓவி-2 (SARS-CoV-2) இன் பல மரபணு காட்சிகளில் அது ஒத்துபோவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும் "மற்ற கோவிட் -19 தடுப்பூசிகள் இணைவு பெப்டைடை குறிவைப்பதாகத் தெரியவில்லை, என்றும் ஜீச்னர் கூறியுள்ளார். தற்போது "வளர்ச்சியில் உள்ள பெரும்பாலான தடுப்பூசிகள் முழு ஸ்பைக் புரதத்தையும் அல்லது ஏற்பி பிணைப்பு களத்தையும் (RBD) குறிவைப்பதாகவும் கூறியுள்ளார்."

ஆர்.பி.டி (RBD) க்கு எதிரான ஆன்டிபாடிகள் நல்ல நடுநிலைப்படுத்தும் செயல்பாட்டை வழங்க முடியும் என்றாலும், ஆர்.பி.டி (RBD) இல் இருக்கும் பிளவுகள், ஆன்டிபாடிகளின் செயல்திறனை ஓரளவு குறைக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் “வைரஸால் ஆன ஆன்டிஜென்களை மறுபடியும் மறுபரிசீலனை செய்யும் ஒரு தடுப்பூசியை தயாரிப்பது தவறான முடிவாக இருக்கலாம். மேலும் நோயெதிர்ப்பு சக்தியின் முன்னிலையில் கூட தொடர்ந்து வாழக்கூடிய வகையில் வைரஸ் உருவாகியுள்ளது எனவும் குறியுள்ளார்.

ஒரு விதத்தில், ஒரு நோயெதிர்ப்பு ஆன்டிஜெனுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்தும் ஒரு தடுப்பூசியை உருவாக்குவது வைரஸ் நமக்காக வகுத்துள்ள ‘தந்திரங்களுக்கு’ ‘வீழ்த்தக்கூடிய ஒரு வாய்ப்பாக அமையும்’, ”என்று அவர் கூறினார்.

இந்த தடுப்பூசி எப்படி செயல்படுகிறது?

வைரஸின் ஒரு பகுதியை உருவாக்க அறிவுறுத்தும் பிற தடுப்பூசிகள் உள்ளன. இதற்கு எடுத்துக்காட்டாக, ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா ஆகியோரால் உருவாக்கப்பட்ட எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள், அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளன. கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளை  எம்.ஆர்.என்.ஏ (மெசஞ்சர் ஆர்.என்.ஏ) ஐ வழங்குகின்றன. இதில் உண்மையான வைரஸ் தாக்கும்போது, ​​நோயெதிர்ப்பு அமைப்பு ஸ்பைக்கை அடையாளம் கண்டு அதனை உயர்த்தும் என்பது இதன் கருத்து.

அப்படியானால், இணைவு பெப்டைடுக்கான குறியீட்டு வழிமுறைகளை வழங்கும் புதிய டி.என்.ஏ அடிப்படையிலான தளம் எவ்வளவு ஒத்திருக்கிறது? இது எம்.ஆர்.என்.ஏவில் இருந்து முற்றிலும் மாறுபட்டது, என்று ஜீச்னர் கூறியுள்ளார். மேலும புதிய மேடையில், இணைவு பெப்டைடுக்கான டி.என்.ஏ குறியாக்கம் ஒருங்கிணைக்கப்பட்டவுடன், அது டி.என்.ஏவின் மற்றொரு சிறிய வட்டத்தில் இணைக்கப்படுகிறது, இந்த இணைப்புக்கு பிளாஸ்மிட் என்று பெயர். இது பாக்டீரியாவிற்குள் இனப்பெருக்கம் செய்து டி.என்.ஏ பிளாஸ்மிட் பாக்டீரியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது; இந்த நுட்பம் ஈ கோலி என்ற பாக்டீரியாவை பயன்படுத்துகிறது.

எங்கள் தடுப்பூசி தயாரிக்க, நாங்கள் ஈ கோலை வளர்த்து பின்னர் அதை ஃபார்மலின் மூலம் செயலிழக்க செய்கிறோம்," என்று ஜீச்னர் கூறினார். “… பாக்டீரியாக்களை வளர்ப்பதும் அவற்றை செயலிழக்கச் செய்வது என்பது நன்கு வளர்ந்த செயல்முறை. இதைச் செய்யக்கூடிய தொழிற்சாலைகள் ஏற்கனவே உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உள்ளன. கொல்லப்பட்ட முழு செல்களை வைத்து காலரா தடுப்பூசிகளை

சோதனைகள் மற்றும் முடிவுகள் :

மெங் மற்றும் ஜீச்னர் ஆகியோர் தயாரித்துள்ள இரண்டு தடுப்பூசிகளில் ஒன்று கோவிட் -19 க்கு எதிராக பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது, மற்றொன்று போர்சின் தொற்றுநோய் வயிற்றுப்போக்கு வைரஸிலிருந்து (பி.இ.டி.வி) பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 2-வது , பன்றிகளைப் பாதிக்கும், ஒரு வைகை கொரோனா வைரஸ் ஆகும். முதன்முதலில் அமெரிக்காவில் பன்றி மந்தைகளில் தோன்றிய பி.இ.டி.வி (PEDV), ​​ நாட்டில் கிட்டத்தட்ட 10% பன்றிகளைக் கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும பி.இ.டி.வி காரணமாக ஏற்படும் நோய்களிலிருந்து பன்றிகளைப் பாதுகாக்க இரண்டு தடுப்பூசிகளும் கண்டறியப்பட்டன. ஆனால் தடுப்பூசிகள் தொற்றுநோயைத் தடுக்கவில்லை. ஆனால் அதிக அறிகுறிகளை உருவாக்காமல் பன்றிகளைப் பாதுகாத்தன.

அடுத்து என்ன?

கோவிட் -19 தடுப்பூசி உலகெங்கிலும் உள்ள ஒழுங்குமுறை நிறுவனங்களால் மக்களிடம் பயன்படுத்தப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன்னர், மனித சோதனைகள் உட்பட கூடுதல் சோதனை தேவைப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டனர். ஆனால் எஸ்ஏஆர்எஸ்- சிஓவி-2 (SARS-CoV-2)  இன் இணைவு பெப்டைட் கூட உருமாறியால் என்ன செய்வது? என்ற கேள்விக்கு "எதுவும் சாத்தியம் என்று நான் நினைக்கிறேன், என்று கூறியுள்ளார்.

ஆனால் இன்றுவரை இது கவனிக்கப்படவில்லை என்றும், இதுவரை வரிசைப்படுத்தப்பட்ட அனைத்து எஸ்ஏஆர்எஸ்- சிஓவி-2 (SARS-CoV-2) ஒரே கோர் ஃப்யூஷன் பெப்டைட் வரிசையை சரியாகப் பகிர்ந்து கொள்கிறது, மேலும் ஒவ்வொரு வரிசைப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸிலும் ஒரே மாதிரியான 6 அமினோ அமில இணைவு பெப்டைட் கோர் உள்ளது, ”என்று ஜீச்னர் கூறினார்.

பி.இ.டி.வி (PEDV) மற்றும் எஸ்ஏஆர்எஸ்- சிஓவி-2 (SARS-CoV-2) தொடர்புடையவை, ஆனால் தொலைவில் உள்ளன. "இருப்பினும், இந்த தொலைதூர தொடர்புடைய கொரோனா வைரஸ்கள் கூட அதே 13 அமினோ அமில இணைவு பெப்டைட் கோர் வரிசையைப் பகிர்ந்து கொள்கின்றன" என்றும் ஜீச்னர் குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment