Advertisment

கொரோனாவை காரணம் கூறி சட்டமன்றத் தேர்தலை தாமதப்படுத்த முடியுமா?

முன்கூட்டியே கலைக்கும் விஷயத்தில், முடிந்தவரை புதிய மக்களவை அல்லது சட்டமன்றம் கலைக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனாவை காரணம் கூறி சட்டமன்றத் தேர்தலை தாமதப்படுத்த முடியுமா?

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பீகாரில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகள் கவலை தெரிவித்து குரல் எழுப்பி வருகின்றன. இந்த வாரம், லோக் ஜான்ஷக்தி கட்சி (எல்ஜேபி) தலைவர் சிராக் பாஸ்வான், கோவிட்-19 பரவல் முடியும் வரை மாநில தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறியதை ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஷ்வி யாதவின் கோரிக்கையை வலியுறுத்தினார்.

Advertisment

தேர்தலை தாமதப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா?

மக்களவைக்கு அல்லது சட்டமன்றத்திற்கு 5 ஆண்டு காலம் முடிவடைவதற்கு 6 மாதங்களுக்குள் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைய சட்டத்தின் கீழ் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

வெளியே செல்லும் சபை கலைக்கப்பட்ட நாளில் புதிய சட்டமன்றம் அல்லது மக்களவை அமலில் இருக்கும் வகையில் வாக்கெடுப்புகள் முடிவடைகின்றன. உதாரணமாக, பீகார் விஷயத்தில், தேர்தல் ஆணையம் வழக்கமாக சட்டமன்றத்தின் காலம் முடிவதற்கு முன்பு நவம்பர் 29 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டும்.

முன்கூட்டியே கலைக்கும் விஷயத்தில், முடிந்தவரை புதிய மக்களவை அல்லது சட்டமன்றம் கலைக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

அட்டவணைப்படி ஒரு தேர்தல் அழைப்பு வழக்கமான முறையில் நடைபெறுகிறது. இருப்பினும், சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், அசாதாரண சூழ்நிலைகளில் அதன் அறிவிப்புக்குப் பிறகு இந்த நடைமுறை ஒத்திவைக்கப்படலாம் அல்லது அகற்றப்படலாம்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 153ன் கீழ், தேர்தலை நிறைவு செய்வதற்கான வாக்கெடுப்பு குழு காலத்தை நீட்டிக்க முடியும். ஆனால், அத்தகைய நீட்டிப்பு மக்களவை அல்லது சட்டமன்றத்தின் சாதாரண கலைப்பு தேதிக்கு அப்பால் செல்லக்கூடாது.

1991 ஆம் ஆண்டு, தேர்தல் ஆணையம் அரசியலமைப்பின் 324 வது பிரிவில் உள்ள விதியின் கீழ், ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் பிரச்சாரத்தின்போது படுகொலை செய்யப்பட்ட பின்னர், அப்போது நடந்து வந்த நாடாளுமன்றத் தேர்தலை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 18 மாநிலங்களவைக்கான தேர்தல் தேர்தல் ஆணையத்தால் ஒத்திவைக்கப்பட்டன.

ஆர்.பி. சட்டத்தின் 153வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையம் பீகாரில் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா?

பிரிவு 153 இன் கீழ் அதிகாரங்கள் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட பின்னரே பயன்படுத்த முடியும். தேர்தல் ஆணையம் பீகார் தேர்தலை ஒத்திவைக்க விரும்பினால், அது 324 வது பிரிவின் கீழ் அதன் அசாதாரண அதிகாரங்கள் மூலம் செய்யப்பட வேண்டும்.

சரியான நேரத்தில் வாக்கெடுப்புகளை நடத்த இயலாமை குறித்து ஆணையம் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அரசாங்கமும் குடியரசுத் தலைவரும் எதிர்கால போக்கை தீர்மானிப்பார்கள். குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தப்படும் அல்லது தற்போதைய முதலமைச்சரை மேலும் 6 மாதங்களுக்கு தொடர அனுமதிக்கப்படும்.

எந்த சூழ்நிலையில் தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்யலாம்?

தேர்தல்களின் காலக்கெடுவைத் தள்ளிவைக்கக்கூடிய குறிப்பிட்ட சட்ட விதிகள் எதுவும் இல்லை என்று தேர்தல் ஆணையத்தின் முன்னாள் சட்ட ஆலோசகர் எஸ்.கே. மெண்டிராட்டா தெரிவித்துள்ளார். “சட்டம் ஒழுங்கு, பூகம்பம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் அல்லது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வேறு ஏதேனும் கட்டாய சூழ்நிலைகள் இந்த விஷயத்தில் ஒரு முடிவை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு வழிகாட்டும் காரணிகளாக இருக்கும்” என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். ஒத்திவைப்பு குறித்த முடிவு பொதுவாக களத்தில் இருந்தும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களிடமிருந்தும் தகவல்களைப் பெற்ற பிறகு எடுக்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Election Commission Nitish Kumar Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment