Advertisment

கூடுதல் சுமை, சீர்திருத்தம் இல்லை... ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பயன் என்ன?

வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் முழு ஓய்வூதியத்திற்கான கட்டாய சேவையை விட குறைவானவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகியவை அதன் முக்கிய அம்சங்களாகும்.

author-image
WebDesk
New Update
In Unified Pension Scheme extra burden but no pushing back of the reform needle Tamil News

புதிய யு.பி.எஸ் மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (ஓ.பி.எஸ்) திரும்புவதற்கான பாதையை மூடுகிறது.

இளம் அரசு ஊழியர்கள் 50 சதவீதத்திற்கும் குறைவான சம்பளத்தை ஓய்வூதியமாக எதிர்பார்க்கும் நிலையில், தற்போதுள்ள திட்டத்தை புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துடன் (யு.பி.எஸ்) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் முழு ஓய்வூதியத்திற்கான கட்டாய சேவையை விட குறைவானவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகியவை அதன் முக்கிய அம்சங்களாகும்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: In Unified Pension Scheme, extra burden, but no pushing back of the reform needle

ஏப்ரல் 2023ல் அமைக்கப்பட்ட டி.வி சோமநாதன் குழு, ஜனவரி 2004 முதல் அரசுப் பணியில் சேர்பவர்களுக்கு அமல்படுத்தப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்.பி.எஸ்) அடிப்படைச் சீர்திருத்தங்களை முற்றிலுமாக புறக்கணிக்கவில்லை. மாறாக, ஊழியர்களின் குறைகளைத் தீர்க்க முயன்றது. அதில், மிக முக்கியமானது வருமானத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் குடும்பத்தின் பாதுகாப்பு ஆகும். ஓய்வூதியத் திட்டத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பை அடிப்படை ஊதியத்தில் 14 சதவீதத்திலிருந்து 18.5 சதவீதமாக உயர்த்துவதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. ஆனால், ஊழியர் பங்களிப்பு இன்றுவரை அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதமாக உள்ளது. இது நிச்சயமாக அரசாங்கத்திற்கு அதிக பணம் செலவைக் கொண்டு வரும். இதற்கான மத்திய அரசின் செலவு முதல் ஆண்டில் சுமார் ரூ.6,250 கோடி ஆக இருக்கும். 

ஆனால் இது உறுதிசெய்யப்பட்ட 50 சதவீத சம்பளத்திற்கு இடையே உள்ள இடைவெளியை ஓய்வூதியமாக நிரப்பும் தன்மை அதிகம் இருக்கும். மற்றும் ஓய்வூதிய நிதி மேலாளரால் இயல்புநிலை திட்டத்தில் முதலீடு செய்யும் போது கார்பஸ் (பணியாளர் மற்றும் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த சுருக்கம்) சேவையின் ஆண்டுகளில் அதனை சம்பாதித்திருக்கும்.

2004 ஆம் ஆண்டு என்.பி.எஸ் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற ஊழியர்களின் நிலுவைத் தொகைக்காக 800 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று மத்திய அரசு மதிப்பிடுகிறது.

இன்னும் தெளிவாக விவரிக்க வேண்டுமென்றால், யு.பி.எஸ் என்பது ஒரு குரல் அரசியல் தொகுதியை உருவாக்கும் அரசாங்க ஊழியர்களிடையே கொழுந்துவிட்டெறிந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் பிரதிபலிப்பாகும். பொதுத் தேர்தலின் முடிவும், ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வரும் மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் பெரும் சவாலை எதிர்கொள்ளும் வாய்ப்புகளும் அரசாங்கத்தை அதன் பணப்பையை கொஞ்சம் திறக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கலாம்.

மேலும், புதிய யு.பி.எஸ் மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (ஓ.பி.எஸ்) திரும்புவதற்கான பாதையை மூடுகிறது. பெரும்பாலான மாநிலங்கள் தங்கள் ஊழியர்களுக்காக புதிய யு.பி.எஸ் கட்டமைப்பை ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசே அதைச் செய்திருப்பதால் கூடுதல் செலவை அவர்கள் ஏற்கத் தயாராக இருக்கலாம். இதனால் மாநில அரசுகளின் நிதி நிலை பாதிக்கப்படும்.

எவ்வாறாயினும், யு.பி.எஸ் "நிச்சயமாக நிதி ரீதியாக மிகவும் விவேகமானது" என்று அமைச்சரவை செயலாளர் டி.வி.சோமநாதன் கூறியுள்ளார். "இது பங்களிப்பு நிதியளிப்பு திட்டத்தின் அதே கட்டமைப்பிற்குள் உள்ளது. அதுதான் முக்கியமான வேறுபாடு. ஓ.பி.எஸ் (பழைய ஓய்வூதியத் திட்டம்) என்பது நிதியில்லாத, பங்களிப்பு இல்லாத திட்டமாகும். இது நிதியளிக்கப்பட்ட, பங்களிப்புத் திட்டமாகும். இன்று (சனிக்கிழமை) செய்யப்பட்ட மாற்றங்களில் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஒரு உத்தரவாதத்தை வழங்குவது மற்றும் சந்தை சக்திகளின் மாறுபாடுகளுக்கு விஷயங்களை விட்டுவிடக்கூடாது. ஆனால் மற்றபடி யு.பி.எஸ் அமைப்பு இரண்டிலும் (ஓ.பி.எஸ் மற்றும் என்.பி.எஸ்) சிறந்த கூறுகளைக் கொண்டுள்ளது,” என்றார்.

ஓ.பி.எஸ்-இன் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வுக்குப் பிறகு வரையறுக்கப்பட்ட பலன்களைப் பெறுவார்கள். அதாவது, அவர்கள் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50 சதவிகிதம் மாதாந்திர ஓய்வூதியமாக பெறுவார்கள். ஜனவரி 2004-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களை உள்ளடக்கிய என்.பி.எஸ்-இன் கீழ், பங்களிப்புகள் வரையறுக்கப்படுகின்றன. ஆனால் நன்மைகள் சந்தையைப் பொறுத்து இருக்கும். கடந்த ஆண்டு, ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் என்.பி.எஸ்-லிருந்து ஓ.பி.எஸ்-க்கு திரும்பியது.

புதிய யு.பி.எஸ் ஆனது ஓ.பி.எஸ்-இன் உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியம் மற்றும் என்.பி.எஸ்-இன் வரையறுக்கப்பட்ட பங்களிப்புகளின் அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியம், பணவீக்க அட்டவணை, குடும்ப ஓய்வூதியம் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் போன்ற வடிவங்களில் ஓ.பி.எஸ் போன்ற அம்சங்களை யு.பி.எஸ்  கொண்டுள்ளது. என்.பி.எஸ்- இலிருந்து, யு.பி.எஸ் ஆனது பங்களிப்பு, முழு நிதியுதவி திட்டத்தின் அம்சத்தை உள்ளடக்கியுள்ளது.

23 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படும் உறுதியான ஓய்வூதியத்துடன், மாநிலங்களும் யு.பி.எஸ் திட்டத்தின் கீழ் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மாநில அரசின் நிதி மீதான கூடுதல் அழுத்தத்திற்கு எச்சரிக்கை தேவை.

ஜனவரி 2023 இல், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) கடந்த ஆண்டு ஓ.பி.எஸ்-க்கு திரும்புவதற்குத் தேர்வுசெய்த மாநிலங்களுக்கு அரசாங்க நிதிகளில் ஏற்படும் நெருக்கடி பற்றிய கவலைகளைக் கோடிட்டு காட்டின. என்.பி.எஸ்-க்கு பதிலாக ஓ.பி.எஸ் ஆனது எதிர்காலத்தில் பெரும் ஆபத்தை உண்டாக்கும் பொறுப்புகள் குவிவதற்கு வழிவகுக்கும் என்று மத்திய வங்கி கூறியுள்ளது.

2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டின்படி, 2022-23 ஆம் ஆண்டில் மாநிலங்கள் ஓய்வூதியச் செலவு 16 சதவீதம் அதிகரித்து ரூ 4,63,436 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டில் ரூ 3,99,813 கோடியாக இருந்தது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. என்.பி.எஸ்-ன் கீழ் ரூ.4 லட்சம் கோடியாக இருந்த நிலையில், ஓ.பி.எஸ்-ன் கீழ் ஓய்வூதியம் ரூ.17 லட்சம் கோடியைத் தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Central Government National Pension Scheme Pension Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment