Advertisment

அமித்ஷா தலைமையில் அலுவல் மொழிக் குழு பரிந்துரை; இந்தி திணிப்பு சர்ச்சை

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக் குழு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிட ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அது இந்தி பேசாத மாநிலங்களில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அலுவல் மொழிக் குழு என்றால் என்ன? இந்த குழு என்ன பரிந்துரை செய்தது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hindi imposition row, Language panel report, Amit Shah language report, India language report, அலுவல் மொழிக் குழு, அமித்ஷா, மத்திய அரசு, இந்தி திணிப்பு சர்ச்சை, Droupadi Murmu, Indian Express Tamil

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக் குழுவின் 11வது தொகுதி அறிக்கை கடந்த மாதம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிக்கும் மத்திய அரசின் முயற்சி எனக் கூறி தமிழ்நாடு மற்றும் கேரள முதல்வர்களிடமிருந்து கோபமான எதிர்வினைகளைப் பெற்றுள்ளது.

Advertisment

இருப்பினும், இந்த குழுவின் உறுப்பினர்கள், அவர்களுடைய எதிர்வினை தவறான இடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டனர். ஏனெனில், அறிக்கையின் உள்ளடக்கங்கள் பற்றிய ஊடக செய்திகள் தவறானவை என்று கூறுகின்றனர். குடியரசுத் தலைவைடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை இரகசியமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக் குழு என்பது என்ன?

அலுவல் மொழிச் சட்டம் 1963-ன் பிரிவு 4-இன் கீழ் 1976-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் அலுவல் மொழிக்கான குழு அமைக்கப்பட்டது. இந்த சட்டத்தின் பிரிவு 4 கூறுவதாவது: “அலுவலக மொழிக்கான ஒரு குழு அமைக்கப்படும், அதற்கான தீர்மானம் ஏதேனும் ஒன்றில் மாற்றப்படும். குடியரசுத் தலைவரின் முந்தைய ஒப்புதலுடன் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்ட நாடாளுமன்றம்”

“அலுவல் மொழிச் சட்டம், 1963 இன் பிரிவு 4 இன் கீழ் 1976 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் அலுவல் மொழிக்கான குழு அமைக்கப்பட்டது. இந்த சட்டத்தின் பிரிவு 4வது கூறுகிறது, “அலுவல் மொழி குறித்து ஒரு குழு அமைக்கப்படும். குடியரசுத் தலைவரின் முந்தைய அனுமதியுடன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.” என்று கூறுகிறது.

இந்தக் குழுவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைமை தாங்குகிறார். மேலும், 1963-ம் ஆண்டு சட்டத்தின் விதிகளின்படி, 30 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது - மக்களவையில் இருந்து 20 எம்.பி.க்கள் மற்றும் ராஜ்யசபாவில் இருந்து 10 எம்.பி.க்கள். அலுவலக ரீதியான நோக்கங்களுக்காக இந்தி மொழியைப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மறுபரிசீலனை செய்வதும், அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க பரிந்துரை செய்வதும் இந்த குழுவின் பணியாகும்.

இந்த குழுவின் பெயர் சிறிது தவறாக புரிந்துகொள்ள வழிவகுக்கிறது. ஏனென்றால், மற்ற நாடாளுமன்ற குழுக்களைப் போலல்லாமல், அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்படுகிறது. மேலும், அது, நாடாளுமன்ற குழுக்களைப் போல, நாடாளுமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிப்பதில்லை. 1963-ம் ஆண்டு சட்டத்தின் விதிகளின் கீழ், இந்த குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கிறது. அவர் இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும் வைக்க வேண்டும். மேலும், அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்ப வேண்டும்.

அமித்ஷா குழு சமீபத்திய (2021) அறிக்கையில் என்ன பரிந்துரை செய்துள்ளது?

அமித்ஷா மற்றும் குழுவின் மற்ற உறுப்பினர்களால் செப்டம்பர் 9-ம் தேதி குடியரசுத் தலைவர் முர்முவிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கங்கள் பொது களத்தில் இல்லை. இந்தி மொழி பேசும் மாநிலங்களில் உள்ள ஐ.ஐ.டி-கள், ஐ.ஐ.எம்-கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் இந்தி மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பது உட்பட சுமார் 100 பரிந்துரைகளை கமிட்டி செய்துள்ளதாக கமிட்டி தொடர்பான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த குழு பா.ஜ.க-வின் மிகப்பெரிய பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளது - பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் - மேலும் பி.ஜே.டி, காங்கிரஸ், ஜே.டி(யு), சிவசேனா, எல்.ஜே.பி, ஆம் ஆத்மி மற்றும் டி.டி.பி ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் அடங்கியுள்ளனர்.

“நிர்வாகத்தில் தொடர்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும். மேலும், பாடத்திட்டத்தை இந்தியில் கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அது கட்டாயமில்லை. உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், பீகார், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள கீழ் நீதிமன்றங்கள் ஏற்கனவே இந்தி மொழியைப் பயன்படுத்துகின்றன. பிற மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள், ஆங்கிலம் அல்லது ஒரு பிராந்திய மொழியில் பதிவுசெய்யப்பட்டால், இந்தியில் மொழிபெயர்ப்புகள் கிடைக்கச் செய்ய வேண்டும். ஏனெனில், பிற மாநிலங்களின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பெரும்பாலும் தீர்ப்புகளில் மேற்கோள் காட்டப்படுகின்றன” என்று ஒரு வட்டாரம் அறிக்கையில் இந்த பரிந்துரைகள் உள்ளதாகக் குறிப்பிடுகிறது.

இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியைப் பயன்படுத்தாத மத்திய அரசில் உள்ள அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்கள் குறித்து இந்தக் குழு தீவிரமான பார்வையை எடுத்ததாக அறியப்படுகிறது. இந்தி மொழியைப் பயன்படுத்தத் தயங்குவது அவர்களின் வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையில் (APAR) பிரதிபலிக்கும் என்று மாநில அரசுகள் அதிகாரிகளை எச்சரிக்க வேண்டும் என்று குழு விரும்புகிறது.

“அரசின் அதிகாரப்பூர்வாமான தகவல்தொடர்புகளில் இந்தி மொழி ஊக்குவிக்கப்படுவதைப் மேற்பார்வை செய்வது குழுவின் பொறுப்பும் பங்கும் ஆகும். அதற்கான பரிந்துரைகளும் உள்ளன. கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள், ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், அரசு மற்றும் அதன் துறைகளால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் உள்ளிட்ட தகவல்தொடர்புகள் இந்தியில் இருக்க வேண்டும்.” என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“அரசின் அதிகாரப்பூர்வ கடிதங்கள் மற்றும் அறிவிப்புகளில் இந்தி மொழியை எளிமையாக்க குறிப்பிட்ட திட்டங்கள் உள்ளன என்று ஒரு வட்டாரம் கூறியது. இந்த பரிந்துரைகளின் முக்கிய அம்சம் என்னவென்றால், அரசின் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் ஆங்கில மொழியின் பயன்பாட்டைக் குறைக்கவும், இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்கவும் வேண்டும் அதற்காக முயற்சி செய்யப்பட வேண்டும்” என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. “பல அரசு வேலைகளில் இந்தி அறிவு கட்டாயமாக இருக்கும்” என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இந்தப் பரிந்துரைகள் நாடு முழுவதும் அனைத்து மாநில அரசுகள், மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளுக்கானதா?

மாநிலங்களுக்கு இல்லை என்று ஒரு மூத்த பி.ஜே/டி எம்.பி-யும் இந்த குழுவின் துணைத் தலைவருமான பர்த்ருஹரி மஹ்தாப் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். “கேரளா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்களின் எதிர்வினை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஏனெனில், குழுவின் பரிந்துரைகளில் வெளிவந்த சில அறிக்கைகள் குழப்பமானதாக இருக்கிறது” என்று மஹ்தாப் கூறினார்.

மஹ்தாபின் கருத்துப்படி, “தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் அலுவல் மொழிச் சட்டம், 1963 விதிகள் மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 1976 ஆகியவற்றின் படி விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டம் 'ஏ' வகை மாநிலங்களில் மட்டுமே இந்தி மொழி செயல்படுத்தப்படுகிறது.

இந்த விதிகளின்படி, ஏ வகை மாநிலங்களின் வரிசையில் உள்ள பீகார், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், உத்தரகண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும், டெல்லி மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் யூனியன் பிரதேசங்களும் அடங்கியுள்ளன. பி வகை மாநிலங்களில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மற்றும் சண்டிகர், டாமன் மற்றும் டையூ மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது. இந்தி மொழி பயன்பாடு 65 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள பிற மாநிலங்கள், 'சி' வகையீன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.

‘ஏ’ வகை மாநிலங்களில் இந்தி மொழி 100 சதவீதம் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்த குழு பரிந்துரைத்துள்ளது. ஐ.ஐ.டி., மத்திய பல்கலைக்கழகங்களில், 'ஏ' வகை மாநிலங்களில் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் பயிற்று மொழி இந்தி மொழியாகவும் பிற மாநிலங்களில் பிராந்திய மொழியை பயன்படுத்தவும், இந்த குழு பரிந்துரைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அரசு துறைகளில் இந்தி மொழியைப் பயன்படுத்துவது குறித்து மஹ்தாப் கூறியதாவது: பாதுகாப்பு, உள்துறை போன்ற அமைச்சகங்களில் இந்தி பயன்பாடு 100 சதவீதம் உள்ளது. ஆனால், கல்வி அமைச்சகம் அந்த நிலைக்கு இன்னும் வரவில்லை. மொழியின் பயன்பாட்டை மதிப்பிடுவதற்கு கமிட்டி சில அளவுருக்களைக் கொண்டிருந்தது. டெல்லி பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, பி.எச்.யூ, மற்றும் ஏ.எம்.யூ உள்ளிட்ட பல மத்திய பல்கலைக்கழகங்களில், 100 சதவீதமாக இருந்திருக்க வேண்டிய பயன்பாடு 25-35 சதவீதமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது.

இதுபோன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்படுவது இது முதல் முறையா?

இந்திய குடியரசின் முதல் 15 ஆண்டுகளுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் அரசின் அலுவலக மொழிகளாகப் பயன்படுத்த வேண்டும் என்று அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் முடிவு செய்தனர். ஆனால், தெற்கில் எழுந்த தீவிரமான இந்தி எதிர்ப்பு போராட்டங்களை அடுத்து, ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்தது. 1965 ஆம் ஆண்டுக்குப் பிறகும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டது. ஜனவரி 18, 1968 அன்று, இந்திய அரசு அலுவலக நோக்கங்களுக்காக இந்தி மொழியைப் பயன்படுத்துவதை அதிகரிக்க ஒரு விரிவான திட்டத்தை உருவாக்குவதற்கான அதிகாரப்பூர்வ மொழித் தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

அரசியலமைப்பின் 351-வது பிரிவின் மூலம் இந்தியை தீவிரமாக ஊக்குவிப்பதன் மூலம், அரசின் அலுவலக ரீதியான தகவல்தொடர்புகளில் இந்தி பயன்பாட்டை மதிப்பாய்வு செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் அலுவல் மொழிக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் முதல் அறிக்கை 1987ல் சமர்ப்பிக்கப்பட்டது. 2011-ல் அப்போதைய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் தலைமையிலான குழு சமர்ப்பித்த ஒன்பதாவது அறிக்கை, அரசு அலுவலகங்களில் கணினிகளில் இந்தி பயன்பாட்டை அதிகரிப்பதற்கான பரிந்துரைகள் உட்பட 117 பரிந்துரைகளை அளித்தது.

“அனைத்து அமைச்சகங்கள் / துறைகள் உடனடியாக இருமொழி கணினி வசதிகளை வழங்க வேண்டும். அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்… அதனால், அவர்கள் இந்தியிலும் பணியாற்ற முடியும்…” என்று ப சிதம்பரம் தலைமையிலான குழு கூறியது. இந்த பரிந்துரைகள் விமர்சிக்கப்பட்டன, மேலும் தமிழகத்தில் குறிப்பாக "இந்தி திணிப்பு" குறித்து கவலை தெரிவிக்கப்பட்டன.

தென் மாநிலங்களில் இந்தி இதயப் பகுதியின் கட்சியாகக் கருதப்படும் பி.ஜே.பி., மத்தியில் ஆட்சியில் இருப்பதால், இந்தியை ஊக்குவிக்கும் முயற்சிகள், இந்தி திணிக்கப்பட்டதாகக் கூறப்படும் பல தசாப்தங்களாகப் பழமையான கவலைகளை மீட்டெடுத்துள்ளன. இந்தியில் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் பதிலளித்தது தொடர்பாக, நிதியமைச்சகம் மற்றும் எதிர்க்கட்சிகள், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக கர்நாடகாவில் இந்தி மொழிப் பலகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பயன்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்தி மற்றும் பிற பிராந்திய மொழிகளில் கற்பிப்பது பற்றி புதிய கல்விக் கொள்கை என்ன சொல்கிறது?

2020 ஆம் ஆண்டில் புதிய தேசிய கல்விக் கொள்கையின் அறிவிப்பும் இந்த பிரச்சினையில் சர்ச்சையைத் தூண்டியுள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினர்; இருப்பினும், பிராந்திய மொழிகளை மட்டுமே ஊக்குவிப்பதாக மையம் கூறியது. 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு வரை தாய்மொழி அல்லது பிராந்திய மொழியே விருப்பமான" பயிற்று மொழியாக இருக்கும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Amit Shah Hindi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment