மத்திய சுகாதார அமைச்சகம் இந்தியாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு வீதத்தை ஏழு நாடுகளுடன் ஒப்பிடும் ஒரு விளக்கப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள மற்ற 6 நாடுகளும் அந்த தேதியில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் நோய் பாதிப்புகளைக் கண்டுள்ளன. இதில் நோய்த்தொற்று என்ணிக்கை இரண்டு மடங்காவது என்றால், ஒரு நாட்டில் நோய்த்தொற்று எண்ணிக்கை இரண்டு மடங்காவதற்கு எத்தனை நாட்கள் என்பதைக் குறிப்பிடுகிறது.
சுகாதார அமைச்சகத்தால் காட்டப்பட்டுள்ள ஏழு நாடுகளின் விகிதங்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் நோய்த்தொற்று எண்ணிக்கையின் இரட்டிப்பு விகிதம் பெரும்பாலும் மெதுவாக உள்ளது. ஏப்ரல் 16-ம் தேதி நிலவரப்படி இந்தியாவை விட 12 நாடுகள்அதிக நோய்த்தொற்று எண்ணிக்கை உள்ளன.
அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா, ஈரான், துருக்கி, பெல்ஜியம், பிரேசில், கனடா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ரஷ்யா, போர்ச்சுகல், ஆஸ்திரியா, அயர்லாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் ஏப்ரல் 16-ம் தேதி நிலவரப்படி இந்தியாவை விட அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகளைக் கொண்ட நாடுகளாக உள்ளன.
நோய்த்தொற்று வீதம் இரட்டிப்பாகுவது ஏன்?
கொரோனா பரவலை மதிப்பிடுவதற்கு மாடலிங் நிபுணர்கள் பயன்படுத்தும் பல அளவீடுகளில் இரட்டிப்பு விகிதம் ஒன்றாகும். தற்போதைய எண்ணிக்கை சிறியதாக இருந்தாலும், பரவல் எவ்வளவு விரைவாக வளரக்கூடும் என்பதைப் பார்க்க இது உதவுகிறது. நோய்தொற்று ஒவ்வொரு நாளும் ஒரே எண்ணிக்கையில் வளர்ந்தால் (நேரியல் வளர்ச்சி), அது கவலைக்குரியது. வழக்குகள் குறுகிய காலத்திற்குள் பெருகினால் (அதிவேக வளர்ச்சி). பிந்தைய நிகழ்வில், தற்போதைய எண்கள் குறைவாக இருந்தாலும் எண்கள் விரைவில் மிகப் பெரியதாக மாறக்கூடும். பெரும்பாலான கோவிட்-19 மாடல்களைப் போலவே, இது ஒவ்வொரு நாட்டின் சோதனை உத்திகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.
நோய்த்தொற்று விகிதங்களை ஒப்பிடுவதற்கு அமைச்சகம் நான்கு வரம்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளது. நோய்தொற்றுகளின் எண்ணிக்கை 750 முதல் 1,500 வரை அதிகரித்தது; 1,500 முதல் 3,000 வரை; 3,000 முதல் 6,000 வரை; மற்றும் 6,000 முதல் 12,000 வரை என வரையறுத்துள்ளது. அமைச்சகம் இந்தியாவுக்காக தனது சொந்த எண்களைப் பயன்படுத்தினாலும், நம்முடைய பகுப்பாய்வு அனைத்து நாடுகளையும் (இந்தியா உட்பட) ஒரே ஒற்றை மூலத்தைப் பயன்படுத்தி ஒப்பிடுகிறது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுத்தளம் கூறுகிறது. இதன் காரணமாக, இந்த பகுப்பாய்வில் சில இரட்டிப்பு விகிதங்கள் அமைச்சகத்தினால் முன்னிலைப்படுத்தப்பட்ட விகிதங்களுடன் சற்று மாறுபடுகின்றன.
கட்டம்கட்டமாக கொரோனா வைரஸ் நோய்த்தொற்று
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தரவுத்தளத்தின் எண்களின் படி, இந்தியாவில் முதல் கட்ட இரட்டிப்பு (750 முதல் 1,500 வரை) நோய்தொற்று எண்ணிக்கை அதிகரிக்க 5 நாட்கள் ஆனது. இது வேறு எந்த நாட்டையும் விட நீண்டது. ஒப்பீட்டளவில், ஈரான், ஸ்பெயின், துருக்கி போன்ற நாடுகள் இந்த வரம்பில் இரண்டு மடங்காக ஒரு நாள் மட்டுமே எடுத்துக்கொண்டன.
இரண்டாம் கட்ட வளர்ச்சியில் (1,500 முதல் 3,000 வரை), ஏழு நாடுகளில் இந்தியாவை விட மெதுவாக வளர்ந்து வருகின்றன. மேலும் 12 நாடுகளில் உள்ளவர்கள் வேகமாக அல்லது அதே எண்ணிக்கையிலான முன்று நாட்களில் அடைந்தனர். இந்த கட்டத்தில் இரட்டிப்பு விகிதங்கள் இந்தியாவை விட நீளமாக இருந்தன: இங்கிலாந்து, ரஷ்யா, போர்ச்சுகல், ஆஸ்திரியா, நெதர்லாந்து, பிரேசில் மற்றும் அயர்லாந்து ஆகியவை மெதுவான வளர்ச்சியைக் கண்டன, 1,500 முதல் 3,000 எண்ணிக்கை உயர் ஆறு நாட்கள் ஆனது.
மூன்றாம் கட்ட வளர்ச்சியில், இந்தியா பெரிய பரவலைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. நோய் தொற்று எண்ணிக்கை 3,000 முதல் 6,000 வரை உயர ஐந்து நாட்கள் ஆகும். இரட்டிப்பாக்க எட்டு நாட்கள் எடுத்த அயர்லாந்தைத் தவிர, மற்ற எல்லா நாடுகளும் இந்த கட்டத்தை இரட்டிப்பாவதைக் கண்டன. இந்தியாவில் இருந்ததை விட குறைவான நேரம் அல்லது அதே நேரமாக இருந்தது. ஸ்பெயினில், இது ஒரு நாள் மட்டுமே எடுத்துக்கொண்டது.
இறுதி கட்ட வளர்ச்சியில், இந்தியாவில் நோய்தொற்று எண்ணிக்கை 6,000 முதல் 12,000 வரை இருமடங்காக ஆறு நாட்கள் ஆனது. நான்கு நாடுகளில் மட்டுமே இந்த வளர்ச்சி இந்தியாவை விட மெதுவாக இருந்தது. இஸ்ரேலில், வளர்ச்சி கணிசமாகக் குறைந்துவிட்டதாகத் தெரிகிறது. இந்த இரட்டிப்பு கட்டம் 13 நாட்கள் ஆகும். இந்த கட்டம் ஆஸ்திரியாவில் 10 நாட்களும், போர்ச்சுகலில் 8 நாட்களும், அயர்லாந்தில்7 நாட்களும் எடுத்தன. இந்தியாவை விட இந்த கட்ட வளர்ச்சி வேகமாக இருந்த நாடுகளில், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் சீனா ஒவ்வொன்றும் மிகக் குறுகிய காலத்தில் இரண்டு நாட்களிலேயே நடப்பதைக் கண்டன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.