நீடித்த அறிகுறிகள், கண் தொற்று, கருப்பு பூஞ்சை; 2ஆவது அலையில் புதிய பிரச்சனைகள்

New in second wave: lasting symptoms, eye infection, black fungus: இரண்டாவது அலையின் போது இரண்டாம் நிலை தொற்று மற்றும் பூஞ்சை தொற்று (கருப்பு பூஞ்சை) அதிகமாக பதிவாகியுள்ளன

New in second wave: lasting symptoms, eye infection, black fungus: இரண்டாவது அலையின் போது இரண்டாம் நிலை தொற்று மற்றும் பூஞ்சை தொற்று (கருப்பு பூஞ்சை) அதிகமாக பதிவாகியுள்ளன

author-image
WebDesk
New Update
நீடித்த அறிகுறிகள், கண் தொற்று, கருப்பு பூஞ்சை; 2ஆவது அலையில் புதிய பிரச்சனைகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் இரண்டாவது அலை தொற்றின், தீவிரம் மற்றும் அறிகுறிகள் முதல் அலையை விட வேறுபட்டதாக இருக்கிறது. வல்லுநர்கள் நீண்ட கொரோனா நோய்க்குறி அல்லது ஆரம்ப நோய்க்குப் பிறகு நீண்ட காலமாக கொரோனா நோய்தொற்றின் நிலைத்தன்மை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisment

கொரோனா அறிகுறிகள், முன்பும் & இப்போதும்

வறட்டு இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற சில அறிகுறிகள் இரண்டு அலைகளிலும் ஒத்திருந்தன. கண் தொற்று, செவிப்புலன் பிரச்சினைகள் மற்றும் தளர்வான இயக்கம் போன்ற சில கூடுதல் அறிகுறிகள் இரண்டாவது அலையின் போது அடிக்கடி காணப்பட்டன.

"இரண்டாவது அலையின் போது இரண்டாம் நிலை தொற்று மற்றும் பூஞ்சை தொற்று (கருப்பு பூஞ்சை) அதிகமாக பதிவாகியுள்ளன" என்று புது தில்லி செயின்ட் ஸ்டீபன் மருத்துவமனையின் சமூக சுகாதாரத் துறையின் நிபுணர் டாக்டர் அபா மங்கல் கூறினார்.

Advertisment
Advertisements

"முதல் அலையின் அறிகுறிகள் காய்ச்சல் போன்றவை, ஆனால் இரண்டாவது அலைகளில் இரைப்பைக் குழாயில் தொற்று பாதிப்பு போன்ற எந்த அளவுகோல்களுக்கும் பொருந்தாத அறிகுறிகள் இருந்தன" என்று மகாராஷ்டிரா அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு தொழில்நுட்ப ஆலோசகர் டாக்டர் சுபாஷ் சலூங்கே கூறினார்.

இந்தியாவில் இரண்டாவது அலையின் தாக்கங்கள் குறித்து தி லான்செட் சுவாச மருத்துவத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தில், வல்லுநர்கள் இரண்டாவது அலை சுழல் பாதிப்புகளின் வடிவத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியதாகவும், அத்தியாவசிய சிகிச்சையின் சப்ளைகளைக் குறைத்ததாகவும், குறிப்பாக இளைஞர்களில் இறப்பு அதிகரித்ததாகவும் எழுதியுள்ளனர். "இரண்டாவது அலை ஏன் முதல் அலையை விட ஆபத்தானது என்பதைப் புரிந்துகொள்வது எதிர்கால கட்டுப்பாட்டு உத்திகளைக் உருவாக்குவதற்கான நோயறிதலின் சாத்தியமான பகுதிகளை அடையாளம் காண உதவும்" என்று அவர்கள் எழுதியுள்ளனர்.

அதிக இளம் நோயாளிகள்

டாக்டர் மங்கல் போன்ற நிபுணர்களின் கூற்றுப்படி, இரு அலைகளிலும் உள்ள பாதிப்புகளின் புள்ளிவிவர தொகுப்பு சில வேறுபாடுகளுடன் ஒத்திருக்கிறது. வயதானவர்களிடையேயும், இணை நோயுடையவர்களிடையேயும் இறப்பு அதிகமாக இருந்தபோதிலும், இளைஞர்கள் முதல் அலைகளை விட இரண்டாவது அலைகளின் போது அதிக இறப்பை சந்தித்தனர். அதிகமான இளையவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஹைபோக்ஸியாவின் ஆரம்ப கால வெளிப்பாட்டை எதிர்கொண்டனர் என்று புனேவைச் சேர்ந்த தொற்று நோய்கள் நிபுணர் டாக்டர் பரிக்ஷித் பிரயாக் தெரிவித்தார்.

ஐ.சி.எம்.ஆர் அறிக்கையின்படி, தொற்று பாதிப்புகளின் சராசரி வயது முதல் அலைகளில் 50 ஆண்டுகள் மற்றும் இரண்டாவது அலைகளில் 49 ஆகும். இரண்டாம் அலையில் அதிகமான அறிகுறியற்ற நோயாளிகள் இருந்தனர், ஆனால் இரண்டு அலைகளுக்கு இடையிலான இறப்பு விகிதம் வேறுபட்டதல்ல.

அதிக தீவிரம்

வட இந்தியாவிலிருந்து ஒரு பெரிய புதிய ஆய்வு, முன்கூட்டிய வெளியிடப்பட்ட பதிவில், இரண்டாவது அலைகளில் தொற்று நோயின் ஒட்டுமொத்த அதிதீவிரத்தன்மையையும், குறிப்பாக இளம் நோயாளிகளில் அதிக இறப்பு விகிதங்களையும் கண்டறிந்துள்ளது என்று புது தில்லி மேக்ஸ் சிறப்பு மருத்துவமனையின், இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்னல் மெடிசினின் மூத்த இயக்குநர் டாக்டர் சந்தீப் புதிராஜா தெரிவித்தார்.

பத்து மருத்துவமனைகளின் வலையமைப்பில் அனுமதிக்கப்பட்ட முதல் அலையின் 14,000 பாதிப்புகள் மற்றும் இரண்டாவது அலையின் 5,000 பாதிப்புகளின் பதிவுகளை இந்த ஆய்வு மதிப்பீடு செய்தது. முதல் அலையில் 32.7% பேர் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளான நிலையில், இரண்டாவது அலைகளில் சற்று அதிகமாக 39.4% நோயாளிகளுக்கு கடுமையான பாதிப்புகள் இருந்தன. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற இணை நோயுடைய நோயாளிகளின் எண்ணிக்கையும் இரண்டாவது அலைகளில் அதிகமாக இருந்தது (இரண்டாம் அலையில் 59.7%, முதல் அலையில் 54.8%). நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது நோயின் தீவிரம் அதிகமாக இருந்தது. இதனால் ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகமாக இருந்தது.

நீண்ட கொரோனா நோய்க்குறி

இரண்டாவது அலை நீடித்த நீண்ட கொரோனா நோய்தொற்றை கொண்டிருந்தது. இதன் அம்சங்கள் முக்கியமாக சோர்வு, மூளையின் மந்ததன்மை மற்றும் நரம்புத்தசை சிக்கல்கள் என்று மகாராஷ்டிராவின் கொரோனா பணிக்குழுவின் நிபுணர் டாக்டர் சஷாங்க் ஜோஷி கூறினார். "நுரையீரல் மற்றும் இதய சிக்கல்களை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம், ஆனால் மூளை மந்ததன்மை மற்றும் சோர்வு போன்ற முக்கிய அறிகுறிகளிலிருந்து இரண்டாவது அலையில் ஏராளமான மக்கள் மீண்டுள்ளனர்."

கொரோனா சிகிச்சைக்கு பிந்தைய விழிப்புணர்வின் தேவை இரண்டாவது அலைகளில் 100 நாட்கள் வரை இருக்கும் என்று டாக்டர் ஜோஷி கூறினார். முதல் அலையில், இது பெரும்பாலும் 2 வாரங்கள் தான்.

மும்பையின் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் தொற்று நோய்கள் நிபுணர் டாக்டர் கீர்த்தி சப்னிஸ் கூறுகையில், ஏராளமான நோயாளிகளுக்கு லேசான மற்றும் மிதமான தொற்று ஏற்பட்டாலும் கூட கொரோனாவிற்கு பிந்தைய நோய்க்குறி உள்ளது. இதில் சோர்வு, பதட்டம் மற்றும் அவ்வப்போது மூச்சுத் திணறல் ஆகியவை அடங்கும். "குறிப்பாக நோய்வாய்ப்பட்ட மற்றும் ஐ.சி.யுவில் உள்ளவர்கள் பலவீனத்தால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக வீட்டிலும் நீண்டகால ஆக்ஸிஜன் பராமரிப்பு தேவைப்படலாம்" என்று டாக்டர் சப்னிஸ் கூறினார்.

பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று

அசாதாரண பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுக்கள் ஏற்பட்டு உள்ளன, மேலும் நீரிழிவு மற்றும் ஸ்டீராய்டு சிகிச்சையிலிருந்து சுயாதீனமான மியூகோமைகோசிஸ் (கருப்பு பூஞ்சை) கூட ஏற்பட்டுள்ளது என்று டாக்டர் ஜோஷி கூறினார்.

" கால்களுக்கு இரத்த ஓட்ட தடை மற்றும் ஊனத்திற்கு வழிவகுக்கும், தமனி த்ரோம்போசிஸின் பாதிப்புகளை கால்களை நாங்கள் கவனித்து வருகிறோம். சில கொரோனா நோயாளிகளில் இரத்தப்போக்கு காணப்படுவதால், அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு ஆன்டிகோஆகுலேஷன் மருந்துகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள், ”என்று தேசிய கொரோனா பணிக்குழுவின் நிபுணர் டாக்டர் சஞ்சய் பூஜாரி கூறினார். "இந்த பிரச்சனை கண்காணிக்கப்பட வேண்டும். இரத்தப்போக்கு பிரச்சனையில் மருத்துவர் கண்காணிப்பு இல்லாமல் ஆண்டி- கோகுலண்டு மருந்துகளை எடுத்துக்கொள்வது ஒருவருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்," என்று சஞ்சய் கூறினார். "மேலும், சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிகளின் இரத்த துணைப்பிரிவுகளை அடையாளம் காண வேண்டிய அவசியம் உள்ளது, அவை இரத்தத்தை மெல்லியதாக வைக்கலாம்."

பரவலின் இயல்பு

முதல் அலைகளில், சுமார் 100 மாவட்டங்களில் 75% தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் இரண்டாம் அலையில் 40 மாவட்டங்கள் 75% பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது தொற்று மாறுபாட்டின் காரணமாக இரண்டாம் அலையில் பரவல் விகிதம் அதிகமாக இருந்தது என்று கூறுகிறது.

முதல் அலையானது உள்ளூர் மாறுபாடு இல்லாத SARS Cov-2 வைரஸால் ஏற்பட்டது. ஆனால், இரண்டாவது அலையில் தொற்று பாதிப்பு பெரும்பாலும் டெல்டா மாறுபாட்டின் காரணமாக இருந்தது. இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் உச்சம் அடைந்த இரண்டாவது அலைக்கு பல காரணிகள் பங்களித்திருக்கலாம் என்றாலும், வல்லுநர்கள் இது பி .1.617 மாறுபாடு மற்றும் அதன் துணை வம்சாவளியான பி .1.617.2 (டெல்டா) ஆகியவற்றால் தூண்டப்பட்டிருக்கலாம் என்று கூறினர். இரண்டாவது அலைக்கு முன்னர் இந்திய மக்கள் தொகையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் மாறுபாடாக இருந்த ஆல்பாவை விட இவை அதிக அளவில் பரவக்கூடியவை மற்றும் ஒருவேளை மிகவும் ஆபத்தானவை என்று சான்றுகள் கூறுகின்றன.

இந்தியன் சொசைட்டி ஆஃப் கிரிட்டிகல் கேர் மெடிசின் முன்னாள் தலைவர் டாக்டர் கபில் சிர்பே, முதல் அலையின் போது, ​​அலைகளின் வடிவத்தையும் தடுப்பு நடவடிக்கைகளையும் புரிந்து கொள்ள ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு சோம்பல் இருந்தது என்று கூறினார். "எதிர்காலத்தில் குறைந்தபட்சம் 70% மக்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வரை அதிக அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு குறுகிய காலத்தில் எழுச்சியை எவ்வாறு தடுப்பது என்பதுதான் பிரச்சினை. ” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Symptoms Corona Black Fungus

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: