Advertisment

பெண் இல்லை.. 2 ஆண் எலிகளில் இருந்து கருமுட்டை உருவாக்கிய விஞ்ஞானிகள்; இது எவ்வாறு சாத்தியம்?

ஐப்பான் மருத்துவ விஞ்ஞானிகள் இரண்டு ஆண் எலிகளின் உயிரிணுக்களில் இருந்து ஆரோக்கியமான கருமுட்டைகள் உருவாக்கியதாக கூறியுள்ளனர். இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
scientists create mice with two biological fathers?

scientists create mice with two biological fathers?

மனிதர்கள், விலங்குகள் என அனைத்து உயிரினங்களின் இனப்பெருக்கமும் ஒரு ஆணின் விந்தணு, ஒரு பெண்ணின் கருமுட்டை ஆகியவையின் அடிப்படையிலேயே ஆனது. தற்போதுள்ள அறிவியல் வளர்ச்சி, நவீன விஞ்ஞானமயம் ஆகியவைகள் காரணமாக கற்பனைக்கு அப்பாற்பட்டு பல்வேறு புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

Advertisment

அந்த வகையில், ஐப்பான் விஞ்ஞானிகள் முதல் முறையாக இரண்டு ஆண் எலிகளின் உயிரிணுக்களில் இருந்து ஆரோக்கியமான கருமுட்டைகள் உருவாக்கியதாக கூறியுள்ளனர். இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் நேச்சர் என்ற இதழில், ‘Generation of functional oocytes from male mice in vitro’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது. ஜப்பானில் உள்ள கியூஷு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர், விஞ்ஞானி கட்சுஹிகோ ஹயாஷி மற்றும் 15 பேர் அடங்கிய அவரது விஞ்ஞானிகள் குழு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

இதுகுறித்து CNN உடன் பேசிய ஹயாஷி, இந்த செயல்பாடு மனிதர்களுக்கு கொண்டு வர நீண்ட காலம் ஆகும். 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாகவும் ஆகலாம். அவ்வாறு மனிதர்களுக்கு செயல்படுத்தினாலும், கருமுட்டை குழந்தையை உருவாக்கும் அளவிற்கு பாதுகாப்பானதாக இருக்குமா என்று கூறமுடியாது என்று அவர் தெரிவித்தார்.

ஆய்வு விவரங்கள் என்ன?

முதலில் விஞ்ஞானிகள் சோதனைக்காக ஆண் மனிதனிடத்தில் உள்ளது போல் இருக்கும் ஆண் எலியின் வாலில் இருந்து தோல் செல்களை எடுத்தனர். அவற்றில் X மற்றும் Y இரண்டு குரோமோசோம்களும் உள்ளன. இவைகள் ப்ளூரிபோடென்ட் ஸ்டெம் செல்கள் அல்லது iPSC களாக மாற்றப்பட்டது.

இந்தச் செயல்பாட்டின் போது, ​​ஒரு சிறிய சதவீத செல்கள் அவற்றின் Y குரோமோசோமை இழந்து, "XO" செல்களை உருவாக்குகின்றன.

பின்னர் விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் XO செல்களை வளர்த்து, ரிவர்சின் என்ற மருந்தைக் கொண்டு சிகிச்சை அளித்தனர். பின்னர் இது XX தொகுப்பை உருவாக்கியது.

ஹயாஷியும் அவரது குழுவினரும் XX செல்களை ஒரு செயற்கை கருப்பையில் புகுத்தினர். ஸ்டெம் செல்கள் மூலம் மற்றொரு ஆண் எலியின் விந்தணுவுடன் சேர்த்து கருமுட்டை உருவாக்கப்பட்டது. எலியின் விந்தணுவைப் பயன்படுத்தி கருத்தரிக்கப்பட்ட முட்டைகள், ஒரு பெண் எலியின் கருப்பைக்குள் மாற்றப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட 630 கருக்களில் இருந்து, 7 எலி குட்டிகள் மட்டுமே பிறந்தன.

மார்ச் மாத தொடக்கத்தில் லண்டனில் உள்ள பிரான்சிஸ் கிரிக் நிறுவனத்தில் மனித ஜீனோம் எடிட்டிங் குறித்த மூன்றாவது சர்வதேச உச்சி மாநாட்டில் ஆராய்ச்சியின் விவரங்களை ஹயாஷி முன்வைத்தார். இந்த ஆராய்ச்சியின் மிகப்பெரிய தந்திரம், எக்ஸ் (X) குரோமோசோமின் நகலைப் பயன்படுத்தியதே ஆகும். ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்ட எலிகளானது , வழக்கமாக வளர்க்கப்படும் எலிகளிலிருந்து வேறுபட்டவை என்பதைக் கண்டறிய கவனமாக ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த ஆராய்ச்சி மனிதர்களிடையே வெற்றி பெற்று இனப்பெருக்கம் செய்ய முடிந்தாலும், கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மாதத்தில் மூன்று குழந்தைகள் தங்கள் தாய்மார்களின் மைட்டோகாண்ட்ரியல் கோளாறுகளைப் பெற முடியும் என்பதற்கான சான்றுகள் வெளிவந்துள்ளன. இது மாற்றுக் கோணத்தில் இனப்பெருக்கத்தை அணுகும்போது, நாம் நினைப்பது எப்படி நடக்கிறது என்பதை விளக்குகிறது. இது ஒரு பெரிய சாதனை. இந்த ஆராய்ச்சி தற்போது தொடக்க நிலையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த நுட்பத்தை மனிதர்களில் பயன்படுத்த முடியுமா?

இரண்டு உயிரியல் தந்தைகளுடன் எலிகளை உருவாக்க விஞ்ஞானிகள் பயன்படுத்தும் முறையின் ஒரு சதவீத வெற்றி விகிதத்தைக் கருத்தில் கொண்டு, ஆண் மனித தம்பதிகளிடமிருந்து குழந்தைகளை உருவாக்குவது கோட்பாட்டளவில் சாத்தியம் என்றாலும், அவ்வாறு செய்ய சுமார் 10 ஆண்டுகள் அதற்கு மேல் கூட ஆகும் என்று ஹயாஷி கூறினார்.

தொழில்நுட்ப அம்சத்தைத் தவிர, மனிதர்களுக்கு செயல்படுத்த விரிவான ஆய்வு, ஆராய்ச்சிகள் தேவைப்படும் எனக் கூறினார்.

Research Japan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment