மனிதனால் உருவாக்கப்பட்ட 2வது பெரிய மீத்தேன் கசிவின் கண்டுபிடிப்புகள்: என்ன நடந்தது? சுற்றுச்சூழலில் அதன் தாக்கம் என்ன?

கஜகஸ்தானில் என்ன நடந்தது என்பதையும், அந்தச் சம்பவத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு என்னவாக இருக்கும் என்பதையும் இங்கே பார்க்கலாம்.

கஜகஸ்தானில் என்ன நடந்தது என்பதையும், அந்தச் சம்பவத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு என்னவாக இருக்கும் என்பதையும் இங்கே பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Kazakhstan

Scientists release findings of second biggest man-made methane leak: What happened; impact on the environment

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

தென்மேற்கு கஜகஸ்தானின் மங்கிஸ்டாவ் பகுதியில் உள்ள ஒரு எண்ணெய் கிணற்றில், கடந்த ஆண்டு நடந்த ஒரு துளையிடும் சம்பவம் வரலாற்றில் மிக மோசமான மீத்தேன் கசிவுக்கு வழிவகுத்தது, என்று சமீபத்தில் விஞ்ஞானிகள் வெளிப்படுத்தினர்.

Advertisment

இது மனிதனால் உருவாக்கப்பட்ட இரண்டாவது பெரிய மீத்தேன் கசிவாக இருக்கலாம்.

மீத்தேன் ஒரு சக்திவாய்ந்த பசுமை இல்ல வாயு - இது வளிமண்டலத்தில் வெப்பத்தை சிக்க வைத்து புவி வெப்பமடைதலை அதிகரிக்கிறது. புதைபடிவ எரிபொருள் செயல்பாடுகளிலிருந்து கசிவுகள், மீத்தேன் வெளியேற்றத்தின் மிகப்பெரிய ஆதாரமாகும். மனிதனால் ஏற்படும் மீத்தேன் உமிழ்வுகளில் சுமார் 40%இத்தகைய செயல்பாடுகளால் வருகிறது.

கஜகஸ்தானில் என்ன நடந்தது என்பதையும், அந்தச் சம்பவத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு என்னவாக இருக்கும் என்பதையும் இங்கே பார்க்கலாம்.

என்ன நடந்தது?

Advertisment
Advertisements

பெட்ரோலியகிணற்றில் துளையிடும் சம்பவம், ஜூன் மற்றும் டிசம்பர் 2023 க்கு இடையில் தீயை ஏற்படுத்தியது. 127,000 டன் மீத்தேன் வளிமண்டலத்தில் வெளியிடப்பட்டது.

ஐந்து செயற்கைக்கோள் கருவிகளுக்குப் பின்னால் இருந்த விஞ்ஞானிகள் ஆறு மாதங்களில் 115 முறை கசிவைக் கண்டறிந்தது, விண்வெளியில் இருந்து வாயுக் குவியலைக் காண முடிந்தது. தற்போது கசிவு நிறுத்தப்பட்டு, கிணறு தற்போது சிமென்ட் மூலம் மூடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை முதலில் தெரிவித்த பிபிசியின் கூற்றுப்படி, .நா.வின் சர்வதேச மீத்தேன் உமிழ்வு ஆய்வகத்தின் தலைவர் மன்ஃப்ரெடி கால்டகிரோன், கசிவின் அளவு மற்றும் கால அளவு "அசாதாரணமானது" மற்றும் "மிகப் பெரியது" என்று கூறினார்.

பிரெஞ்சு புவி பகுப்பாய்வு நிறுவனமான கெய்ரோஸ் இந்த கசிவை ஆராய்ந்து அதன் கண்டுபிடிப்புகளை கடந்த மாதம் வெளியிட்டது. லைடனில் உள்ள நெதர்லாந்து விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஸ்பெயினின் வலென்சியாவின் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முடிவுகளை நிறுவனம் மதிப்பாய்வு செய்தது.

கஜகஸ்தானை தளமாகக் கொண்ட புசாச்சி நெஃப்ட் கிணற்றின் உரிமையாளர்களுக்கு 350 மில்லியன் டெங்கே ($774,000) அபராதம் விதிக்கப்படும் என பிபிசி தெரிவித்துள்ளது.

கசிவால் சுற்றுச்சூழல் பாதிப்பு என்னவாக இருக்கும்?

அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின்Greenhouse Gas Equivalency Calculator படி, இதுபோன்ற கசிவின் சுற்றுச்சூழல் பாதிப்பு ஒரு வருடத்திற்கு 717,000பெட்ரோல் கார்களை ஓட்டுவதற்கு ஒப்பிடத்தக்கது, என்று பிபிசி தெரிவித்துள்ளது.

கார்பன் டை ஆக்சைடுக்கு அடுத்தபடியாக மீத்தேன் காலநிலை மாற்றத்தின் மிகப்பெரிய இயக்கிகளில் ஒன்றாகும். வளிமண்டலத்தில் அதன் செறிவு கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் இருமடங்கு அதிகமாக உள்ளது, தொழில்துறை புரட்சிக்குப் பின்னர் உலக வெப்பநிலையில் ஏறக்குறைய 30 சதவீத உயர்வுக்கு இது காரணமாகும்.

கஜகஸ்தான் மீத்தேன் கசிவு, எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இருந்து கசிவுகளின் நீண்ட பட்டியலில் சமீபத்திய கூடுதலாக உள்ளது.

.நா. சுற்றுச்சூழல் திட்டம், சூப்பர்-எமிட்டர் ஈவன்ட்ஸ் (super-emitter events) எனப்படும் பாரிய மீத்தேன் கசிவுகள், அமெரிக்கா முதல் துர்க்மெனிஸ்தான் வரை உலகெங்கிலும் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் நடைபெற்று வருகின்றன, என்று கூறியது.

இந்த கசிவுகளில் பெரும்பாலானவை உபகரணங்கள் செயலிழப்பதால் ஏற்படுகின்றன.

குறிப்பிடத்தக்க வகையில், 2023வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயு செறிவுகளின் அதிகபட்ச அளவைக் கண்டது. மீத்தேன் செறிவு ஒரு பில்லியனுக்கு 11 parts per billion அதிகரித்தது.

சர்வதேச ஆற்றல் முகமையின் (International Energy Agency) கூற்றுப்படி, மீத்தேன் உமிழ்வுகளில் விரைவான மற்றும் நீடித்த குறைப்புக்கள், வரும் காலத்தில் உள்ள வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தவும் காற்றின் தரத்தை மேம்படுத்தவும் தேவைப்படுகின்றன.

தொழில்துறைக்கு முந்தைய காலங்களை விட சராசரி உலக வெப்பநிலை ஏற்கனவே குறைந்தது 1.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது.

2015 பாரிஸ் உடன்படிக்கையில், நிர்ணயிக்கப்பட்ட 1.5 டிகிரி மற்றும் 2 டிகிரி செல்சியஸ் வரம்புகளை கிரகம் மீறாமல் இருப்பதை உறுதிப்படுத்த, மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்துவது உட்பட சில நடவடிக்கைகளை நாடுகள் அவசரமாக செயல்படுத்த வேண்டும்.

Read In English: Scientists release findings of second biggest man-made methane leak: What happened; impact on the environment

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“

Climate Change

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: