Advertisment

காமராஜரின் 121-வது பிறந்தநாள்: நெருக்கடிகால தலைவர், ‘கிங்மேக்கர்’

காமராஜர் ஆட்சியின் கீழ், மெட்ராஸ் இந்தியாவின் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக மாறியது. இதனால், ஜவஹர்லால் நேருவிடமிருந்தும் அவருக்கு மரியாதை கிடைத்தது.

author-image
WebDesk
New Update
k kamaraj, biography, contributions, indira gandhi, congress, காமராஜரின் 120வது பிறந்தநாள், நெருக்கடிகால தலைவர், 'கிங்மேக்கர்' நினைவுகள், காங்கிரஸ், தமிழ்நாடு, பெருந்தலைவர் காமராஜர், inc, nehru, Madras State, Tamil Nadu, Tamil Indian Express, Express, Explained

1967-ம் ஆண்டு புது டெல்லியில் நடைபெற்ற அகில ஏ.ஐ.சி.சி கூட்டத்தில் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் காமராஜர். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

மெட்ராஸ் மாநிலத்தின் (இன்றைய தமிழ்நாடு) தலைவராகவும், இரண்டு முறை முதலமைச்சராகவும் இருந்தவர், மாநிலத்தின் கல்வி மற்றும் சுகாதாரத்தில் அதிகம் நிதி ஒதுக்கி செயல்படுத்திய பெருமைக்குரியவர். காமராஜர் ஆட்சியின் கீழ், மெட்ராஸ் இந்தியாவின் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக மாறியது. இதனால், ஜவஹர்லால் நேருவிடமிருந்தும் அவருக்கு மரியாதை கிடைத்தது.

Advertisment

சுதந்திரப் போராட்ட வீரரும் அரசியல்வாதியுமான குமாரசாமி காமராஜரின் 121-வது பிறந்தநாளை ஜூலை 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அவருடைய எளிமைக்காகவும் தனிப்பட்ட நேர்மைக்காகவும் மிகவும் பிரபலமானவர்.

ஜவஹர்லால் நேருவின் மரணத்திற்குப் பிறகு, இந்திய சோதனை காலங்களில் தேசிய காங்கிரஸின் தலைவராக காமராஜர் கட்சியை வழிநடத்தினார். அவர் பிரதமராக ஆகவில்லை என்றாலும், லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகிய இருவரும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.

1954 மற்றும் 1963 க்கு இடையில் மெட்ராஸ் மாகாணத்தின் (இன்றைய தமிழ்நாடு) தலைவராகவும், இரண்டு முறை முதலமைச்சராகவும் இருந்த அவர், மாநிலத்தின் நலத்திட்ட உள்கட்டமைப்பில், குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்தில் அதிக நிதி ஒதுக்கி செயல்படுத்தியவர் என்ற பெருமைக்குரியவர். காமராஜர் ஆட்சியின் கீழ், மெட்ராஸ் இந்தியாவின் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக மாறியது. அவருக்கு 1976-ல் இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருது அவருடைய மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.

காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 'கல்வி வளர்ச்சி நாளாக' கொண்டாடப்பட்டது.

எளிமையான தோற்றம் உயர்ந்த தலைவர்

காமராஜர் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட தலைவராகவும், மக்கள் தலைவராகவும் இருந்தார். ஒரு ஏழை நாடார் (பிற்படுத்தப்பட்ட சாதி) குடும்பத்திலிருந்து பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய காமராஜர், 11 வயதில் மதுரைக்கு அருகில் உள்ள தனது மாமாவின் மளிகைக் கடையில் வேலை செய்யத் தொடங்கினார். இந்த நேரத்தில், அவர் அரசியலிலும் சுதந்திரப் போராட்டத்திலும் ஆழ்ந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

அவரது தலைமுறையில் இருந்த பலரைப் போலவே, ஜாலியன் வாலாபாக் படுகொலை இளம் காமராஜரை தேசத்தின் முன்னேற்றத்திற்காக தீவிரமாக அர்ப்பணித்துக்கொள்ள உந்துதலாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் தொண்டராகத் தொடங்கி, காமராஜ் 1940-ல் கட்சியின் மாநிலப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார். 1954-ம் ஆண்டு வரை அந்த பதவியில் தொடர்ந்தார். 1954-ல் காங்கிரஸ் கட்சியால் சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். அவரது தலைமையில்தான் காங்கிரஸ் மாநிலத்தில் வலுவான கட்சி அமைப்பை உருவாக்கியது.

கல்விக்காகப் போராடிய பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்

சி ராஜகோபாலாச்சாரி, மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் பக்திமிக்க காந்தியவாதி 1952 இல் சென்னை மாகாணத்தின் முதலமைச்சரானார். இருப்பினும், 1954 வாக்கில், அவர் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் முரண்பட்டார். மேலும், மூத்த தலைவருக்கு பதிலாக இளையவர்களுக்கு பதவி அளிக்க கட்சி முடிவு செய்தது. கட்சியில் அடிமட்டம் வரை காமராஜரின் செல்வாக்கு இருந்தது.

1964-ல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, கே காமராஜர் (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

அரசியலில் உயர் மட்ட பதவிக்கு படித்த உயர் வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், அனேகமாக காமராஜர்தான் இந்தியாவில் ஆங்கிலம் பேசாத முதல் முதலமைச்சராக இருந்தார். இருப்பினும், அவர் முறையாக கல்வியைப் படிக்காவிட்டாலும், அவர் அதை தனது அறிவால் ஈடுசெய்தார். அவர் 1953-ல் ராஜாஜி அறிமுகப்படுத்திய சாதி அடிப்படையிலான மாற்றியமைக்கப்பட்ட தொடக்கக் கல்வித் திட்டத்தை நீக்கி, 'நிதி காரணங்களை' காரணம் காட்டி மாநிலத்தில் மூடப்பட்ட 6,000 பள்ளிகளை மீண்டும் திறந்தார். அவர் தனது பதவிக் காலத்தில் மேலும் 12,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளைக் கட்டினார்; 11-ம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார்.

பெரிய அளவில் மாணவர்கள் சேர்க்கை இயக்கங்களுக்குப் பிறகு, 1962-ம் ஆண்டில் மாநிலத்தின் மக்கள்தொகையில் 85 சதவீதம் பேர் இலவசக் கல்வியைப் பெற்றனர், மாநிலத்தின் மிகவும் ஏழ்மையான, மிகவும் பின்தங்கிய சமூகங்களில் கூட பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் சுவாரஸ்யமாக, இன்றைய மிகவும் பிரபலமான மத்திய உணவு திட்டம் காமராஜின் சிந்தனையில் உருவானது என்று கூறப்படுகிறது. அவர் ஒரு சுற்றுப்பயணத்தில், கால்நடைகளை வளர்க்கும் சிறுவன் ஒருவனைக் கண்டார். ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என்று சிறுவனிடம் கேட்டதற்கு, “நான் பள்ளிக்குச் சென்றால், சாப்பிட சாப்பாடு யார் தருவார்கள்” என்று சிறுவன் பதிலளித்தான். இதனால் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை காமராஜர் தொடங்கினார்.

காமராஜர் திட்டம்

இருப்பினும், நேருவின் மரணத்திற்குப் பிறகு, தேசிய அளவில் கட்சியைக் காப்பாற்றிய மூத்த காங்கிரஸ்காரராக காமராஜர் சிறந்து விளங்கினார்.

1963-ம் ஆண்டில், நேரு நோய்வாய்ப்பட்டிருந்தார்; இடைத்தேர்தலில் தோல்வி முதல் 1962-ல் சீனாவுக்கு எதிரான அவமானகரமான தோல்வி வரை காங்கிரஸ் நெருக்கடிக்கு மேல் நெருக்கடியை எதிர்கொண்டது - பத்தாண்டு கால ஆட்சிக்குப் பிறகு, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் சோர்வு ஏற்பட்டது. நேருவுக்குப் பிறகு யார்? என்ற கேள்வி அசுரத்தனமாக ஒலிக்கத் தொடங்கியது.

கட்சியை மீண்டும் வலுப்படுத்தவும், ஆட்சியைப் பலப்படுத்தவும் காமராஜர் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். அரசாங்கத்தில் உள்ள தலைவர்கள் தங்கள் அமைச்சர் அலுவலகங்களை விட்டு வெளியேறி கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், அதே நேரத்தில் அமைப்பில் உள்ளவர்கள் அரசாங்கத்தில் சேர வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார். தி.மு.க.வின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைத் தடுக்கும் வகையில், கட்சிக்காக பணியாற்றுவதற்காக அவரே முதல்வர் பதவியில் இருந்து விலக விரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 10, 1963-ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானம் காமராஜர் திட்டத்தை அங்கீகரித்தது. அனைத்து மத்திய அமைச்சர்கள் மற்றும் முதல்வர்கள் நேருவிடம் தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர். பின்னர், அவர் 6 மத்திய அமைச்சர்களின் ராஜினாமாக்களை ஏற்றுக்கொண்டார் - மெட்ராஸ், ஒரிசா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் காஷ்மீர் முதல்வர்கள் மொரார்ஜி தேசாய், எஸ்.கே. பாட்டீல், லால் பகதூர் சாஸ்திரி, ஜெகஜீவன் ராம், கே எல் ஸ்ரீமாலி மற்றும் பி கோபாலா ரெட்டி ஆகியோரின் கடிதங்களை ஏற்றுக்கொண்டார்.

அரசியல் விஞ்ஞானி ரஜினி கோத்தாரி தனது உன்னதமான படைப்பான பாலிடிக்ஸ் இன் இந்தியா (1970)-ல் எழுதுகிறார், “இந்தத் திட்டம், ஒருபுறம், பிரதமர் நேருவுக்கு முன்னோடியில்லாத வாய்ப்பை வழங்கியது. ஆனால், மறுபுறம், இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அரசாங்கத்துக்கு இணையாக கட்சியின் அமைப்பு, கொள்கைக்கு சம அந்தஸ்து அளிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நேருவுக்குப் பின் அதிகார வெற்றிடம்

பண்டிதர் ஜவஹர்லால் நேரு மே 27, 1964-ல் காலமானார். நேரு யாராலும் ஈடுசெய்ய முடியாதவர் என்பதை அறிவார்ந்த காமராஜ் அறிந்திருந்தார். மேலும், கட்சிக்கு அதிகாரத்தையும் அதன் லட்சியத் தலைவர்களையும் நிர்வகிக்க ஒரு புதிய தலைமை மாதிரி தேவைப்பட்டது. அவரது முதல் பணியானது, பிரதமர் அலுவலகத்தில் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதாகும். சர்ச்சைக்குரியவர் அல்லாத லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராகத் தேர்ந்தெடுப்பதற்குப் பின்னால் கட்சியைத் திரட்டுவதன் மூலம் அவர் திறமையாக நிர்வகித்தார்.

கட்சி அமைப்பிலும் அதன் மூலம் அரசாங்கத்திலும் வீரியத்தை ஊட்டுவது அவரது அடுத்த கட்ட நடவடிக்கையாக இருந்தது. அவர் கட்சியை ஒரு கூட்டாட்சி தலைமைத்துவ முறைக்கு வழிநடத்த முயன்றார். அதுல்யா கோஷ், என் சஞ்சீவ ரெட்டி, நிஜலிங்கப்பா மற்றும் எஸ்.கே. பாட்டீல் போன்ற சக்திவாய்ந்த மாநிலத் தலைவர்களின் நம்பிக்கையைப் பெற்றார்.

காமராஜரின் கூட்டுத் தலைமை குறித்த முக்கியத்துவம், நேருவையும் சாஸ்திரியையும் அடுத்தடுத்து இழந்த ஒரு கடினமான நேரத்தில் காங்கிரஸுக்கு உதவியது. இரண்டு போர்களும் வறட்சியும் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு இட்டுச் சென்றன.

மேலும், அனுபவம் வாய்ந்த மொரார்ஜி தேசாய்க்கு பதிலாக லால் பகதூர் சாஸ்திரிக்கு அடுத்து இந்திரா காந்தியை தேர்வு செய்வதில் காமராஜர் முக்கிய பங்கு வகித்தார்.

பின் வந்த ஆண்டுகள்

இருப்பினும், இந்திரா காந்தியின் கீழ், காமராஜரின் கூட்டுத் தலைமை மற்றும் ஒருமித்த கருத்தைக் கட்டியெழுப்பும் தொலைநோக்குப் பார்வையில் இருந்து விலகி, ஒரு தலைவரை மையமாகக் கொண்ட உயர் மட்ட தலைமையை நோக்கி காங்கிரஸ் நகர்ந்தது. இந்திராவின் ஆளுமை மெதுவாக கட்சி அமைப்பைக் கைப்பற்றத் தொடங்கியது. இந்திராவின் ஆதரவாளர்கள் மற்றும் பழைய பாதுகாவலர்கள் அல்லது சிண்டிகேட் இடையே உரசல் ஏற்பட்டது, இதன் விளைவாக 1969-ல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது.

காமராஜரின் செல்வாக்கு அதற்குள் குறைந்துவிட்டது - 1967 சட்டமன்றத் தேர்தலில் சென்னை மாநிலத்தில் காங்கிரஸை திமுக தோற்கடித்தது, காமராஜரும் தோல்வியடைந்தார். முதலமைச்சராக காமராஜரின் வழிகாட்டுதலின்றி, 1965-ல் மாநிலத்தை உலுக்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், 1965-66 உணவுப் பற்றாக்குறையையும் கையாள்வதில் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்தது.

காமராஜ் தமிழ்நாட்டின் இந்திய தேசிய காங்கிரஸ் (அமைப்பு) கட்சியின் தலைவரானார். ஆனால், தேர்தல் வெற்றி பின்தொடரவில்லை. இந்திராவை தோற்கடிக்கும் நம்பிக்கை இருந்தபோதிலும், இந்திராவின் இந்திய தேசிய காங்கிரஸ் (கோரிக்கை) உடன் போட்டியிடத் தவறிய போதிலும், 1971-ல் கட்சி மோசமாக இருந்தது. காமராஜர் 1975-ல் தனது 72-வது வயதில் காலமானார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Kamarajar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment