திங்கள் (ஏப்ரல் 6) காலை நிலவரப்படி, COVID-19 இன் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 4,067 ஆகும். மகாராஷ்டிராவில் (690), தமிழகம் (571), டெல்லி (503) ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் உள்ளன.
மொத்தம் 109 பேர் இதுவரை இந்த நோயால் இறந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த நோய்க்கு இறப்பு விகிதம் சுமார் 2.7 ஆகும். மகாராஷ்டிராவில் (45) அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
கொரோனா ஆய்வு: கர்ப்பிணிகள் போதிய கண்காணிப்பில் இருக்க வேண்டுமா?
COVID-19 வழக்குகளின் மாவட்ட வாரியான பாதிப்பை அறிவது முக்கியம், ஏனென்றால், இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிவித்தபடி, மொத்த பாஸிட்டிவ் பாதிப்புகளில் 80% க்கும் மேற்பட்டவை, நாடு முழுவதும் 62 மாவட்டங்களில் இருந்து மட்டுமே ஏற்பட்டிருக்கின்றன.
தற்போதைய லாக்டவுன் அறிவிக்கப்பட்டது வரை, இந்த 62 மாவட்டங்களும் ஏப்ரல் 14 க்கு அப்பால் தீவிர நோய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக அடையாளம் காணப்படக்கூடியவையாகும்,
உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள், பாதிப்புகளை எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையைப் போன்றதல்ல என்பதை அடிக்கோடிட்டுக் காட்டி வருகின்றனர் - சோதனை என்பது ஒரே அளவில் கடுமையாக இருக்கவில்லை என்ற உண்மையின் அடிப்படையில் ஒரு வேறுபாடாகும்.
Explained: மது அருந்தினால் கொரோனா வைரஸை தடுக்க முடியுமா?
இந்த சோதனை உகந்ததாக இருப்பதாக அரசாங்கமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐ.சி.எம்.ஆர்) வலியுறுத்தியிருந்தாலும், இந்தியா போதுமான அளவு சோதனை செய்யவில்லை என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
அப்படியிருந்தும், தினசரி சோதனைகளின் எண்ணிக்கை ஏப்ரல் 2 ஆம் தேதி 5,800 லிருந்து ஏப்ரல் 4 ஆம் தேதி 10,034 ஆக இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 9,369 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் 89,534 மாதிரிகள் கடந்த வாரம் இறுதி வரை சோதனை செய்யப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.