Advertisment

டெல்லியில் இருந்து ஆறுதலான தகவல் - புதிய பாதிப்புகளை விட அதிகமாகும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, coronavirus news, covid 19, தமிழகத்தில் கொரோனா, இந்தியாவில் கொரோனா, india covid 19 cases, coronavirus india update, coronavirus cases today update, coronavirus cases, delhi corona news, delhi coronavirus news, gujarat coronavirus, maharashtra coronavirus, mumbai coronavirus, tamil nadu coronavirus cases, chennai coronavirus cases, tamil nadu haryana coronavirus cases,

coronavirus, coronavirus news, covid 19, தமிழகத்தில் கொரோனா, இந்தியாவில் கொரோனா, india covid 19 cases, coronavirus india update, coronavirus cases today update, coronavirus cases, delhi corona news, delhi coronavirus news, gujarat coronavirus, maharashtra coronavirus, mumbai coronavirus, tamil nadu coronavirus cases, chennai coronavirus cases, tamil nadu haryana coronavirus cases,

India COVID-19 Numbers: டெல்லியில் கடந்த எட்டு நாட்களில் ஏழு நாட்களுக்கு,  கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. புதன்கிழமை, இந்த இரண்டு எண்களின் வித்தியாசம் கிட்டத்தட்ட 2,000 ஆக அமைந்தது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,982 பேர். புதிய பாதிப்பு 2,033 பேர்.

Advertisment

ஜூன் 23 அன்று டெல்லியில் 3,947 புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டது முதல், ஒவ்வொரு நாளும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. உண்மையில், திங்களன்று, தலைநகரில் 1,379 புதிய பாதிப்புகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. மறுபுறம், இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு டெல்லி அதிக எண்ணிக்கையில் பதிவாகிக் கொண்டிருந்த பாதிப்பாளர்கள், இப்போது டிஸ்சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கின்றனர்.

டிக்டாக்கிற்கு மாற்று ஏது? இந்திய பயனர்களை திருப்திப்படுத்தும் வகையில் புதிய செயலிகள் இருக்குமா?

புதிய நோய்த்தொற்றுகளை விட தினசரி குணமடைவோர் எண்ணிக்கை கவனிக்க வேண்டிய முக்கியமான போக்கு. இந்த போக்கு இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்திருந்தால், இது நோய் உச்சத்தில் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். தொற்று பாதிப்புக்கு உள்ளாவதை விட அதிகமான மக்கள் நோயிலிருந்து மீண்டு வருகிறார்கள் என்று அர்த்தம். டெல்லியில், இந்த போக்கு சுமார் ஒரு வாரமாக நீடிக்கிறது, இருப்பினும் இந்த டிரெண்ட் குறைந்தது ஒரு நாளிலாவது மாற்றத்தை காண்கிறது. எந்தவொரு பெரிய மாநிலத்திலும் இந்த டிரெண்ட் நீடித்த மிக நீண்ட காலம் இதுவாகும். பிற மாநிலங்கள் பல சந்தர்ப்பங்களில் புதிய தொற்றுநோய்களைக் காட்டிலும் அதிகமான மீட்டெடுப்புகளைப் பதிவு செய்துள்ளன, ஆனால் இது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை.

publive-image

ராஜஸ்தான் ஒரு சிறந்த உதாரணமாகும். கடந்த ஒரு மாதத்தில், புதிய பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது அதிக மீட்டெடுப்புகள் பதிவாகியுள்ள பல நாட்கள் உள்ளன. ஆனால் அது ஒருபோதும் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை. ராஜஸ்தான் போன்ற மற்றொரு மாநிலமான மத்திய பிரதேசத்திலும் இதேபோன்றது, ஒரு பெரிய குணமடைதல் எண்ணிக்கை இருந்தபோதிலும், ஒவ்வொரு நாளும் புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், புதிய நோய்த்தொற்றுகள் தினசரி குணமடைதல் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளன, தேசியஅளவிலும் இதுதான் நடக்கிறது. மகாராஷ்டிரா முன்னர் பதிவு செய்யப்படாத குணமடைந்தோர் எண்ணிக்கையை ஒன்றாக இணைத்து, ஒரே நாளில் 8,000 மீட்டெடுப்புகளை அறிவித்தபோது, ஒட்டுமொத்தமாக நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை புதியதொற்று பாதிப்புகளின் எண்ணிக்கையை தாண்டியது. தற்போதைய நிலவரப்படி, தேசிய அளவில் தினசரி புதிய நோய்த்தொற்றுகளுக்கும் தினசரி மீட்டெடுப்புகளுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. எடுத்துக்காட்டாக, புதன்கிழமை, நாடு முழுவதும் 24,800 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டன, அதே நேரத்தில் 19,500 க்கும் மேற்பட்ட நபர்கள் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

publive-image

நாட்டில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 7.67 லட்சத்தைத் தாண்டியுள்ளது, அவற்றில் 4.76 லட்சத்துக்கும் அதிகமானோர் அல்லது சுமார் 62 சதவீதம் பேர் ஏற்கனவே நோயிலிருந்து மீண்டுள்ளனர். 21,000 க்கும் அதிகமானோர், அல்லது பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 2.75 சதவீதம் பேர் இதுவரை இறந்துள்ளனர்.

தபால் ஓட்டுகள் என்றால் என்ன? - இந்த விவகாரம் ஏன் தற்போது அரசியல் பூதாகரமாக வெடித்துள்ளது?

புதன்கிழமை, கர்நாடகாவில் 54 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது வழக்கத்திற்கு மாறாக இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை, ஒற்றை இலக்கங்களில் இறப்புகளை பதிவு செய்து வந்த மாநிலங்களுக்கு மத்தியில், அதிக இறப்பு எண்ணிக்கையாக பதிவு செய்யப்பட்டது. கர்நாடகா ஏற்கனவே அதிக தொற்றுக்களை வேகமாக பதிவு செய்து வரும் மாநிலமாகும். அதன் மொத்த 28,877 நோய்த்தொற்றுகளில் 60 சதவிகிதம் கடந்த ஒரு வாரத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை, இந்த நேரத்தில் அதிகரித்திருந்தாலும், பல மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இன்னும் குறைவாகவே இருந்தது.

புதன்கிழமை அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைக் கொண்ட மற்றொரு மாநிலமாக தமிழகம் இருந்தது. இதனை எண்ணிக்கை 64 ஆகும். ஆனால் கடந்த பத்து நாட்களாவது ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 இறப்புகளை அரசு பதிவு செய்து வருகிறது. பொதுவாக ஒவ்வொரு நாளும் 100 க்கும் அதிகமான இறப்புகளைக் கொண்ட மகாராஷ்டிராவால் அதிகபட்ச இறப்புகள் இன்னும் பதிவாகின்றன. தேசிய அளவில், தினசரி இறப்புகளின் எண்ணிக்கை இப்போது கிட்டத்தட்ட 500-ஐ நெருங்கியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment