Advertisment

74 ஆண்டுகள், 1,464 புத்தகங்கள்… உலகின் மிகப்பெரிய சமஸ்கிருத கலைக்களஞ்சிய அகராதி எப்படி உருவாகிறது?

சமஸ்கிருத கலைக்களஞ்சிய அகராதி திட்டத்தின் தற்போதைய தயாரிப்பாளர்கள் சுமார் 22 ஆசிரியர்கள், சமஸ்கிருத ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழுவாக உள்ளனர். அவர்கள் இப்போது ' अ ' அ என்ற முதல் எழுத்தைக் கொண்ட அகராதியின் 36-வது தொகுதியை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Encyclopaedic Sanskrit Dictionary, Sanskrit, Express Explained Culture, 74 ஆண்டுகள், 1,464 புத்தகங்கள் சமஸ்கிருத அகராதி, உலகின் மிகப்பெரிய சமஸ்கிருத கலைக்களஞ்சிய அகராதி எப்படி உருவாகிறது, Deccan College, Professor S M Katre

பல ஆண்டுகளுக்குப் பிறகு, புனேவின் டெக்கான் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள புகழ்பெற்ற கலைக்களஞ்சிய சமஸ்கிருத அகராதியின் அலுவலகம் மற்றும் ஆசிரியர் அறையின் கதவுகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. 1948-ல் தொடங்கப்பட்ட இந்த மாபெரும் அகராதித் திட்டம் எந்த ஆண்டு நிறைவடையும் என்பது தெரியவில்லை. ஆனால், அகராதியின் இறுதி வார்த்தை எண்ணிக்கை 20 லட்சத்தைத் தொடும் என்றும் இது சமஸ்கிருதத்தின் உலகின் மிகப்பெரிய அகராதியாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

சமஸ்கிருத களைக்களஞ்சிய அகராதி திட்டம்

டெக்கான் கல்லூரியில் இந்தியாவின் பழமையான நவீன மொழியியல் துறையின் நிறுவனரான மொழியியலாளர் மற்றும் சமஸ்கிருதப் பேராசிரியரான எஸ்.எம்.காட்ரே, 1948-ல் இந்த தனித்துவமான திட்டத்தை உருவாக்கி, அகராதியின் முதல் பொது ஆசிரியராக பணியாற்றினார். இது பின்னர், பேராசிரியர் ஏ.எம். கட்டகே என்பவரால் உருவாக்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளாக சமஸ்கிருத விரிவுரையாளர்களின் கடினமான, உழைப்பு மற்றும் இடைவிடாத முயற்சிகளுக்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

சமஸ்கிருத கலைக்களஞ்சிய அகராதி திட்டத்தின் தற்போதைய தயாரிப்பாளர்கள் சுமார் 22 ஆசிரியர்கள் மற்றும் சமஸ்கிருத ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழுவாக உள்ளனர். அவர்கள் இப்போது, அகராதியின் 36 வது தொகுதியை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த அகராதி அ என்ற முதல் எழுத்தில் இருந்து தொடங்குகிறது.

1948 - 1973-க்கு இடையில், இந்த தனித்துவமான சொற்களைத் தேடுவதற்காக, ரிக்வேதம் (சுமார் 1400 கி.மு.) தொடங்கி ஹாஸ்யாரவ (கி.பி. 1850) வரை 62 அறிவுத் துறைகளில் பரவிய 1,464 புத்தகங்களை சுமார் 40 அறிஞர்கள் படித்தனர்.

அவர்கள் வேதங்கள், தரிசனம், சாகித்தியம், தர்மசாஸ்திரம், வேதாகமம், வியாகரணம், தந்திரம், இதிகாசங்கள், கணிதம், கட்டிடக்கலை, ரசவாதம், மருத்துவம், கால்நடை அறிவியல், விவசாயம், இசை, கல்வெட்டுகள், வீட்டு விளையாட்டுகள், போர்முறை, அரசியல், புராணம் போன்ற பாடங்களை உள்ளடக்கிய அகராதிகள் மற்றும் கலைக்களைஞ்சியங்களை கவர் செய்துள்ளனர்.

டெக்கான் கல்லூரியில் இந்தியாவின் பழமையான நவீன மொழியியல் துறையின் நிறுவனர், 1948-ல் இந்த தனித்துவமான திட்டத்தை உருவாக்கி, அகராதியின் முதல் பொது ஆசிரியராக பணியாற்றினார். (பவன் கெங்ரேயின் எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

டிஜிட்டல் அல்லாத காலத்தில், இந்த அறிஞர்கள் ஒவ்வொரு புதிய வார்த்தையின் விவரங்களையும் சிறிய காகித குறிப்பு சீட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர். இந்த புத்தகத்தின் தலைப்பு, வார்த்தை பயன்படுத்தப்பட்ட சூழல், அதன் இலக்கண வகை (பெயர்ச்சொல்/வினை முதலியன), மேற்கோள், வர்ணனை, குறிப்பு, சரியான சுருக்கம் மற்றும் உரையின் தேதி போன்ற விவரங்களை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சீட்டை உருவாக்கியவர் மற்றும் அதன் சரிப்பார்ப்பவரால் கையொப்பமிடப்பட்டுள்ளது.

சுமார் 1,464 புத்தகங்களில் இருந்து ஒரு கோடி குறிப்பு சீட்டுகளை உருவாக்க இந்த அறிஞர்களுக்கு 25 ஆண்டுகள் ஆனது. இந்த காகித சீட்டுகள் அனைத்தும் அகர வரிசைப்படி, மிகவும் அரிதான கையெழுத்துப் பிரதி உருவாக்கம் - அகராதியின் ஆத்மா - சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 3,057 உலோக டிராயர்களுளில் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. அவை டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் குறிப்பு

இந்த அகராதியில் வார்த்தைகள் அகர வரிசைப்படி இருந்தாலும், அர்த்தத்தைக் கூறுவதில் வரலாற்றுக் கொள்கைகளைப் பின்பற்றுகிறது. ஒரு வார்த்தையின் அர்த்தத்துடன் கூடுதலாக, அகராதி ஒரு குறிப்பிட்ட இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் அந்தந்த வார்த்தையின் கூடுதல் தகவல், குறிப்புகள் மற்றும் சூழலையும் தருகிறது. அதனால்தான், இது ஒரு கலைக்களஞ்சிய அகராதி, இதில் சொற்கள் உரையில் தோன்றும் அவற்றின் குறிப்புகளின் காலவரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, ‘அ’ என்ற எழுத்தில் தொடங்கும் வார்த்தை, அக்னியைப் போலவே, சமஸ்கிருத நூல்களில் இருந்து தொடங்கும் அனைத்து மேற்கோள்களும் வேதத்தில் தொடங்கும் மற்றும் வேதத்திற்குப் பின் வரும் நூல்களின் குறிப்புகள், காலவரிசைப்படி அமைக்கப்பட்டிருக்கும். இது ஒரு வாசகருக்கு வார்த்தையின் அர்த்தத்தின் வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

“சில நேரங்களில், ஒரு வார்த்தை 20 முதல் 25 வரையிலான அர்த்தங்களைக் கொண்டிருக்கும். ஏனெனில், அது பயன்பாட்டின் சூழல் மற்றும் புத்தகங்களைப் பொறுத்து மாறுபடும். அதிகபட்சமாக அர்த்தங்கள் கண்டறியப்பட்டவுடன், அது கட்டுரை என்று அழைக்கப்பட்டு முதல் வரைவு வெளியிடப்படுகிறது. இது பின்னர் எழுத்துப் பிழைகள் சரிபார்க்கப்பட்டு செய்யப்பட்டு, பொது ஆசிரியரின் முதல் மதிப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. இறுதி செய்யப்பட்டவுடன், ஒரு வார்த்தையின் கட்டுரை தயார் செய்யப்பட்டு பத்திரிகைகளுக்கு அனுப்பப்படுகிறது. இது ஒரு அகராதி பதிவாக இறுதி செய்யப்படுவதற்கு முன்பு அறிஞர்கள் மற்றும் பொது ஆசிரியர்களால் மீண்டும் ஒருமுறை ஆதாரம் வாசிக்கப்பட்டது” என்று இந்த திட்டத்தில் தலையங்க உதவியாளராக உள்ள சரிகா மிஸ்ரா கூறினார்.

வெளியீடுகள்

முதல் தொகுதி 1976 இல் வெளியிடப்பட மூன்று ஆண்டுகள் ஆனது. அதை தொழில்நுட்ப தலையீடும் கோஷாஷ்ரி என்ற எழுத்துருவுடன் கூடிய பிரத்யேக மென்பொருளும் இந்த செயல்முறையை விரைவுபடுத்தியது.

இதுவரை வெளியிடப்பட்ட 35 தொகுதிகளில் சுமார் 1.25 லட்சம் சொற்கள் உள்ளன. (பவன் கெங்ரேயின் எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

“இப்போது, ​​ஒரு வருடத்தில் ஒரு தொகுதியை வெளியிட முடிகிறது. ஒரு தொகுதியில் தோராயமாக 4,000 வார்த்தைகள் இணைக்கப்பட்டுள்ளன,” என்று இந்த திட்டத்தின் உதவி ஆசிரியர் ஓங்கார் ஜோஷி கூறினார்.

குறிப்புச் சீட்டுகளில் ஏதேனும் தகவல் விடுபட்டால், அறிஞர்கள் 1,464 புத்தகங்களை மீண்டும் படிக்கவும் / ஸ்கேன் செய்யவும் இப்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய மகாபாரதம் (18 பர்வங்கள்), வேதங்கள் மற்றும் ஒரே மாதிரியான இருமுறை வாசிப்பை திறம்பட செய்கிறது.

“நாம் இப்போது மென்பொருளைப் பயன்படுத்தி புத்தகங்களை எளிதாக ஸ்கேன் செய்யலாம். கடந்த காலத்தில், இது கையால் செய்யப்பட்டது. அது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும்” என்று ஓங்கார் கூறினார்.

1976 ஆம் ஆண்டு முதல், மொத்தம் 6,056 பக்கங்கள் கொண்ட முதல் எழுத்தான ‘அ’-வில்தொடங்கி 35 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

அகரவரிசையில் ‘அ’ அதிகபட்ச சொற்களைக் கொண்டுள்ளது. மேலும், இந்த எழுத்துக்களில் இருந்து தொடங்கும் சொற்களைக் கொண்ட 35 தொகுதிகளை நாங்கள் வெளியிட்டுள்ளோம். 36வது தொகுதிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று இந்த திட்டத்தின் உதவி ஆசிரியர் சன்ஹிதா ஜோஷி கூறினார்.

தனித்துவமான மிகப்பெரிய அகராதி

பொறுப்பு துணைவேந்தர் பேராசிரியர் பிரசாத் ஜோஷி ஒன்பதாவது தலைமை ஆசிரியர் ஆவார். மேலும், இந்த திட்டத்தில் பணிபுரியும் அவரது தந்தை மற்றும் மாமாவுக்குப் பிறகு குடும்பத்தில் மூன்றாவது ஆசிரியர் இவர்.

“இந்த வேலை நிமிடத்திற்கு நிமிடம் மற்றும் தினசரி வேலை” என்று 2017 முதல் இந்த திட்டத்தின் பொறுப்பாளராக இருக்கும் பேராசிரியர் பிரசாத் ஜோஷி கூறினார்.

உலகில் வேறு எந்த மொழியிலும் இவ்வளவு வளமான மற்றும் பரந்த சொற்களஞ்சியம் உள்ளதா என்று கேட்டதற்கு, “ஒருவேளை, கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் முழுமையான வரலாற்றுக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆங்கில மொழி அகராதி நெருக்கமாக இருக்கும். ஆனால், சமஸ்கிருத அகராதி பரந்த நோக்கத்தைக் கொண்டுள்ளது.” என்று கூறினார்.

ஒப்பீட்டுக்காக, ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி, இதுவரை 20 தொகுதிகள் மற்றும் 2,91,500 வார்த்தைகள் உடன் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் அகராதிகளில் ஒன்றாக உள்ளது. Woordenboek Der Nederlandsche Taal (WNT) என்பது டச்சு மொழியில் உள்ள மற்றொரு பெரிய அகராதி. இது 17 தொகுதிகளில் 4.5 லட்சம் சொற்களைக் கொண்டுள்ளது.

சமஸ்கிருத கலைக்களஞ்சிய அகராதி, தயாரானதும், மூன்று மடங்கு பெரியதாக இருக்கும். இதுவரை வெளியிடப்பட்ட 35 தொகுதிகளில் சுமார் 1.25 லட்சம் சொற்கள் உள்ளன.

சமஸ்கிருத மொழியில் 46 எழுத்துக்கள் இருந்தாலும், இந்த திட்டத்தை முடிப்பதற்கு இன்னும் பல பத்தாண்டுகள் வேலை இருந்தாலும், இறுதியில், இது மொத்தம் 20 லட்சம் சொற்களைக் கொண்ட அகராதியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் எதிர்காலம்

பேராசிரியர் ஜோஷியின் குழு கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான முக்கியமான இணைப்பாக உள்ளது. மேலும், சமஸ்கிருதத்தை உயிருடன் வைத்திருக்கும் பெரிய பொறுப்பு உள்ளது. ஆனால், இதில் சமஸ்கிருத மொழியியலாளர்களின் உண்மையான பற்றாக்குறை உள்ளது.

“ஒட்டுமொத்தமாக, மொழி ஆய்வுகள் பின்தங்கி உள்ளன. படிக்காமல் கிடக்கும் நூல்கள் மற்றும் இலக்கியப் படைப்புகளின் பரந்த தொகுதிகளுக்கு வாசகர்கள் தேவை” என்று அவர் கூறினார்.

ஆனால், அகராதி உருவாக்கத்தின் உதவியாளரும் திட்டச் செயலாளருமான பாவ் சர்மா போன்ற இளம் அறிஞர்கள், சிலரை ஊக்குவிக்கும் நோக்கில் இப்போது பொதுமக்களை அணுகி வருகின்றனர்.

“அகராதி உருவாக்கத்திற்குத் தேவையான முயற்சிகள் மற்றும் செயல்முறைகளை நாங்கள் மாணவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் மாணவர்களை மையமாகக் கொண்ட செயல்பாடுகளைத் திட்டமிடுகிறோம், இதனால் கற்றல் கைகூடும்” என்று சர்மா கூறினார்.

தற்போது, வெளியிடப்பட்ட அனைத்து தொகுதிகளும் கடினமாக கடின புத்தக வடிவத்தில் அணுகக்கூடியதாக உள்ளது.

ஒரு வருடத்திற்குள் டிஜிட்டல் பிரதிகள் உருவாக்க கல்லூரி நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்னும் ஒரு ஆண்டில் டிஜிட்டல் பிரதிகள் கிடைக்கும்.

கோஷாஷ்ரி என்ற திட்டம், இதன் கீழ் அகராதியை ஆன்லைனில் அணுகுவதற்கான இணையதளம் உருவாக்கப்படும். இது தற்போது சோதனை மற்றும் மேம்பாட்டில் உள்ள தனிப்பயனாக்கப்பட்ட மென்பொருளையும் கொண்டுள்ளது.

இது வரும் ஆண்டுகளில் அகராதி உருவாக்கும் செயல்முறையை துரிதப்படுத்தும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Sanskrit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment