2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கான கருத்தாக செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை 2021-22, உலகச் சூழலில் உள்ள நிச்சயமற்ற தன்மை போன்ற அழுத்தங்களுக்கு எதிராக அரசாங்கம் ஆபத்தைக் குறைக்க நிதி வழங்க வேண்டியதன் அவசியத்தையும் முக்கிய மத்திய வங்கிகளால் பணப்புழக்கம் திரும்பப் பெறுகிற சுழற்சி போன்றவற்றை வலியுறுத்தியது.
வரவிருக்கும் பட்ஜெட்டுக்கான களத்தை அமைக்கும் சர்வேயில் இருந்து ஐந்து குறிப்பிடத்தக்க அம்சங்கள் இங்கே தரப்படுகிறது.
- வருவாயில் உறுதியான மறுமலர்ச்சி - ஏப்ரல்-நவம்பர், 2021 இல் ஆண்டுக்கு ஆண்டு 67% அதிகமாக உள்ளது. "தேவைப்பட்டால் கூடுதல் ஆதரவை வழங்க" அரசாங்கத்திடம் நிதி ஆதாரமும் உள்ளது என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
- இது முன்னேறிய மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) பணவீக்கத்தை உலகளாவிய பிரச்சினையாகக் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, சி.பி.ஐ (CPI) பணவீக்கம் இலக்கு அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் இருக்கும்போது, மொத்த விலை குறியீட்டின் (WPI) பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இயங்குகிறது. மேலும் இது ஓரளவுக்கு சமமான அடிப்படை விளைவுகளால் ஏற்பட்டாலும் கூட, இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கத்தில், குறிப்பாக அதிகமான உலக எரிசக்தி விலைகளில் இருந்து இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
- முந்தைய ஆண்டின் பொருளாதார ஆய்வின் "பார்பெல் உத்தி"யின் தொடர்ச்சியாக, "அதிக நிச்சயமற்ற சூழலில்" 80 உயர் அளவைக் காட்டும் குறிகாட்டிகளைப் பயன்படுத்தி விரைவான அணுகுமுறையைப் பயன்படுத்த இந்த ஆண்டு கணக்கெடுப்பு பரிந்துரைத்துள்ளது. திட்ட மேலாண்மை, தொழில்நுட்ப மேம்பாடு போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் விரைவான அணுகுமுறை, தொடர்ந்து, அதிக அளவில் மாற்றங்களைச் செய்யும்போது குறுகிய மறு செய்கைகளில் விளைவுகளை மதிப்பிடுகிறது.
- கோவிட்-க்கு பிந்தைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில், கோரிக்கை நடவடிக்கைகள் மட்டமே தீர்வை அளிக்காது என்று இந்த கணக்கெடுப்பு கூறியுள்ளது. இது முக்கியமாக நுகர்வோர் நடத்தை, தொழில்நுட்ப வளர்ச்சிகள், புவிசார் அரசியல், விநியோகச் சங்கிலிகள், காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு காரணிகள் கணிக்க முடியாத வழிகளில் ஊடாடக்கூடும் என்றும் கோவிட்-க்கு பிந்தைய உலகின் நீண்டகால கணிக்க முடியாத தன்மையுடன் இந்தியா விநியோகப் பக்க உத்தியை உருவாக்க வேண்டும்.
- பேரியல்-பொருளாதார ஸ்திரத்தன்மையின் அளவைக் காட்டும் குறியீடுகளின் பின்னணியில், தடுப்பூசியின் முன்னேற்றம் ஒரு சுகாதார நடவடிக்கை குறிகாட்டியாக மட்டுமல்லாமல், தொற்றுநோய்களின் தொடர்ச்சியான அலைகளால் ஏற்படும் பொருளாதார இடையூறுகளுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்பட வேண்டும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. மற்ற காரணிகளுடன், இது தனியார் நுகர்வு தடுப்பூசியில் விரைவான கவரேஜ் மற்றும் பொருளாதார நடவடிக்கையை விரைவாக இயல்பாக்குவதன் மூலம் வலுவான மீட்சியைக் காண தயாராக உள்ளது என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"