Advertisment

சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு:  2015-ம் ஆண்டு பெருவெள்ளத்துடன் இருந்த ஒற்றுமைகள், வேறுபாடுகள்

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பேரிடர், 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது - பல பத்தாண்டுகளில் பெய்த அதிக கனமழையாலும் மற்றும் மோசமான நீர்த்தேக்க நிர்வாகத்தின் விளைவாக இந்த பேரிடர் ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
Michaung Cyclone

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையின் போது வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றிய காட்சி. (PTI புகைப்படம்)

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பேரிடர், 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது - பல பத்தாண்டுகளில் பெய்த அதிக கனமழையாலும் மற்றும் மோசமான நீர்த்தேக்க நிர்வாகத்தின் விளைவாக இந்த பேரிடர் ஏற்பட்டது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Cyclone Michaung batters Chennai: Similarities, differences from the 2015 floods

சென்னையில் வரலாறு காணாத வெள்ளம் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) 8 ஆக உயர்ந்தது. அதிகாரிகளின் தகவல்படி, 18,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து நகரைச் சுற்றியுள்ள நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆந்திராவில் நெல்லூர் மற்றும் கவாலி இடையே கரையைக் கடந்த மிக்ஜாம் புயலா இந்த வெள்ளம் ஏற்பட்டது.

இந்த பேரிடம் 2015-ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது - பல தசாப்தங்களில் பெய்த அதிக கனமழை மற்றும் மோசமான நீர்த்தேக்க நிர்வாகத்தின் விளைவாக இந்த பேரிடர் ஏற்பட்டது. 2015-ல் என்ன நடந்தது மற்றும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து சமீபத்திய வெள்ளம் எவ்வாறு வேறுபட்டது என்பதை இங்கே பார்க்கலாம்.

2015-ல் என்ன நடந்தது?

2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளம், திங்கள்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டு இருந்தது. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது.

செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம், அதன் முழு கொள்ளளவிற்கு அருகில் வந்தபோது, அபாயகரமான விகிதத்தில் அடையாறு ஆற்றில் தண்ணீரை வெளியேற்றத் தொடங்கியபோது இந்த நெருக்கடி தொடங்கியது. டிசம்பர் 1, 2015 அன்று, தொடர் மழையால் நீர்த்தேக்கம் 3,396 மில்லியன் கன அடியாக நிரம்பியது. அன்று மாலைக்குள் பொறியாளர்கள், ஏரியின் கரை உடைந்துவிடுமோ என பயந்து, 29,400 கன அடி நீரைத் திறந்துவிட்டனர். இது அந்த மாத இறுதியில் பதிவான 900 கன அடி நீர்வெளியேற்றத்தில் இருந்து பெரும் அதிகரிப்பு ஆகும்.

இந்த தண்ணீர் திறப்பு போதுமான பொது அறிவிப்பு எச்சரிக்கை இல்லாமல் திறக்கப்பட்டதால், பரவலான குழப்பத்திற்கு வழிவகுத்தது. டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவில், அடையாறு ஆற்றின் 4 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகள் நீரில் மூழ்கின.

நவம்பர் 28-ம் தேதி முதல் கனமழை எச்சரிக்கை விடப்பட்டது, 50 மி.மீ மழை பெய்யும் என்று முன்னறிவிப்பு செய்யப்பட்டது, ஆனால் செம்பரம்பாக்கத்திலிருந்து வெளியேறும் நீர் படிப்படியாக அதிகரிக்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு, சென்னையில் 14 மணி நேரத்தில் 200 மிமீ மழை பெய்ததால் நிலைமை மோசமடைந்தது, இது நிலைமையை மேலும் மோசமாக்கியது.

அப்போது மோசமான நீர்த்தேக்க மேலாண்மை கடுமையாக விமர்சிக்கப்பட்டது - முந்தைய எச்சரிக்கைகளை கவனிக்காமல், பொதுமக்களையோ அல்லது அவசரகால சேவைகளையோ எச்சரிக்காமல் திடீரென அதிக அளவு தண்ணீரை வெளியேற்றியது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

எனவே, 2015-ல் ஏற்பட்ட வெள்ளம், இந்த முறை போல, இயற்கை காலநிலையை விட, நீர்த்தேக்கத்தின் தவறான நிர்வாகத்தின் விளைவு என்று கூறலாம்.

இந்த முறை வெள்ளத்தில் என்ன வித்தியாசம்?

2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் போல இல்லாமல், தற்போதைய வெள்ளம் மிக்ஜாம் புயலின் நேரடி விளைவாக இருந்தது.

சென்னையில் திங்கள்கிழமை ஒரே நாளில் 24 செ.மீ மழை பெய்துள்ளது, இது 2015-ல் பதிவான 29 செ.மீ மழையை விட சற்று குறைவாக மழை பெய்துள்ளது. இருப்பினும், இந்திய வானிலை ஆய்வு மையம் 21 செ.மீ மற்றும் அதற்கு மேற்பட்ட மழைப்பொழிவை அதி கனமழை என்று வகைப்படுத்துகிறது, இது தற்போதைய சூழ்நிலையின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

நுங்கம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் திங்கள்கிழமை மாலை வரை 35 மணி நேரத்தில் 43 செ.மீ மழை பதிவாகியுள்ளது, இது இந்த காலநிலை நிகழ்வின் அசாதாரண தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

மிக்ஜாம் புயல் சென்னையை எப்படி பாதித்துள்ளது?

சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் தாக்கத்தின் பின்விளைவுகள் குறிப்பிடத்தக்க பேரிடரை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிக்ஜாம் புயல் 8 பேரின் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. மேலும், சென்னை நகர எல்லைக்குள் 6,000 பேர் உட்பட சுமார் 18,729 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மிக்ஜாம் புயலால் இடைவிடாமல் பெய்த மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அடையாறு ஆற்றின் வெள்ளப் பாதையில் கட்டப்பட்டுள்ள சென்னை விமான நிலையம், செயல்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டி இருந்தது. கிட்டத்தட்ட 300 விமானங்கள் பாதிக்கப்பட்டது, 1,500 க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கித் தவித்தனர். தெற்கு ரயில்வே பல நீண்ட தூர ரயில்களை ரத்து செய்தது. மற்ற ரயில்கள் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டன. குறிப்பாக சென்னையின் மேடவாக்கம், கீழ்கட்டளை, முடிச்சூர் போன்ற தாழ்வான பகுதிகள் 3-4 அடிக்கு கீழ் நீரில் மூழ்கின.

நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஏரியும் முழு கொள்ளளவை எட்டியதால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. சென்னை-திருச்சி நெடுஞ்சாலை கடுமையாக பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையின் தரை தளம் வெள்ளத்தில் மூழ்கியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி மற்றும் பிற அரசு துறைகளின் முயற்சிகள் இருந்தபோதிலும், திங்கள்கிழமை பல சாலைகள் செல்ல முடியாத நிலையில் இருந்தன. பரவலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மிக்ஜாம் புயலின் தாக்கம் சென்னையில் தொலைத்தொடர்புகளை கடுமையாக பாதித்தது, தொலைபேசி சேவைகள், செல்போன் நெட்வொர்க்குகள் மற்றும் இணையம் உள்ளிட்ட அத்தியாவசிய தகவல் தொடர்பு நெட்வொர்க்குகளை நிறுத்தியது. சென்னை முழுவதும் உள்ள பல டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்கள், இணையச் சேவைகள் மற்றும் மொபைல் இணைப்புகள் பாதிக்கப்பட்டு தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.

அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிறுவனமான டான்ஜெட்கோவின் மின்தடைக்குப் பிறகு ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி பெரிய டிரான்ஸ்ஃபார்மர்கள் செயல்பட்டாலும், தாழ்வான பகுதிகளில் சிறிய பரிமாற்றங்கள் சிக்கல்களை எதிர்கொண்டன. தாம்பரம், அடையாறு, கெல்லிஸ் மற்றும் வேளச்சேரியில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர்கள் குறிப்பாக பாதிக்கப்பட்டன, வெள்ளத்தில் இருந்து சேதத்தைத் தடுக்க உபகரணங்கள் மூடப்பட்டன.

மிக்ஜாம் புயலின் தாக்கம் ஏன் மிகவும் கடுமையாக உள்ளது?

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், நிலைமையின் தீவிரத்திற்கு மூன்று முக்கிய காரணிகள் காரணம் என்று கூறினார்.

முதலாவதாக, மிக்ஜாம் புயலின் அமைப்பு கரையோர பகுதிகளில் அதன் தாக்கத்தை கணிசமாக அதிகரித்தது. மிக்ஜாம் புயல் மிக அருகில், வெறும் 90 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது, முந்தைய புயலுடன் ஒப்பிடும் போது இது ஆபத்தான தூரம்.

இரண்டாவதாக, மிக்ஜாம் புயல் பொதுவாக மணிக்கு 10 முதல் 18 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், அதன் வேகத்தை வெறும் 7 கிமீ வேகத்தில் குறைந்து, 5 கிமீ வேகத்தில் நகர்ந்தது.

மூன்றாவது மற்றும் அனேகமாக மிக முக்கியமான காரணியாக அது நிலையாக இருக்கும் போது புயல் அமைப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்த தீவிரம், கடற்கரைக்கு மிக அருகில் நிகழும், கனமழை மற்றும் நீடித்த மழை பெய்ய வழிவகுத்தது. புயலின் மெதுவாக நகரும் தன்மை ஈரப்பதத்தை அதிகரித்து, நிலைமையை மோசமாக்கியது.

அதிகாரிகள் எப்படி நடவடிக்கை எடுத்தார்கள்?

சென்னை ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் திங்கள்கிழமை அன்றும் மழையின் தாக்கத்தை எதிர்கொண்டதால், நகரின் நீர் மேலாண்மை சிக்கலானது. முக்கியமான நீர்த்தேக்கமான செம்பரம்பாக்கம் ஏரியை பொதுப்பணித் துறை உன்னிப்பாகக் கண்காணித்து வந்தது.

நீர்வரத்து அதிகரித்து வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உபரி நீரின் அளவை 6,000 கன அடியில் இருந்து 8,000 கன அடியாக பொதுப் பணித்துறை உயர்த்தியது. இதைத் தொடர்ந்து, நீர்வரத்து 12,000 கனஅடியாக அதிகரித்ததால், படிப்படியாக வெளியேற்றும் உத்திகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் 500 கனஅடி வீதம் அதிகரித்து, இறுதியில் 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு நீர் வெளியேற்றத் தொடங்கியது.

மேலும், மற்றொரு குறிப்பிடத்தக்க நீர்நிலையான பூண்டி நீர்த்தேக்கத்தில், அதன் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து சுமார் 6,000 கனஅடி நீர் வரத்து காரணமாக அதிகாரிகள் 17,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Rain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment