2015-16ம் ஆண்டு முதல் ஐந்து வருட ஜிஎஸ்டி நடைமுறைக்கு 14 % கூட்டு வரி விகிதத்தின் அடிப்படையில் உண்மையான வசூல் மற்றும் பாதுகாக்கப்பட்ட தொகை ஆகியவற்றுக்கு இடையேயான வருவாய் இடைவெளிக்கு ஜிஎஸ்டியின் கீழ் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, மாநிலங்களுக்கு மீண்டும் மீண்டும் கடன் வழங்குவதன் மூலம் இழப்பீட்டு செஸ் பற்றாக்குறையை ஈடுசெய்ய அரசாங்கம் கடன் வாங்க முடிவு செய்தது. சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) நிகழ்ச்சி நிரலில் தற்போதுள்ள சட்ட உத்தரவுக்கு அப்பால் உள்ள மாநிலங்களுக்கான இழப்பீடு வரைமுறையை நீட்டிப்பதற்கான விவாதங்கள் மற்றும் ஜி.எஸ்.டி விகித மாற்றங்கள் மற்றும் தெளிவுபடுத்தல்களின் வடிவத்தில்50 க்கும் மேற்பட்ட பொருட்களின் ஜிஎஸ்டி விகிதம் மறுஆய்வு செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி கவுன்சிலின் 45 வது கூட்டம் லக்னோவில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
2015-16ம் ஆண்டு முதல் ஐந்து வருட ஜிஎஸ்டி நடைமுறையில் 14 % கூட்டு விகிதத்தின் அடிப்படையில் உண்மையான வசூல் மற்றும் பாதுகாக்கப்பட்ட தொகை ஆகியவற்றுக்கு இடையேயான வருவாய் இடைவெளிக்கு ஜிஎஸ்டியின் கீழ் மாநிலங்களுக்கு இழப்பீடு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, மாநிலங்களுக்கு மீண்டும் மீண்டும் கடன் வழங்குவதன் மூலம் இழப்பீடு செஸ் பற்றாக்குறையை ஈடுசெய்ய அரசாங்கம் கடன் வாங்க முடிவு செய்தது.
மாநிலங்களுக்கான இழப்பீட்டு பற்றாக்குறையை சமாளிக்க முதல் தொகுதி ரூ .75,000 கோடி ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. கடன் வாங்கிய இந்த தொகைகளை திருப்பிச் செலுத்துதல் மற்றும் செஸ் வசூல் மூலம் நிலுவையில் உள்ள இழப்பீட்டுத் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு, இழப்பீட்டு ஏற்பாடு ஜூன் 2022க்கு அப்பால் 2.5-3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் 32 பொருட்கள் மற்றும் 29 சேவைகளுக்கான விலையை மதிப்பாய்வு செய்யப் போகிறது. கவுன்சிலின் கீழ் உள்ள நிரந்தர குழு சோலார் பிவி திட்டங்கள், புதிய பழங்கள் மற்றும் பருப்புகள், தேங்காய் எண்ணெய், மென் பானங்கள், செறிவூட்டப்பட்ட அரிசி குருனை, உள்ளக கேளிக்கை பூங்காக்கள் போன்ற பொருட்களுக்கு மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது. நிரந்தர குழு உச்சவரம்பில், விசிறி, ஏர் கூலர், ரப்பர், பருத்தி, மெட்டல் ஸ்கிராப், லித்தியம் அயன் பேட்டரி மற்றும் சானிட்டரி நாப்கின்களுக்கு உள்ளீட்டு வரி வரவு ஆகியவற்றுக்கு எந்த விகித மாற்றங்களையும் பரிந்துரைக்கவில்லை.
ஜி.எஸ்.டி கவுன்சில் கோவிட் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் 11 மருந்துகளுக்கு வரிச் சலுகைகளை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜி.எஸ்.டியின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரி விதிப்பதற்கான கலந்துரையாடல் தொடங்குகிறது. இந்த கவுன்சிலால், உணவு விநியோக நிறுவங்களான ஜொமோடோ மற்றும் ஸ்விகி உணவகங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“