Advertisment

மீண்டும் பூமி சுற்றுப் பாதைக்கு திரும்பிய சந்திரயான்-3 உந்து கலன்; இது ஏன் முக்கியம்?

சந்திரயான் 3-ன் லேண்டர் மற்றும் ரோவரை சுமந்து சென்ற உந்துவிசை கலனை இஸ்ரோ மீண்டும் பூமி சுற்றுப் பாதைக்கு திருப்பியுள்ளது. ஏன் இவ்வாறு செய்யப்பட்டது, இது ஏன் முக்கியம் என்று இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Propulsion Module.jpg

The Lander Module (left)separating from the Propulsion Module. (Twitter/@isro)

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 திட்டத்தில் இருந்து உந்துவிசை தொகுதியை வெற்றிகரமாக பூமியின் சுற்றுப் பாதைக்கு கொண்டு வந்துள்ளது. 'ப்ரொபல்ஷன் மாட்யூல்' எனப்படும் உந்துவிசை தொகுதியை இஸ்ரோ பூமியின் சுற்றுப் பாதைக்கு கொண்டு வந்துள்ளது. 

Advertisment

இது சந்திரயான் 3-ன் ஒரிஜினல் திட்டத்தில் இல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட 384,000 கிமீ பயணம் செய்த பிறகு, சந்திரனைச் சுற்றி வந்த தொகுதியை மீண்டும் கொண்டு வருவதற்கு, இஸ்ரோ சந்திரயான்-3 பயணத்தின் தளவாட நன்மைகளைப் பயன்படுத்தியது. 

"இஸ்ரோ விக்ரம் லேண்டரை ஹாப் சோதனை செய்ததைப் போலவே, மற்றொரு தனித்துவமான சோதனையில், சந்திரயான் -3-ன்  ப்ராபல்ஷன் மாட்யூல் (பி.எம்) நிலவுச் சுற்றுப் பாதையில் இருந்து பூமியைச் சுற்றுப் பாதைக்கு மாற்றப்பட்டது " என்று இஸ்ரோ திங்கள்கிழமை (டிசம்பர் 10) அறிவித்தது. இந்த தொகுதி ஆகஸ்ட் 1-ம் தேதி பூமி சுற்றுப் பாதையில் இருந்து விலகி நிலவு சுற்றுப் பாதைக்கு சென்றது. 

முதலில், இந்த உந்துவிசை தொகுதி என்ன? அது எவ்வாறு செயல்பட்டது?

பெரிய பேலோடுகள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளுடன் கூடிய முழு அளவிலான ஆர்பிட்டரைக் கொண்டிருந்த சந்திரயான்-2 போலல்லாமல், சந்திரயான்-3 இலகுவான உந்துத் தொகுதியைக் கொண்டிருந்தது. பூமியுடனான லேண்டரின் தகவல் தொடர்புக்கு, இந்த பணி சந்திரயான் -2 ஆர்பிட்டரைப் பயன்படுத்தியது, இது 2019 பயணத்திற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் செயல்படுகிறது.

விண்கலத்தில் இருந்த ஒரே அறிவியல் கருவி ஸ்பெக்ட்ரோ போலரிமெட்ரி ஆஃப் ஹேபிடபிள் பிளானட் எர்த் (ஷேப்) - இது ஒரு சோதனை பேலோட் ஆகும், இது பூமியை வாழக்கூடிய கிரகமாக மாற்றும் கையொப்பங்களை ஆய்வு செய்கிறது, இது சூரிய குடும்பத்திற்கு வெளியே வாழக்கூடிய கிரகங்களை அடையாளம் காண முடியும்.

ஆகஸ்ட் 17 அன்று லேண்டரிலிருந்து உந்துவிசை தொகுதி பிரிக்கப்பட்ட பிறகு - சந்திர மேற்பரப்பில் இருந்து 100 கிமீ, மற்றும் திட்டமிடப்பட்ட தரையிறங்குவதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு - அது ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக சந்திரனைச் சுற்றி வர வேண்டும்.

“எல்.எம் (லேண்டர் மாட்யூலை) இறுதி நிலவு 100 கிமீ வட்ட துருவ சுற்றுப்பாதை வரை கொண்டு செல்வதும், PM இலிருந்து LM ஐ பிரிப்பதும் முக்கிய செயல்பாடு ஆகும். இது தவிர, உந்து விலை தொகுதி மதிப்பு கூட்டுதலாக ஒரு அறிவியல் பேலோடும் உள்ளது, இது லேண்டர் மாட்யூலைப் பிரித்த பிறகு இயக்கப்படும், ”என்று இஸ்ரோ பணிக்கு முன்னதாக கூறியது.

உந்துவிசை தொகுதியை மீண்டும் பூமிக்குக் கொண்டு வருவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை, இஸ்ரோ வெறும் மூன்று மாதங்களுக்கு SHAPE பேலோடை இயக்க விரும்புவதாகக் கூறியது. 

எனவே, இஸ்ரோ இந்த சாதனையை எப்படி செய்தது? 

சந்திரயான்-3 திட்டம் எவ்வளவு துல்லியமாகவும் திறமையாகவும் சென்றது என்பது தான் இதற்கு உதவியது. 

"பூமியின் துல்லியமான பணி திட்டமிடல் மற்றும் சந்திர எரிப்பு சூழ்ச்சிகள் மற்றும் ஏவுகணை வாகனம் மூலம் துல்லியமாக சுற்றுப்பாதையில் செலுத்துதலின்  விளைவாக உந்து சக்தி சேமிக்கப்பட்டது" என்று சந்திரயான் -3 இன் திட்ட இயக்குனர் பி வீரமுத்துவேல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு மாதத்துக்கும் மேலான செயல்பாடுகளுக்குப் பிறகு, உந்து கலன் தொடர்ந்து 100 கிலோ எரிபொருளை வைத்திருந்தது. 

"எதிர்கால சந்திர பயணங்களுக்கான கூடுதல் தகவல்களைப் பெறுவதற்கு பி.எம்-ல் கிடைக்கும் எரிபொருளைப் பயன்படுத்தவும், எதிர்கால மாதிரி திரும்பும் பணிக்கான பணி செயல்பாட்டு உத்திகளை நிரூபிக்கவும் முடிவு செய்யப்பட்டது" என்று விண்வெளி நிறுவனம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

உந்து விசை கலன் சந்திர மேற்பரப்பில் மோதாமல் மெதுவாக பூமி சுற்றுப் பாதையில் நுழையவதை  உறுதிசெய்ய ஒரு பணித் திட்டம் உருவாக்கப்பட்டது. "மதிப்பீடு செய்யப்பட்ட எரிபொருள் இருப்பு மற்றும் ஜியோ விண்கலங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, உகந்த பூமி திரும்பும் பாதை அக்டோபர் 2023 மாதத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று இஸ்ரோ செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

பூமி சுற்றுப் பாதை திரும்பும் பயணம் எப்படி சென்றது?

இஸ்ரோ ஆரம்பத்தில் அக்டோபர் 9-ம் தேதி ஒரு Maneuver  மேற்கொள்ளப் பட்டது.  சந்திரனைச் சுற்றி பி.எம் சுற்றுப்பாதையின் உயரத்தை 150 கிமீ முதல் 5112 கிமீ வரை (2.1 மணி முதல் 7.2 மணி வரை) உயர்த்தியது. 

டிரான்ஸ்-எர்த் இன்ஜக்சன்  (TEI) செயல்முறை அக்டோபர் 13 அன்று செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து நவம்பர் 10 அன்று சந்திர சுற்றுப் பாதையில் இருந்து  வெளியேறுவதற்கு முன் உந்துவிசை தொகுதி நான்கு மூன்- ப்ளை பை மிஷன் செய்தது. 

"தற்போது, ​​உந்துவிசை தொகுதி பூமியை சுற்றி வருகிறது மற்றும் நவம்பர் 22 அன்று 1.54 லட்சம் கிமீ உயரத்தில் அதன் முதல் பெரிஜியை (பூமிக்கு மிக அருகில் உள்ள புள்ளி) கடக்கும்" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சுற்றுப்பாதையின் காலம் ஏறக்குறைய 13 நாட்கள் ஆகும்… அதன் பாதையில் பெரிஜி மற்றும் அபோஜி (பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ள புள்ளி) உயரம் மாறுபடும் மற்றும் கணிக்கப்பட்ட குறைந்தபட்ச பெரிஜி உயரம் 1.15 லட்சம் கிமீ ஆகும்," என்று விண்வெளி நிறுவனம் கூறியது, "எந்த அச்சுறுத்தலும் இல்லை" உந்து விசை கலன் பூமியைச் சுற்றிவரும் செயற்கைக்கோள்களுக்கு மிக அருகில் உள்ளது. 

பூமி அதன் பார்வையில் இருக்கும்போதெல்லாம் SHAPE பேலோட் தொடர்ந்து இயக்கப்படுகிறது.

இந்த முயற்சியில் இஸ்ரோ கற்றுக்   கொண்டது என்ன? 

இந்த முயற்சிகள் மூலம், "நிலவில் இருந்து பூமிக்கு திரும்புவதற்கான பாதை மற்றும் சூழ்ச்சிகளைத் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல்" பற்றிய யோசனையை இஸ்ரோ பெற முடிந்தது, இது போன்ற ஒரு சூழ்ச்சிக்கான மென்பொருள் தொகுதியை உருவாக்குவதில் விண்வெளி ஏஜென்சியின் பணிக்கு உதவுகிறது.

“யு.ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம்/இஸ்ரோவின் விமான இயக்கவியல் குழு ஒரு பகுப்பாய்வுக் கருவியை உருவாக்கியுள்ளது… இந்த நடவடிக்கைக்காக சந்திரயான்-3  பி.எம் திரும்பும் சூழ்ச்சிகள் மூலம் சரிபார்க்கப்படுகிறது,” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்தச் சோதனையானது கிரகங்கள்/வானப் பொருள்கள் வழியாக ஈர்ப்பு விசையுடன் பறக்கத் திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் உதவும், அத்துடன் “கட்டுப்பாட்டுமின்றி அதன் வாழ்நாள் முடிவில் சந்திரனின் மேற்பரப்பில் PM மோதியதைத்” தவிர்க்கவும் மற்றும் விண்வெளி குப்பைகள் உருவாக்கத்தைத் தடுக்கவும் உதவும் என்றும் கூறியுள்ளது. 

இதையும் படிங்க: https://indianexpress.com/article/explained/explained-sci-tech/chandrayaan-isro-propulsion-module-earth-orbit-9056529/

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment